தமிழக வெற்றி கழக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால் மீண்டும் பவர் கிடைக்கும் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார்.
விஜய் நடிப்பதை விட்டு அரசியலில் களமிறங்கி தவெகவை தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆனால் இதுவரை பெரிய அளவில் அரசியல் பற்றி பேசாத விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போது தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
பாரம்பரியமுள்ள காங்கிரஸ், மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து தேய்ந்து விட்டதாக விமர்சித்த அவர், விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டால் மீண்டும் பவருக்கு வரும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ், திமுகவிடம் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அவ்வப்போது காங்கிரஸ் நிர்வாகிகளும் பொதுவெளியிலேயே பேசி வருகின்றனர். இதற்கு திமுக தரப்பிலும் இசைவு கொடுப்பதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர்களும் விஜய் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், தவெக கூட்டணியில் இணைய காங்கிரசுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்த விஜய்யின் தந்தை பேச்சு அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
