Close Menu
    What's Hot

    கூல் ட்ரிங்க்ஸ், சிப்ஸ் சாப்பிடுவது சிகரெட் பிடிப்பதற்குச் சமம்!. அதிரவைக்கும் புதிய ஆய்வு!.

    ஐபிஎல் 2026!. இரு கட்டங்களாக வெளியாகும் அட்டவணை!. தள்ளிப்போகும் சென்னை, கொல்கத்தா போட்டிகள்?

    மலையாள மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது!. ‘கேரளம்’ என மாற்றம்!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் 218 விஏஓக்கள் நேரடி நியமனத்துக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
    தமிழ்நாடு

    தமிழகத்தில் 218 விஏஓக்கள் நேரடி நியமனத்துக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tn order
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் 218 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சி-க்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழக கிராம நிர்வாக அலுவலர் சங்க பொதுச்செயலாளர் அருள்ராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அகமது ஃபயஸ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப செப்.1 முதல் 15-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட அளவில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கிய பிறகு காலியுள்ள கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பலாம்.

    ஏற்கெனவே கிராம நிர்வாக அலுவலர்களின் முதுநிலை பட்டியலை கருத்தில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த தேதி அடிப்படையாகக் கொண்டு மாவட்ட மாறுதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவது தவறு எனக் கூறி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தச் சூழலில் 218 காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்ப முடிவு செய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அரசு பட்டியலை அனுப்பியுள்ளது. இதனால் இடமாறுதலுக்காக பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

    218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை மாவட்ட பணியிட மாறுதல் மூலம் நிரப்பாமல் நேரடி நியமனம் மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சி-க்கு இடைக்கால தடை விதித்தும், தகுதி வாய்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாறுதல் கோரிய மனுக்களை பரிசீலித்து அவர்களுக்கு உரிய இடங்களில் இடமாறுதல் வழங்கிய பிறகு நேரடி முறையில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை நீதிபதி குமரேஷ்பாபு விசாரித்தார். பின்னர் நீதிபதி, மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நேரடி முறையில் டிஎன்பிஎஸ்சி நிரப்ப தடை விதிக்கப்படுகிறது. மனு தொடர்பாக வருவாய் துறை ஆணையர், டிஎன்பிஎஸ்பி தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ.14-க்கு தள்ளிவைத்தார்.

    high court#case
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்க்கு கூட்டணி அதிகாரம் முதல் திமுகவுக்கு கண்டனம் வரை – தவெக சிறப்பு பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள்
    Next Article தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது: நாஞ்சில் சம்பத்
    Editor TN Talks

    Related Posts

    இப்போவே கண்ண கட்டுதே!. தமிழகத்தில் ஆரம்பமான வெப்ப அலை!. ஈரோட்டில் சதம் அடித்த வெயில்!

    February 24, 2026

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்தது என்ன?. பல ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த ஓபிஎஸ்!

    February 24, 2026

    அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000!. புதிய தேர்தல் வாக்குறுதியளித்த இபிஎஸ்!

    February 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கூல் ட்ரிங்க்ஸ், சிப்ஸ் சாப்பிடுவது சிகரெட் பிடிப்பதற்குச் சமம்!. அதிரவைக்கும் புதிய ஆய்வு!.

    ஐபிஎல் 2026!. இரு கட்டங்களாக வெளியாகும் அட்டவணை!. தள்ளிப்போகும் சென்னை, கொல்கத்தா போட்டிகள்?

    மலையாள மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது!. ‘கேரளம்’ என மாற்றம்!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவூர் ரானாவிற்கு செக்!. குடியுரிமையை ரத்து செய்ய கனடா அதிரடி முடிவு!.

    ரூ.1.5 கோடிக்காக கணவரை காதலிக்கு தாரை வார்த்த மனைவி!. கோர்ட்டில் பரபரப்பு!

    Trending Posts

    கூல் ட்ரிங்க்ஸ், சிப்ஸ் சாப்பிடுவது சிகரெட் பிடிப்பதற்குச் சமம்!. அதிரவைக்கும் புதிய ஆய்வு!.

    February 24, 2026

    ஐபிஎல் 2026!. இரு கட்டங்களாக வெளியாகும் அட்டவணை!. தள்ளிப்போகும் சென்னை, கொல்கத்தா போட்டிகள்?

    February 24, 2026

    மலையாள மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது!. ‘கேரளம்’ என மாற்றம்!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    February 24, 2026

    மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவூர் ரானாவிற்கு செக்!. குடியுரிமையை ரத்து செய்ய கனடா அதிரடி முடிவு!.

    February 24, 2026

    ரூ.1.5 கோடிக்காக கணவரை காதலிக்கு தாரை வார்த்த மனைவி!. கோர்ட்டில் பரபரப்பு!

    February 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.