தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு இன்று கோட்டை வளாகத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கியது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இரண்டாவது நாளாக இன்றும் முதல்வர் விஜய் அவர்கள் ஸ்டைலான கோட்-சூட் உடையில் பேரவைக்கு வருகை தந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நடிகர் என்பதையும் தாண்டி, ஒரு மாநிலத்தின் முதல்வராகத் தனது தனித்துவமான தோற்றத்தின் மூலம் அவர் சட்டமன்றத்தில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தைப் பதிவு செய்து வருகிறார்.

இன்றைய கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகியும் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான JCD பிரபாகர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் துணை தலைவராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வாகினர். சபாநாயகர் பதவியை அலங்கரிக்கும் JCD பிரபாகர், தனது நீண்டகால அரசியல் அனுபவத்தின் மூலம் அவையை நடுநிலையோடு வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மரபுப்படி அவை முன்னவர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் இணைந்து JCD பிரபாகரை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து, மலர்க்கொத்து வழங்கி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version