திருவள்ளூர் அடுத்த ஒதப்பை பகுதியில் ஸ்ரீபெருமந்தூர், ஒரகடம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகளை தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது.  இந்தக் கிடங்கில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கிடங்கில் இருந்த கழிவுகள் தீப் பற்றி மளமளவென எரிந்துள்ளன. இதுகுறித்து காவல் பணியில் இருந்த பாதுகாவலர்கள் பென்னாலூர்பேட்டை காவல்துறைக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர், திருநின்றவூர்,மற்றும் தேர்வாய் கண்டிகை  ஆகிய மூன்று பகுதியில் இருந்து வந்த  தீயணைப்பு வீரர்கள்  தீயை போராடி அணைத்தனர். தீ விபத்து தொடர்பாக பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version