தமிழ் புத்தாண்டையொட்டி, இந்த ஆண்டு மகிழ்ச்சியும், வெற்றியும் ஆரோக்கியமும் நிறைந்திருக்க தான் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைத் திருநாளை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், தனது வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார். அதில், “உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
https://x.com/narendramodi/status/2043875889889296840?
இந்தப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்,” எனத் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் தனித்துவமான பண்பாட்டை அங்கீகரிக்கும் விதமாக பிரதமரின் இந்த வாழ்த்துச் செய்தி அமைந்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வாழ்த்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
