நீலகிரி மாவட்டத்தின் அடர்ந்த முதுமலை புலிகள் காப்பகத்தின் நடுவே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தெப்பக்காடு யானைகள் முகாம், சுற்றுலாப் பயணிகளின் வருகையாலும் அவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தாலும் களைகட்டி  வருகிறது.

ஆசியாவிலேயே மிகவும் பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாகத் திகழும் இந்தத் தெப்பக்காடு முகாமில், பல தலைமுறைகளாக யானைகளைப் பராமரித்து வரும் பாகன்கள் தங்களின் சொந்தக் குழந்தைகள் போல இந்த பிரம்மாண்ட உயிரினங்களை அன்போடு வளர்த்து, அவற்றுக்கு உணவு ஊட்டிப் பராமரிக்கும் உன்னதப் பிணைப்பைக் காண்போரைக் நெகிழச் செய்கிறது.

கம்பீரமான இந்த வளர்ப்பு யானைகள், காட்டின் இயற்கை ஒலிகளுக்கு இடையே தங்களுக்கு வழங்கப்படும் சத்துணவு உருண்டைகளை மிகவும் சுவைத்து ருசித்து உண்பதை, உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களின் குடும்பத்தினருடன் வியப்புடனும் அலாதி பிரியத்துடனும் பார்த்து ரசித்து மகிழ்கின்றனர்.

அடர்ந்த வனப்பகுதியின் பசுமைக்கு நடுவே, குழந்தைகளைக் கவரும் வண்ணமாய் யானைகளின் குறும்புத்தனங்களையும் அவற்றின் கம்பீர வாழ்வியலையும் நேரில் பார்த்து அனுபவிக்கும் இந்த ஒரு அரிய வாய்ப்பு, இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு மறக்க முடியாத மாயாஜால அனுபவமாக மாறிப் போயுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version