Author: Editor web1

ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார். இதுகுறித்து மக்கள் மாளிகை விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆளுநரின் மைக் பலமுறை அணைக்கப்பட்டதாகவும், ஆளுநர் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் ஆதாரமற்ற தவறான பல தகவல்கள் இருந்ததாகவும், மக்கள் பிரச்சனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் உள்ளதாகவும், 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் தமிழ்நாடு 4வது பெரிய மாநிலமாக இருந்ததாகவும், தற்போது 6வது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுவதாகவும் கூறப்பட்டுள்ளதாக மக்கள் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55%, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் 33% அதிகரித்த போதிலும், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புப் பிரச்னைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் உள்பட…

Read More

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பாக மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்கு வந்து சென்றதாக குறிப்பிட்டார். சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடப்படுவது தான் மரபு என்று தெரிவித்த அவர், தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆளுநரிடம் எடுத்துக் கூறியும் அதனை அவர் ஏற்க மறுப்பதாக கூறினார். தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்குமாறு ஆளுநரிடம் பேரவைத் தலைவர் அப்பாவு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டும், அதனை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறியதாக அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார். பின்னர், ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கையில், மைக் அணைக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது தவறானது என்றும் எந்த மைக்கையும் அணைக்க வேண்டிய அவசியம் இல்லை…

Read More

2026ம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். சட்டப்பேரவையின் மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சட்டப்பேரவைக்கு இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது. பின்னர், தேசிய கீதம் இசைக்கப்படும் என்று ஆளுநர் காத்திருந்தார். ஆனால், தேசிய கீதம் இசைக்கப்படாமல், உரையைத் தொடங்குமாறு பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து தமிழக அரசு தயாரித்த உரையைப் படிக்க மறுத்த ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடர்ச்சியாக தேசிய கீதம் இசைக்க வேண்டுமென்று கூறியும், அதைப் பின்பற்றாதது வருத்தமளிப்பதாகக் கூறி, பேரவையைவிட்டு ஆளுநர் வெளியேறினார். தமிழக சட்டப்பேரவை மரபுப்படி, ஆளுநர் உரைக்கு முன்பு தமிழ்த் தாய் வாழ்த்தும், உரைக்கு பின்பு தேசிய கீதமும் இசைக்கப்படுவதே வழக்கம் என்று…

Read More

திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராக உள்ள புராண கதையில் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த ‘அலா வைகுந்தபுரமுலூ’ திரைப்படம் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்தது. இந்தநிலையில், இருவரும் அண்மையில் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது, புராணக் கதை ஒன்றை அல்லு அர்ஜூனுவிடம் ஸ்ரீனிவாஸ் தெரிவித்ததாகவும், அது அல்லு அர்ஜூனுக்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் புராண கதையில் அல்லு அர்ஜூன் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Read More

டெல்லி மெட்ரோவில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் புதிய வழித்தடங்களை அமைக்க அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சுமார் 16 கிலோ மீட்டர் துரத்திற்கு டெல்லி மெட்ரோவில் புதிய வழித்தடங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மொத்தமாக 13 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இந்த திட்டத்திற்கு ரூ.12,015 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய மெட்ரோ வழித்தடத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சனை தீவிரமாகி வரும் சூழலில், மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் மூலம் போக்குவரத்து நெரிசலைக்…

Read More

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசுப் பேருந்து மோதிய பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் என்ற இடத்தில் பேருந்து சென்ற போது, திடீரென பேருந்தின் டயர் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர் திசையை நோக்கிச் சென்றது. அப்போது எதிரே அடுத்தடுத்து வந்த கார்கள் மீது அரசுப் பேருந்து பயங்கரமாக மோதிய விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து உடனடியாக விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், சிகிச்சை பலனின்றி பெண் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்ததால்,…

Read More

ரஷ்யா உடனான போரை நிறுத்த அமெரிக்கா முன்மொழிந்துள்ள 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொள்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் கடும் தாக்குதல் நிகழ்ந்து வருகிறது. இருதரப்பு தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதில், உக்ரைனுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தாக்குதல்களை நிறுத்துவதற்கு இருநாடுகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனையடுத்து, அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தீவிரப்படுத்தினார். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் நேரில் பேச்சுவார்த்தையும் நடத்தினார். இருப்பினும், போரை நிறுத்துவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இருதரப்பு தாக்குதல்களை  நிறுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஏற்பதில் உக்ரைன் தயக்கம் காட்டியது. இதனால் அமைதி ஏற்படவில்லை. இருப்பினும், அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்தது. இதனடிப்படையில் போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்சத்திட்டம் தயாரிக்கப்பட்டது. அதில் பெரும்பாலான திட்டங்களுக்கு…

Read More

இஸ்ரோவின் LVM -3 என்ற பாகுபலி ராக்​கெட் மூலம் அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனமான இஸ்​ரோ, உள்நாட்டு தேவை மற்றும் வளர்ச்சிக்கான செயற்கைக்கோளுடன் வணி​க ரீ​தியாக​வும் செயற்கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்தி வரு​கிறது. அதன்​படி அமெரிக்​கா​வின் AST ஸ்பேஸ்​ மொபைல் நிறு​வனத்​தின் புளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்​தொடர்பு செயற்​கைக்​கோளை, இஸ்​ரோ​வின் LVM -3 ராக்​கெட் மூலம் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச. 24) காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான LVM- 3 மூலம் புளூபேர்ட்-6 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.  43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடை கொண்ட ராக்​கெட் LVM- 3 என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5…

Read More

தகவல்​தொடர்பு சேவைக்​கான அமெரிக்​கா​வின் புளூபேர்ட்-6 செயற்​கைக்​கோள் இஸ்ரோவின் LVM -3 என்ற பாகுபலி ராக்​கெட் மூலம் இன்று (டிச. 24) விண்​ணில் பாய்​கிறது. இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனமான இஸ்​ரோ, உள்நாட்டு தேவை மற்றும் வளர்ச்சிக்கான செயற்கைக்கோளுடன் வணி​க ரீ​தியாக​வும் செயற்கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்தி வரு​கிறது. அதன்​படி அமெரிக்​கா​வின் AST ஸ்பேஸ்​ மொபைல் நிறு​வனத்​தின் புளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்​தொடர்பு செயற்​கைக்​கோளை, இஸ்​ரோ​வின் LVM -3 ராக்​கெட் மூலம் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச. 24) காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான LVM- 3 எம்.6-ஐ விண்ணில் ஏவுகிறது. இந்த ராக்​கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்​ட​வுன் நேற்று (டிச. 23) காலை தொடங்கியது. அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு…

Read More

இலங்கைக்கு எதிரான 2வது T20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 22ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்தநிலையில், விசாகப்பட்டினத்தில் 2வது டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சமரி அதபத்து 31ரன்களும், ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்…

Read More