Author: Editor web1
ஒரே வாரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்களின் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 90 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.79 காசுகள் உயர்ந்து ரூ.104.46-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 0.86 காசுகள் அதிகரித்து ரூ.96.11-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் பொருளாதாரச் சூழல்களின் அடிப்படையிலேயே இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதற்கும் இது வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த புதிய விலை உயர்வு…
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், இன்று (மே 19) தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்…
ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் தொடரின் 63வது லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக டெவால்ட் பிரெவிஸ் 44 ரன்களும், கார்த்திக் சர்மா 32 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 19 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து…
உதகையில் 128 ஆவது மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் 7 லட்சம் மலர்களால் பல்வேறு அலங்கார வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன கண்காட்சியின் சிறப்பாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் மலர்களைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளது . நுழைவு வாயில் பகுதியில் மலைகளின் அரசி நீலகிரி என்ற சொல்லிக்கேற்ப பிரம்மாண்ட கிரீடம் வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட மலர்கள் நுழைவு வாயில் ,மலர் காட்சி மாடத்தில் 128 வது ” FLOWER SHOW ” என்ற எழுத்துக்கள் பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வரைபடம், 10 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை யும் இடம்பெற்றுள்ளன . மலர் காட்சி திடலில் இரண்டு லட்சம் மலர்களைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மலர் கண்காட்சியின் முக்கிய அலங்காரமும் திருவாரூர் ஆழித்தேர் வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி மகாபலிபுரம், ஏர் உழவன் மீனவன், மலை ரயில் , நீலகிரியில் மட்டுமே…
அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், தமிழக முதல்வர் உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார். இந்த மறுசீரமைப்பிற்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும்…
பல்லாவரம் ஏரி மற்றும் ரேடியல் சாலைப் பகுதிகளில் சுமார் 5 டன் அளவிற்கு ஆபத்தான மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பல்லாவரம் ஏரி, பல்லாவரம் ரேடியல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் டன் கணக்கில் மருத்துவ மற்றும் உயிரியல் கழிவுகள் (Bio-medical wastes) கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது குறித்து நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தியின் அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) தாமாக முன்வந்து (Suo Motu) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப் பரிந்துரை இந்த விவகாரம் தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தாம்பரம் மாநகராட்சி தரப்பில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், விதிகளை மீறிய மருத்துவமனைகளுக்குப் பலத்த அபராதம் விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது: மியாட் (MIOT) மருத்துவமனை மணப்பாக்கத்தில் உள்ள இந்தத்…
நாட்டின் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், அதை பகடி செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற எக்ஸ் பக்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்களான மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் ஆகியோர் இணைந்துள்ளனர். கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணையின்போது பேசிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், ‘கரப்பான்பூச்சிகளைப் போன்ற இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த வேலையும் இருப்பதில்லை; எந்த தொழிலும் செய்வதில்லை. அவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும், தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களாகவும் மாறி அனைவரையும் தாக்க தொடங்குகிறார்கள்’ என கூறி இருந்தார். ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சூர்ய காந்தின் இந்தக் கருத்துக்கு எதிராக சமூக ஊடங்களில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் நோக்கில், நையாண்டித்தனமாக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற…
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பொதுக்குழுவை கூட்டத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், நாளை காலை அவசர மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். பசுமை வழிச்சாலையில் பரபரப்பு அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் மற்றும் பிளவு குறித்த செய்திகளுக்கு மத்தியில், நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக நேரடி அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவின் தற்போதைய உட்கட்சித் தலைவலியைக் கையாள்வது மற்றும் வேலுமணி தரப்பின் அடுத்தகட்ட நகர்வுகளை முறியடிப்பது குறித்து இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடிக்கு செக்…
சர்வதேச சந்தையில் நிலவி வரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று திங்கட்கிழமை பெரும் சரிவைச் சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 95.84 முதல் 96.14 வரை பெரும் ஊசலாட்டத்தைக் கண்டு, இறுதியில் 95.97 என்ற சரிவுடன் நிலைபெற்றது. இந்நிலையில், இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே அது மேலும் சரிந்து 96.20 ஆனது. இன்றைய நாள் முழுவதும் ரூபாயின் மதிப்பு 95.85 முதல் 96.30 வரை ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கக்கூடும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். தற்போதைய சூழலில் ரூபாயின் வீழ்ச்சியை 96.30 – 96.40 என்ற வரம்பிற்குள் கட்டுப்படுத்துவதற்கான உடனடி முட்டுக்கட்டைகள் (Resistance levels) உள்ளன. இதையும் தாண்டி ரூபாய் மதிப்பு சரிந்தால், அது மிக விரைவாக 96.50 என்ற நிலையை நோக்கித் தள்ளப்படலாம் எனவும் எச்சரிக்கின்றனர். சரிவிற்கான காரணங்கள் ரூபாயின் இந்த அதிரடி வீழ்ச்சிக்கு சர்வதேசப்…
அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கப் போவதாக திமுக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், சட்டப்பேரவை உறுப்பினராகக் கடந்த 10 ஆண்டுகளாகத் தனது குழுவுடன் நேரம் பாராமல் உழைத்தது தனது கடமை எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு தனிப்பட்ட குடிமகனாகத் தனது நேரத்தை தானே தீர்மானிக்கும் சுதந்திரத்துடன் சில வாரங்கள் ஓய்வெடுக்க ஆவலுடன் காத்திருப்பதாகத் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். முன்னதாக நேரமின்மை காரணமாகவும், அமைச்சராக இருந்த போது வெளிநாடுகளுக்குச் சென்று உரையாற்றப் பல சமயங்களில் அனுமதி மறுக்கப்பட்டதாலும் பல்வேறு வாய்ப்புகளைத் தம்மால் ஏற்க முடியாமல் போனதாக அவர் கூறியுள்ளார். தற்போது கிடைத்துள்ள இந்த ஓய்வுக் காலத்தில், அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்று உரையாற்ற உள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார். ஒரு பிரபல பதிப்பகத்துடன் இணைந்து புத்தகம் ஒன்றை வெளியிட ஏற்கனவே ஒப்பந்தம்…