Author: Editor web1
டி20 மகளிர் உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பிரிஸ்டாலில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 126 ரன்கள் குவித்தது. குல் ஃபெரோஷா 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். ஆயிஷா ஜாஃபர் 32 ரன்களும், முனீபா அலி 12 ரன்களும் சேர்த்தனர். நெதர்லாந்து தரப்பில் ஐரிஸ் ஸ்விலிங் 2 விக்கெட்டுகளும், மற்ற வீராங்கனைகள் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 18 ஓவர்களில் 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. பாபெட் டி லீட் 30 ரன்கள், ஹீதர் சிகர்ஸ் 24 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான்…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கு.செல்வப்பெருந்தகை பதவி வகித்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், கொறடாவுமான மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கு.செல்வப்பெருந்தகை பதவி வகித்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக விருதுநகர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினரும், கொறடாவுமான மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலின் போது, கூட்டணி முடிவு குறித்தும், வேட்பாளர் தேர்வு, தொகுதிகள் பெறுவது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாகவும், கூட்டணிக் கட்சியான திமுக குறித்தும் தமிழக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். இந்தநிலையில், தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைமை சந்தித்து தனது ராஜினாமா முடிவு செல்வப்பெருந்தகை அறிவித்தார். இதனிடையே சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில்…
போதைப்பொருள் பயன்படுத்தியதாக பரவும் வீடியோ குறித்து வெளியாகும் தகவல் தவறானது என மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தின் கேலரியில் அமர்ந்துள்ள சரத்குமார், வெண்மை நிறத்திலான பொடியை தூளாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அமைச்சர் பொறுப்பேற்பதற்கு முன்பாக நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது பகிரப்பட்டு, அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாக தகவல்கள் பரப்பப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டு அமைச்சர் சரத்குமார் விளக்கமளித்துள்ளார். அதில், அந்த வீடியோ சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும், ஐபிஎல் போட்டி நடந்த போது தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்றிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது தனது குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்ததாகவும், குழந்தை மாத்திரையை விழுங்க மறுத்து துப்பியதால், அதனைச் சிறுவர்கள் உட்கொள்ளும் வகையில் பொடியாக்கி, நீரில் கலந்து கொடுக்கவே…
கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழாவில், திரைப்படத் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, ஆன்ட்ரூ லூயிஸ் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ‘தண்டட்டி’ படத்தின் மூலம் தனித்துவமான இயக்கத்தால் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் ராம் சங்கையா இந்தப் படத்தை இயக்குகிறார். கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஜி.மதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள எம்.கதிரவன் மதி கலை இயக்கத்தை கவனிக்கிறார். கிராமியப் பின்னணியில் உருவாகும் இந்தப் படம், கவினின் திரைப் பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1987ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில்…
தமிழே தெரியாதவரை தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதற்கு தமிழக பாஜக தலைமை நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகச் செயல்பட கர்நாடகாவைச் சேர்ந்த திரு. கே. வெங்கடநாராயணா அவர்களை நியமிக்கவிருப்பதாக திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டிய முக்கியப் பொறுப்பில், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி நியமிக்கலாம்? அன்னைத் தமிழ் மொழியையும், நமது தமிழ் கலாச்சாரத்தையும் முழுமையாக அறியாத ஒருவர் எப்படி தமிழக மக்களின் எண்ணத்தையும், தமிழக அரசின் குரலையும் டெல்லியில் எதிரொலிக்க முடியும்? சட்டம் அறிந்த, நாடாளுமன்ற நடப்புகள் அறிந்த தமிழகத்தைச் சார்ந்தோரையெல்லாம் விடுத்து, கர்நாடக முதல்வர் திரு. டி.கே.சிவகுமாரின் நெருங்கிய நண்பரைப் பிரதிநிதியாக நியமிக்கக் காரணம் என்ன? முதல்வர் விஜய் அவர்கள்…
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேவிஎன் (KVN) புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான கே. வெங்கட நாராயணா, தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். தணிக்கை பிரச்சனை தொடர்பாக ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்தநிலையில், தமிழ்நாடு அரசின் சிறப்பு டெல்லி பிரதிநிதியாக வெங்கட நாராயணாவை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து ஓராண்டு காலத்திற்கு இந்தப் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட நாராயணாவுக்கு அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும், அதிகாரமும் வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் தெரிவிப்பது, மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து முறைப்படி பெற்றுத் தருவதுமே சிறப்பு பிரதிநிதியின் முதன்மையான பணியாகும். 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி…
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்தநிலையில், தேர்தலுக்குப் பிறகு அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர். அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் இசக்கி சுப்பையா. இவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதன்காரணமாக அம்பாசமுத்திரம் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில், திமுக, அதிமுக…
தனக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை பழிவாங்கல் நடவடிக்கையே என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை திமுக கொறடாவுமான எ.வ.வேலுவின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2006- 2011 வரை எ.வ.வேலு அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், 2022ம் ஆண்டு சாலை விரிவாக்கம் தொடர்பாக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் தொடர்பாக டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும், கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் சில ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே எ.வ.வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், தனக்கு சொந்தமான…
மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பவே மின்சாரத்துறை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சாரத்துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று (ஜூன் 25) வெளியிட்டார். அதில், முந்திய திமுக ஆட்சியில் மின்வாரியத்தில் நிர்வாக முறைகேடு, நிதி மேலாண்மையில் நிகழ்ந்த தவறுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அமைச்சர் தெரிவித்தார். இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் நிர்மல்குமாரின் வெள்ளை அறிக்கை குறித்து விளக்கமளித்து, மறுப்பு தெரிவித்தார். மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பவே மின்சாரத்துறை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், மின்வாரியத்தில் செலவு உயர்ந்ததற்கான காரணம் வெள்ளை அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். திமுக ஆட்சியில் புதிய மின்திட்டங்கள் தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு…