Author: Editor web1

ஜூன் 22, தமிழ்நாடு முதல்வர், தவெக தலைவர், விஜய்யின் பிறந்தநாள். 2024ல் ஒரு கட்சியின் தலைவர், 2026ல் தமிழ்நாட்டின் முதல்வர் என உயரத்தை தொட்டவரின் அறிமுகம், தமிழ் திரையுலகில் தனி அடையாளமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, தவிர்க்க முடியாத இடத்தை தந்துள்ளது. 1992-ம் ஆண்டு தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய். ஆரம்பக்கால கட்டத்தில் குடும்பப் பாங்கான மற்றும் காதல் கதைகளில் கவனம் செலுத்தினார். செந்தூரப்பாண்டி, ரசிகன், விஷ்ணு, தேவா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என காதல் மற்றும் நகைச்சுவை கலந்த படங்களில் நடித்த விஜய்க்கு மிகப் பெரிய திருப்புமுனையையும், ரசிகர்களிடம் நிரந்தரமான ஒரு இடத்தையும் தந்தது, விக்ரமன் இயக்கத்தில் 1996ல் வெளியான பூவே உனக்காக திரைப்படம். வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்து, விஜய்க்கு பிரகாசமான பாதையை அமைத்தது. அடுத்த ஆண்டிலேயே வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படம், இன்னும்…

Read More

யஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ (Toxic) திரைப்படம் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் புதிய போஸ்டருடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளது. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாகப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து ரிலீஸ் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. டாக்ஸிக் திரைப்படம் 2025 ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, 2026 மார்ச் 19ல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய பதற்றம் காரணமாக சர்வதேச வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் அப்போதும் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு ஜூன் 4 வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளநிலையில், தற்போது ஆகஸ்ட் 26ம் தேதி டாக்ஸிக்…

Read More

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், தனது முடிவை நாளை (ஜூன் 22) அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் பிராந்தியத் தேர்தல்களில் ஆளும் தொழிற் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் ஸ்டார்மருக்கு எதிரான எதிர்ப்பு கட்சிக்குள் தீவிரமடைந்தது. தொழிற் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். சில அமைச்சர்கள் ராஜினாமா செய்ததால் நெருக்கடி அதிகரித்தது. கெய்ர் ஸ்டார்மருக்கு போட்டியாகக் கருதப்படும் ஆண்டி பர்ன்ஹாம், அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அவரை அடுத்த தலைவராக்க வேண்டும் என தொழிற் கட்சியினர் பலர் விரும்புவதாகக் கூறப்படுகிறது. கட்சிக்குள் உட்கட்சி அழுத்தம் மற்றும் தனது செல்வாக்கு குறைந்து வருவதால் கெய்ர் ஸ்டார்மர் இந்த முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, தனது ராஜினாமா முடிவை நாளை (ஜூன் 22) அறிவிக்க உள்ளதாகவும்…

Read More

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் நீட் மறுதேர்வு நடைபெற்று முடிந்தது. MBBS, BDS ஆகிய இளங்கலை மருத்துவ படிப்புகளின் மாணவர் சேர்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற இந்தாண்டுக்கான நீட் தேர்வில் வினாத்தாள் முன்னதாகவே கசிந்ததது உறுதி செய்யப்பட்டதால், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, இன்று (ஜூன் 21) மறுதேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நீட் மறுதேர்வு பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 307 மையங்களில் தேர்வு நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் மறுதேர்வு மாலை 5.15 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்வில் இயற்பியல் வினாக்கள் சற்று கடினமானதாக இருந்ததாகவும், மற்ற பாடப்பிரிவுகள் எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read More

திருவள்ளூர் அருகே மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவத்தையடுத்து, தொழிலாளர்களின் நலன், தொழிற்சாலைகளுக்கான கட்டுப்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இதுபோன்ற துயர சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறா என்பதை ஆய்வு செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியையும், வேதனையும்…

Read More

பீகாரில் போலி என்கவுன்டரில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார். பீகாரில் போஜ்பூர் மாவட்டம் ஷாப்பூர் காவல் நிலையப் பகுதியில் ஜூன் 17ம் தேதி பாரத் பூஷன் திவாரி (28) என்ற இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையையும், பீகார் அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது போலி என்கவுன்டர் என்று கூறி குடும்பத்தினரும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றப் பின்னணி இல்லாத நபர் கொல்லப்பட்ட விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  துப்பாக்கியை வைத்துக் கொண்டு பூஷன் திவாரி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ தொடர்பான விசாரணைக்கு சென்ற போது போலீசார் மீது அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், தற்காப்புக்காக சுட்டதில் பூஷன் திவாரி உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே என்கவுன்டர்…

Read More

அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை முன்பு, சிலரை குறிப்பிட்டு விமர்சித்து வைக்கப்பட்ட பேனரால் உட்கட்சி பூசல் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தலைமையிலான அதிருப்தி குழுவினர் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகிறது. அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுக ஒரு குடும்பத்தின் கைக்குள் செல்வதாகவும், கட்சியில் கேள்வி கேட்கும் சூழல் இல்லை என்றும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான ‘எம்ஜிஆர் மாளிகை’ முன்பு வைக்கப்பட்ட பேனர் ஒன்று கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பேனரில் ஒரு குள்ளநரி செய்தியாளரை சந்திப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதில், “குடிகார குள்ளநரி அன்று கும்பலாக ஊளையிட்டது, இன்று அனாதையாக வந்து ஓலமிடுகிறது” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.…

Read More

திருவள்ளூர் அருகே தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் இன்று (ஜூன் 21) ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில் மொத்தம் 64 பணியாளர்கள் (60 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்ததாகவும், 15 பேர் அரசு மருத்துவமனையிலும், 47 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் (23 பேர் தீவிர சிகிச்சை பிரிவில், 24 பேர் கண்காணிப்பில்) சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி…

Read More

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையேயான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறினர். 36 ரன்களுக்குள் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வந்தவர்களில் ஹஷ்மத்துல்லா 102 ரன்களும், ஓமர்சாய் 50 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 44.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 79 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 110 ரன்கள்…

Read More

அதிமுகவுடன் திமுக கூட்டணி வைத்தான் என்ன உலகத் தவறா என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசி இருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிக விரைவில் மாற்றம் வரும் என்றார். யார் நண்பர்கள், யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காட்டும் பாடமாக சட்டமன்றத் தேர்தல் அமைந்துவிட்டது என்றார். தேர்தலுக்கு பிறகு திமுக, அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சித்ததாக எழுந்த விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் என்ன உலகத் தவறா என தெரிவித்தார். திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக உருவாகி 54 ஆண்டுகளாகி இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதிமுகவினர் தங்களின் பங்காளிகள் போன்றவர்கள் என்றார். அதற்காக கூட்டணி அமைக்கிறோம் என்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் கூறினார். திமுக, அதிமுகவும் சட்டப்பேரவையில் தற்போது ஒரே வரிசையில் அமர்ந்துள்ளதாகவும், காலம்…

Read More