Author: Editor web1

ஆளுங்கட்சியை கேள்வி கேட்கும் மக்கள், வீதியில் இறங்கி போராடக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17வது கூட்டத்தொடர் நாளை (ஜூன் 18) தொடங்குகிறது. இந்தநிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுகவின் கூட்டணிக் கட்சி ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்திருப்பதாக குறிப்பிட்டார்.  வலுவான எதிர்க்கட்சியாக சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  அறிவுறுத்திய அவர், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுகவினர் உதவி செய்ய ஓடி வருவார்கள் என்று மக்கள் கூற வேண்டும் என்றார். தற்போது ஆளுங்கட்சியை கேள்வி கேட்கும் மக்கள், வீதியில் இறங்கி போராடக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக  கடுமையாக உங்கள் வாதங்களை முன் வைக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தினார். சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை காக்க…

Read More

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17வது சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. 60 ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் 59 இடங்களிலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 47 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க அறுதிப் பெரும்பான்மை கிடைக்காதநிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. மே 10ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். முதலமைச்சர் விஜய் உள்பட 35 பேர் கொண்ட அமைச்சரவையில் ஆட்சி அமைக்க ஆதரவளித்த காங்கிரசுக்கு 2, விசிகவுக்கு 1, ஐயுஎம்எல் கட்சிக்கு 1 என அமைச்சரவையில் இடம் தந்து தமிழக அரசியல் வரலாற்றில் கூட்டணி ஆட்சியின் பயணத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய். இந்தநிலையில், தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை (ஜூன் 18) தொடங்க உள்ளது.…

Read More

தமிழக காவல் அதிகாரிகள் 56 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் 17 பேர் உள்பட தமிழ்நாடு காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் எஸ்பி-யாக ஜெயக்குமார், சேலம் எஸ்பி-யாக குத்தாலிங்கம், விழுப்புரம் எஸ்பி-யாக மதிவாணன், திருவண்ணாமலை எஸ்பி-யாக கார்த்திகேயன் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். விருதுநகர் எஸ்பி-யாக கவுதம் கோயல், கடலூர் எஸ்பி-யாக விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் எஸ்பி-யாக சாய் பிரனீத், தருமபுரி எஸ்பி-யாக அருண் கபிலன், கிருஷ்ணகிரி எஸ்பி-யாக அனிதா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் எஸ்பி-யாக யாதவ் கிரிஷ் அசோக், மதுரை எஸ்பி-யாக யாதவ் தேவநாதன், நெல்லை எஸ்பி-யாக விஸ்வேஷ் பாலசுப்ரமணிய பாரதி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி உமா, சென்னை தலைமையிட டிஐஜி-யாகவும், தலைமையிட துணை ஆணையர் பாலகிருஷ்ணன் சென்னை சைபர் கிரைம் துணை…

Read More

தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 55-வது திரைப்படத்தின் புதிய போஸ்டர் வரும் 18ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனுஷின் ‘வுன்டர்பார் ஃபிலிம்ஸ்’ (Wunderbar Films) மற்றும் ‘ஆர்டேக் ஸ்டூடியோஸ்’ (RTake Studios) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தனுஷின் 55வது படத்தை தயாரிக்கின்றன. தனுஷ் உளவாளி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி காவல் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவாளராக செய்கிறார். விறுவிறுப்பான திரில்லர் கதையாக உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஆயுத பூஜை பண்டிகை காலத்தை முன்னிட்டு திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தநிலையில், தற்போது…

Read More

இந்தியா- சுலோவாகியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஐரோப்பிய நாடுகளில் ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி முதலாவதாக பிரான்ஸ் சென்றார். அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்த பிரதமர் மோடி, இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். புத்தாக்கம், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட விஷயங்களில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, பிரான்ஸ் மற்றும் பிறநாடுகளை சேர்ந்த முன்னணி கண்டுபிடிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் மூலதன நிதியங்களையும் ஒன்றிணைக்கும்  ‘பாரத் இன்னோவேட்ஸ்’ (Bharat Innovates) என்ற நிகழ்வை பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்தநிலையில், பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று (ஜூன் 15) சுலாவாகியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் பிராடிஸ்லாவாவில் பிரதமர் மோடிக்கு…

Read More

திருவண்ணாமலை அருகே கர்ப்பிணிப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தவெக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண் ஒருவர், இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள ஏரிக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த தவெக பிரமுகர் யோகேஸ்வரன், அப்பெண்ணை மிரட்டி தனது விருப்பத்திற்கு இணங்கும்படி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் கர்ப்பிணி பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் வீட்டிற்கு வந்து தனது உறவினர்களிடம் அந்தப் பெண் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பாலியல் தொல்லை  கொடுத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கர்ப்பிணி பெண் கொடுத்த புகாரின் பெயரில் தவெக பிரமுகர் யோகேஸ்வரனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, பிறகு சிறையில் அடைத்தனர்.

Read More

தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல், மத  நிகழ்ச்சிகள்  நடத்தக் கூடாது என்ற அரசு உத்தரவை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி,  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் மற்றும் சித்தாந்த ரீதியிலான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்று ஆண்டுதோறும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து வேலூரில் உள்ள தனியார் பள்ளி மற்றும் சென்னையைச் சேர்ந்த  தனியார் பள்ளி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் பள்ளிகளில் அரசியல் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து ஏப்ரல் 30ம் தேதிக்குள் உத்தரவாதம் அளிக்க…

Read More

வரும் 18ம் தேதி தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் கூட்டத்தொடர் நடைபெற உள்ளநிலையில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சிறப்புப் புத்தாக்க பயிற்சி நாளை (ஜூன் 16)  தொடங்கப்படுகிறது. தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்க உள்ளது. சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதனடிப்படையில், சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக, பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாதன் அர்லேகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. 17வது சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நாளை (ஜூன் 16) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 17) என இரண்டு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 05.30 மணி வரை சிறப்புப் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்வு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்…

Read More

அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்ட காலை உணவுத்திட்டம் நடுநிலை பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த 2022ல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து 2023ல் காலை உணவு விரிவாக்கத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து 2024ல் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயிலும் சுமார் 3.05 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம், நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுவரை 1…

Read More

புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சி தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருவதை சுட்டிக்காட்டி உள்ள அவர், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற செய்திகள் வருவதையும் குறிப்பிட்டுள்ளார். இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும் போது சொன்ன “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இது தானா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தனது சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, எப்படி நல்லா…

Read More