Author: Editor web1

லெபனானில் இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளநிலையில், அமெரிக்கா- ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது. லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 4 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழந்தனர். லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை தங்களது தூதுக்குழுவை சுவிட்சர்லாந்திற்கு அனுப்பப் போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுவதாக சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகத்திற்கும் ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தின் ஒபர்கன்னில் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தை திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் புறப்படத் தயாராக இருந்தநிலையில், இந்த பயணம்…

Read More

100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்ட வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் ஜூலை 1ம் தேதி முதல் அமலாக உள்ளநிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டம் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்) மாற்றியமைக்கப்பட்டு, ‘விக்சித் பாரத் கிராம வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டம்’ (VB-GRAMG) என்ற புதிய பெயரில் சட்டமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, வேலை நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளது. புதிய திட்டத்தை தங்குதடையின்றி செயல்படுத்துவதற்காக, மத்திய அரசு இடைக்கால நிதி ஒதுக்கீடாக ரூ.95,692 கோடி நிதியை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. தற்போது ஜூன் 30-ம் தேதி வரை பழைய திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் அனைத்தும், எவ்விதப்…

Read More

லெபனானில் இஸ்ரேல் நடத்திய கடும் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அமெரிக்கா, ஈரான் இடையே நிகழ்ந்த அமைதி ஒப்பந்தத்தில் பாதிப்பு ஏற்படுமா என உலக நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. லெபனானின் தெற்கு மாகாணங்களில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஜூன் 18-ம் தேதி இரவு முதல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 ராணுவ வீரர்களும் அடங்குவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சூழல், சமீபத்தில் கையெழுத்தான அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் இன்று (ஜூன் 19) நடைபெறவிருந்த முறையான ஒப்பந்த கையெழுத்து நிகழ்வு, போக்குவரத்து காரணங்களைக் கூறி அமெரிக்காவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

Read More

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஆன்லைன் மூலம்  பல்வேறு வசதிகளை ஒரே இணையதளத்தில்  பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு துறை சார்ந்த நடவடிக்கைகளில் அமைச்சர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம், கனிம வளம், போக்குவரத்து, டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளில் தவெக அமைச்சர்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோயில்களின் அதிரடி ஆய்வுகள் நடத்தி, மாற்றங்களை செய்து வருகிறார். அண்மையில் திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு பக்தர்களிடம்  கூடுதல் பணம் வசூலிக்கும் புகாரில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ், அர்ச்சகர் மற்றும் கோயில் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், கோயில் பூஜைப்பொருட்கள் விற்பனை தொடர்பாகவும் பல்வேறு கட்டுப்பாட்டுகளை விதித்து உத்திரவிட்டார். இந்தநிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஆன்லைன்…

Read More

டெல்லியில் வரும் 20ம் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக கரப்பான் பூச்சி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. அண்மையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு முறைகேடு பிரச்சனைகளை முன்னிறுத்தி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஜூன் 6ம் தேதி டெல்லி, புனே, பெங்களூரு என நாட்டின் பல்வேறு நகரங்களில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், லடாக்கை சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவை தெரிவித்தனர். இந்தநிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி வரும் 20ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த உள்ளதாக கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். சமூகப் பிரச்சனைகளை முன்னிறுத்தி கரப்பான் பூச்சி…

Read More

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 55வது படத்திற்கு ’ஓம்’ என தலைப்பு வைக்கப்பட்டு,  படத்தின் புதிய போஸ்டர் மற்றும் வீடியா கிளிம்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் ‘வுன்டர்பார் ஃபிலிம்ஸ்‘ (Wunderbar Films) மற்றும் ‘ஆர்டேக் ஸ்டூடியோஸ்‘ (RTake Studios) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தனுஷின் 55வது படத்தை தயாரிக்கின்றன. தனுஷ் உளவாளி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி காவல் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவாளராக செய்கிறார். இந்தநிலையில், தனுஷின் இந்த படத்திற்கு ’ஓம்’ Chapter 1 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் புதிய போஸ்டர் மற்றும் வீடியா கிளிம்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.  வரும் அக்டோபர் மாதம் 16ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனுஷ் ரசிகர்களிடையே…

Read More

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியதால் வெப்பம் தணிந்து நிலவிய இதமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்தது. இரவிலும் வெப்பத்தின் புழுக்கம் காணப்பட்டதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். தென்மேற்கு பருவ மழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டும், சென்னையில் மழைக்கான அறிகுறியே காணப்படாமல் இருந்தது. இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையில், மாலையில் திடீரென இருள்மேகம் சூழ்ந்து, பலத்த காற்று வீசியது. இதையடுத்து, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் பில்லர், வடபழனி, முகப்பேர், திருமங்கலம், அண்ணா நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, வில்லிவாக்கம், மாதவரம், ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலால் அவதிப்பட்ட மக்கள், தற்போது பெய்த கனமழையால் நிலவிய இதமான சூழலால் மகிழ்ச்சி அடைந்தனர்.  

Read More

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச்செயலாளர் சாய்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், போக்குவரத்து துறை சார்ந்த செயல்பாடுகள், செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் 8 அரசு போக்குவரத்து கழகங்கள், சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழ்நாடு பயணியர், சரக்கு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு இயக்குநரகத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கியதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் போக்குவரத்து துறைக்கு ஓராண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு என செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. மாநிலம் முழுவதும் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்வது தொடர்பான செயல் திட்டம் குறித்தும், மின்சாரப் பேருந்துகளை பெருமளவு பயன்பாட்டிற்கு கொண்டு வருவது பற்றியும், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும்…

Read More

முதலமைச்சர் விஜய் திரையில் மட்டும் கதாநாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை என்றும் அதை விட பெரிய விஷயத்திற்காக பிறந்தவர் என்றும் நடிகர் சமந்தா தெரிவித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் விஜய்யை நடிகை சமந்தா சந்தித்து பேசினார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புகழ்பெற்ற ஒரு திரைத்துறையை விட்டுவிட்டு, அதைவிட சவாலான அரசியல் களத்திற்கு வந்துள்ளது எளிதானது அல்ல என்றும் மாறாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையால்தான் முதல்வர் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார். பதவி அதிகாரத்தால் மட்டுமல்ல, தனது அணுகுமுறையால் முதலமைச்சர் விஜய் மக்களின் நம்பிக்கையைத் தக்க வைப்பார் என்றும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் என்றும் சமந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய்க்கு வலிமையும், ஞானமும், தைரியமும் கிடைக்கவும், அவரது பாதையில் உறுதியாக இருக்கவும் வாழ்த்துவதாக சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

Read More

இந்தியா மற்றும் அமெரிக்காவின் நட்புறவில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரான்ஸின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் ஜூன் 16 முதல் 17 வரை ஜி7 உச்சி மாநாட்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் கனடா ஆகிய ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியா, பிரேசில், உக்ரைன், தென் கொரியா, கென்யா, எகிப்து, ஐக்கிய அரசு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தநிலையில், மாநாட்டிற்கு இடையே பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 16 மாத இடைவெளிக்குப் பிறகு இருவரும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி உடனான சந்திப்பு…

Read More