Author: Editor web1

ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இந்தியாவின் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்சில் ‘பாரத் இன்னொவேட்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் புத்தாக்கங்கள் நாட்டு நலனுக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகிற்கும் நீடித்த மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதே இந்தியாவின் நோக்கம் என்றார். இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து புத்தாக்கத்திற்கான தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியா தனது அறிவாலும் புத்தாக்கத்தாலும் உலகிற்குப் புதிய திசையைக் காட்டியுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். கணிதம் முதல் வானியல் வரையும் மருத்துவம் முதல் யோகா வரையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் இந்தியாவின் பங்களிப்பே அடித்தளமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். தற்போது, இந்த பாரம்பரியத்திற்கு புதிய திசையையும், வேகத்தையும் அளித்திருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதன்படி இந்தியாவின் பாதுகாப்புத்துறையும் புத்தாக்கத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், அணுசக்தித் துறையிலும் முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர்…

Read More

தனது நாட்டின் அணு ஆயுத அந்தஸ்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று வடகொரியா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஈரானைத் தொடர்ந்து அணு ஆயுத நடவடிக்கைகளை குறைக்குமாறு வடகொரியாவுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து கடந்த 11ம் தேதி நடைபெற்ற அணுசக்தி ஆலோசனைக் குழு கூட்டத்தில் அமெரிக்காவும், தென்கொரியாவும் வடகொரியாவுக்கு மீண்டும் வலியுறுத்தின. சர்வதேச அளவில் நிலவும் கடும் அழுத்தங்கள் மற்றும் தடைகளைத் தாண்டி, இந்த நிலைப்பாட்டில் வடகொரியா உறுதியாக இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகிறது. தற்காப்புக்காகவும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் அணு ஆயுதங்கள் இன்றியமையாதவை என்பதால், இந்த அந்தஸ்தைத் தியாகம் செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று வடகொரியா வலியுறுத்தியுள்ளது. உலக நாடுகளின் கண்டனங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் இருந்தாலும், தனது பாதுகாப்புத் திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை வடகொரியா மறைமுகமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.…

Read More

இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும், கண்டுபிடிப்புகளையும் பிரான்சில் காட்சிப்படுத்த தேர்வு செய்தது தங்களுக்கான மிகப்பெரிய கவுரவம் என்று அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான ஐந்து நாள் அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸின் நீஸ் நகரைச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் மற்றும் பிறநாடுகளை சேர்ந்த முன்னணி கண்டுபிடிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் மூலதன நிதியங்களையும் ஒன்றிணைக்கும்  ‘பாரத் இன்னோவேட்ஸ்’ (Bharat Innovates) என்ற நிகழ்வை பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்தியாவின் மிகச்சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் கண்டுபிடிப்பாளர்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்த, பிரான்ஸ் நாட்டை இந்தியா தேர்ந்தெடுத்தது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று பெருமிதத்துடன்…

Read More

மந்திரமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனியின், அண்மையில் வெளியான மார்கன், சக்தித்திருமகன் ஆகிய திரைப்படங்கள் திரையரங்களில் போதிய வரவேற்பு இல்லாமல், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லையென்றாலும், ஓடிடி தளத்தில் வரவேற்பை பெற்றது. இந்தநிலையில், சசி இயக்கத்தில் நூறு சாமி படத்தில் விஜய் ஆண்டணி நடித்துள்ளார். இப்படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது அவரின் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அயோத்தி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மந்திரமூர்த்தியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படிப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.

Read More

இந்தியாவின் சாதனைகளை ராகுல் காந்தி குறைத்து மதிப்பிடுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்து 12 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக விக்ஸித் பாரத் சங்கல்ப் சமவேஷா கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறை பேசும் போதும், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிப்பதாக நினைத்து ஒவ்வொரு முறையும் நாட்டை குறைத்து மதிப்பிட்டு பேசுவதாக குற்றம்சாட்டினார். பேரழிவு காத்திருப்பதாகவும், சில வாரங்களில் எல்லாம் நொறுங்கிவிடும் என்று ராகுல் காந்தி பேசி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஆனால், ராகுல் கூறுவது போன்று எதுவும் நடைபெறாது என குறிப்பிட்ட  அவர், ஒவ்வொரு காலாண்டும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். இந்தியாவின் வளர்ச்சியை மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் சர்வதேச…

Read More

சென்னையின் வேளச்சேரி பகுதியில், லீசுக்கு வீடு தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்படும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறை தாமதம் காட்டியதாக குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   வேளச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், லீசுக்கு வீடு தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஒரே வீட்டை பலருக்கு காட்டி, ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக அக்பர் ஷெரிப் தலைமையிலான கும்பல் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதேபோல் ஏமாற்றப்பட்ட பலர் கடந்த பல மாதங்களாக வேளச்சேரி காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.   பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பது, கட்டப்பஞ்சாயத்து மூலம் அச்சுறுத்துவது உள்ளிட்ட செயல்களில் மோசடி கும்பல் ஈடுபட்டதாகவும், அதுகுறித்து பலமுறை காவல்துறையிடம் புகார்…

Read More

இந்திய அணிக்கு எதிராக அதிவேக சதம் அடித்த 2வது வீரர் என்ற புதிய சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் படைத்துள்ளார். இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் இன்று (ஜூன் 13) நடைபெறுகிறது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். செதிக்குல்லா ரன்கள் எதுவும் எடுக்காமலும், ரஹ்மத் ஷா 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர்.  இதனால், 26 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் அணி தடுமாறியது. இந்தநிலையில், ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிரி ஆகியோர் சிறப்பாக ஆடி நம்பிக்கை அளித்தனர். அதிரடியாக ஆடிய குர்பாஸ் 48 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக…

Read More

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகாலப் போர் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் 24 மணி நேரத்தில் கையெழுத்தாகும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து போரைத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறித்தும், இஸ்ரேல் மீதும் ஈராக் கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்த மோதலால், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தீவிரமாக மத்தியஸ்தம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இரு தரப்பு பிரதிநிதிகளும் இஸ்லாமாபாதில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த அமைதி ஒப்பந்தம் போர் நிறுத்தத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக…

Read More

மதுரை பின்னணி கொண்ட கதைக்களத்தில் நடிகர் ஜீவாவின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. நடிகர் ஜீவாவின் தந்தையும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.பி.சவுத்ரி அண்மையில் விபத்து ஒன்றில் காலமானார். இந்த சம்பவம் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்தநிலையில், தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் ஜீவா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘கிடா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரா. வெங்கட் இந்தப் படத்தை இயக்க உள்ளார். மதுரையை பின்னணியாகக் கொண்ட விறுவிறுப்பான கதைக் களத்தில்  ஜீவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாமன், கருடன் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதால், இந்த ஆண்டிலேயே இந்த படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இயக்குநர் ரா. வெங்கட்டின் முந்தைய படைப்பான ‘கிடா’ எதார்த்தமான…

Read More

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘சேயோன்’. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், ‘எல்லாம் இனிதே’ என்ற தலைப்புடன் புதிய புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு மலைப்பகுதியில் கம்பீரமாக நின்று கொண்டிருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. ‘சேயோன்’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுடன் பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிக்க, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More