Author: Editor web1
அதிமுக எம்.எல்.ஏ-க்களாகப் பதவியேற்று, பின்னர் தங்களது பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்று 4 பேருக்கும் விளக்கம் கேட்டு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 25 பேர் வாக்களித்தனர். இதையடுத்து, கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனிடையே 25 பேரில் 21 எம்.எல்.ஏ-க்கள் தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரியதையடுத்து, அவர்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி கைவிட்டார். இதுகுறித்து முறைப்படி சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரும் இதனை ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), ஜெயக்குமார் (பெருந்துறை தொகுதி), சத்யபாமா (தாராபுரம் தொகுதி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம் தொகுதி) ஆகிய…
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை (ஜூன் 10) முன்னிட்டு, அவர் நடித்து வரும் ‘NBK 111’ திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, பாலகிருஷ்ணா- இயக்குநர் கோபிசந்த் மலினேனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘NBK 111’ என பெயரிடப்பட்டுள்ள படத்தை விருத்தி சினிமாஸ் பேனரில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்து வருகிறார். தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தநிலையில், பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை (ஜூன் 10) முன்னிட்டு ‘Entry of an Era’ என்ற பெயரில் வெளியான க்ளிம்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலகிருஷ்ணாவின் வழக்கமான அதிரடி சண்டைக்காட்சிகளுடன் பின்னணி இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘NBK 111’ படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத்குமார், அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படம் ஒரு வரலாற்றுப்…
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 11வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று (ஜூன் 11) காலை முதல் மாலை வரை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமை தாங்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். “வளர்ச்சியடைந்த இந்தியா 2047-க்கான உள்ளடக்கிய மனித மேம்பாடு” என்ற மையக் கருப்பொருளின் கீழ் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நாட்டின் அடித்தள மனித ஆற்றலை மேம்படுத்துதல். செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இளைஞர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மாற்றி அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. நிலையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சுயதொழில் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான உத்திகளை வகுத்தல்…
இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா நேற்று (ஜூன் 10) காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திரைத்துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில், பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், இயக்குனர் பாரதிராஜா மறைவு வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் திரையுலகின் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்த பாரதிராஜாவின் அர்ப்பணிப்பு தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியது என்றும் கிராமப்புற வாழ்வியலை மிக அழகாக காட்சிப்படுத்தியவர் பாரதிராஜா என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் தனது…
கடந்த சில நாட்களாக விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது அதிரடியான சரிவைக் கண்டு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.2,400 வரை அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,08,000 என்ற விலைக்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.5,600 வரை சரிந்துள்ளது. இது, தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000-க்கும் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் சரிவு நகைப்பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் பணிகளை தொடங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் டிதம் அனுப்பியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்தநிலையில், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார். தவெக அரசை ஆதரித்து அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, தமிழகத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாக அரசிதழில் வெளியிடப்பட்டது.…
பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதால் அவரைப் பற்றி பேச ஒன்றும் இல்லை என்றும் அவரை பாஜக ஆதரிக்காது என்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். பாஜகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஜூன் 2ம் தேதி டெல்லி சென்ற தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தனது விலகல் குறித்து அண்ணாமலை விளக்கமளித்தார். இதையடுத்து, ஜூன் 5ம் தேதி அண்ணாமலையின் விலகலை அதிகாரப்பூர்வமாக பாஜக அறிவித்தது. அன்றைய தினம், தனது புதிய அரசியல் இயக்கத்தை அறிவித்தார் அண்ணாமலை. “We The Leaders” என்ற பெயரில் தொடங்கி உள்ள புதிய அரசியல் இயக்கத்தில் இணைபவர்களுக்கான இணைதள முகவரியையும் அவர் அறிவித்தார். இந்தநிலையில், அண்ணாமலையில் புதிய அரசியல் இயக்கத்தில் தமிழக பாஜகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்தனர். அண்ணாமலையின் புதிய இயக்கத்தால்…
அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படவில்லையென்றால் ஈரானை கடுமையாக தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து பிப்ரவரி 28ம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தியது. அமெரிக்க தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர். இதனிடையே சர்வதேச எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தநிலையில், மோதலை தடுக்க அமைதிப் பேச்சுவார்த்தை அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பும் நிபந்தனைகளை விதித்ததன் காரணமாக முன்னேற்றம் ஏற்படாமல் தாமதமானது. இருப்பினும், அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் விரைவில் கையெழுத்திடும் என…
தமிழக மக்களின் நலனுக்காக ஒன்றுபட்டு பயணிப்போம், நல்லதை செய்வோம் என்று முதலமைச்சர் விஜய் உறுதி அளித்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் 2 வது முறையாக நேற்று (ஜூன் 10) டெல்லி பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளார். இதனிடையே டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக முதன்முறையாக சந்தித்தார். பின்னர், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். இதையடுத்து, இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரையும் அவர் சந்தித்தார். பின்னர், ஐடிஓ பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவை சந்தித்தார். அப்போது,…
உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து திருவிழா இன்று (ஜூன் 11) தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு தொடங்கும் முதல் ஆட்டத்தில் மெக்சிகோ- தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. மெக்சிகோ நாட்டின் புகழ்பெற்ற ‘மெக்சிகோ சிட்டி மைதானத்தில்’ தொடக்க விழா மற்றும் மெக்சிகோ – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடைபெறுகிறது. அடுத்த போட்டியில் தென்கொரியா- செக் குடியரசு சந்திக்கின்றன. இந்த முறை இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரானது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய 3 வடஅமெரிக்க நாடுகளில் கூட்டாக நடத்தப்படுகிறது. இந்த 3 நாடுகளில் 16 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று தொடங்கும் இந்த கால்பந்து திருவிழா, ஜூலை 19 வரை மொத்தம் 39 நாட்களுக்கு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. முந்தைய தொடர்களைப் போல் இல்லாமல், கால்பந்து போட்டிகள் வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு 48…