Author: Editor web1
தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கரு.நாகராஜன், தமிழ்நாடு மக்கள் எதிர்பார்க்கும் அறிவுசார்ந்த தலைமை அண்ணாமலையிடம் தான் உள்ளதாக தெரிவித்தார். குக்கிராமங்கள் வரை பாஜகவை கொண்டு சென்ற ஆற்றமிக்கத் தலைவர் அண்ணாமலை என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து துறைகளில் துணிச்சலாக போராடக்கூடிய அண்ணாமலை போன்ற தலைவர்களைத் தான் தமிழ்நாடு மக்கள் எதிர்பார்ப்பதாகவும், இளைஞர்களின், பெண்களின் ஆதரவு பெற்ற அண்ணாமலைக்கு அணில் போன்று உதவி செய்வதற்காக பாஜகவில் இருந்து விலகி அவருடைய இயக்கத்தில் இணைந்திருப்பதாகவும் கரு.நாகராஜன் தெரிவித்தார். பாஜகவில் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை கடந்த 2ம் தேதி டெல்லியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து தனது நிலையை விளக்கினார். இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக உடனடியாக டெல்லி வருமாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைக்கப்பட்டார். இந்தநிலையில், அண்ணாமலையில் ராஜினாமா…
உள்ளாட்சித் தேர்தலுக்காக கூடுதல் சின்னங்களை ஒதுக்கீடு செய்து மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பல அதிரடி மாற்றங்களை தந்துள்ளது. 60 ஆண்டு கால தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்தனர். முதல்முறையாக தேர்தல் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றநிலையில், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத சூழலில், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. அண்மையில் வார்டு வரையரை உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது. இந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்காக கூடுதல் சுயேட்சை சின்னங்களை பயன்படுத்தும் நடவடிக்கைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. 30க்கும் அதிகமான வேட்பாளர்கள் உள்ளாட்சி…
திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். திருச்சி கல்மந்தை பகுதியை சேர்ந்த 14வயது சிறுமி ஒருவர், நேற்று (ஜூன் 3) மாலை திருநங்கையான தனது அக்காவை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, சம்பந்தப்பட்ட திருநங்கையை சிவகங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக மாரிசெல்வன் என்ற கார் ஓட்டுநர் அங்கு வந்துள்ளார். காரில் சிறிது தூரம் சென்று வரலாம் எனக்கூறி மாரிசெல்வன் சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பிறகு நீண்ட நேரம் கழித்து, சிறுமியை கீரைக்கடை பகுதியில் மாரிசெல்வன் இறக்கிவிட்டுள்ளார். சுயநினைவின்றி காயங்களுடன் இருந்த சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாரிசெல்வனை மடக்கிப்பிடித்த அங்கிருந்தவர்கள், தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடத்திய விசாரணையில், சிறுமிக்கு மாரிசெல்வன், குடிக்க தந்த குளிர்பானத்தை அருந்தியதும், சுயநினைவை இழந்த…
அதிமுக தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடர்ந்த மனுக்கள் திரும்ப பெறுவதாக தெரிவித்ததையடுத்து, அனைத்து வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் 2022 ஜூன் 23ம் தேதி நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் வைரமுத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தடை விதிக்க மறுத்து விட்டார். அந்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை மட்டும் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரித்ததுடன், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தநிலையில், ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு…
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முக்கிய கோப்புகள் அடங்கிய 10க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் மாயமான சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் மாயமாகி உள்ளது. இதுதொடர்பாக சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாயானதாக கூறப்படும் கோப்புகளில் நிலக்கரி வாங்கியது, டெண்டர்கள், மின்மாற்றிகள் வாங்கியது தொடர்பான தரவுகள் இருக்கலாம் என்றும் சுமார் 10க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போய் உள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான குழுவினரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். மே மாதம் 16 மற்றும் 17 ஆகிய வார இறுதி நாட்களில், அலுவலகத்தில் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே இருந்த சூழலில் இந்த திருட்டு நடைபெற்றதாக கூறப்படுகிறது. மே 20ம் தேதி தான் கணினிகளில் இருந்த திட்ட கோப்புகள் மற்றும்…
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் விட்டுக் கொடுக்காது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகரில் உள்ள தமது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் காவல்துறை கட்டமைப்பு சரி இல்லாமல் போனதால் தான் தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை சரி செய்ய தற்போதுள்ள அரசுக்கு கால அவகாசம் தேவை என்றும் இவற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டார். இந்த கடுமையான பிரச்சினையை ஒரு மாதமே ஆன அரசிடம் கேட்பது தவறான செயல் என்றும் கடந்த 5 ஆண்டுகளில் இந்த கேள்வியை நாம் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்றார். தமிழ்நாட்டில் 717 மதுபானக் கடைகளை மூடும் விஷயத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்த…
இந்தியத் திரை இசையில் மலையளவு சாதனைகளைத் தனது காந்தக் குரலால் நிகழ்த்தி, தனித்துவமாக ஜொலித்த ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி-க்கு இன்று 80வது பிறந்தநாள். ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஹரிகதை கலைஞரான எஸ்.பி. சாம்பமூர்த்தி, சகுந்தலா தம்பதிக்கு மகனாக 1946 ஜூன் 4ம் தேதி பிறந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். சிறுவயதில் இருந்தே எஸ்.பி.பி-க்கு இசையின் மீது நாட்டம் இருந்தாலும், தனது மகன் ஒரு பொறியாளராக வேண்டும் என்பதே அவரது தந்தையின் ஆசை. இதனால் எஸ்.பி.பி சென்னையில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். கல்லூரிக் காலத்தில் பல்வேறு இசைப் போட்டிகளில் கலந்து கொண்டு தனது இசைத் தாகத்தை தணித்து, பல்வேறு பரிசுகளையும் அவர் குவித்தார். எஸ்பிபி திரையுலகில் முதன்முதலில் பாடியது ஒரு தெலுங்குப் பாடலாகும். 1966 டிசம்பர் 15ல் வெளியான ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா’ என்ற திரைப்படத்தில் “ஏ நிஜமு நம்மோலி” என்ற பாடல் மூலம் திரையுலகில் தடம் பதித்தார். 1966-லேயே ‘நகரே இதே ஸ்வர்கா’…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக அவர் சந்தித்து பேசினார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வரும் முதலமைச்சர் விஜய்க்கு, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மக்களின் நலன்களை காக்கும் விதமாக மேற்கொள்ள உள்ள சிறப்பான சேவைக்கும், பணிகளுக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் முதலமைச்சரிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். இதற்கு முதல்வர் விஜய் தனது நன்றியை கூறியதாகவும் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்தார். எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தில் அவரது அபாரமான நடிப்பை முதலமைச்சர் விஜய் வெகுவாகப் பாராட்டினார். அப்படத்திற்காக அவருக்குக் கிடைத்த தேசிய விருதுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். நீண்ட நேரம் நீடித்த இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் இடையே, நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் துணைவியார் திருமதி ஷீலா பாஸ்கர் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு…
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 2026-2027ம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் அனைத்தும் இன்று (ஜூன் 4) முதல் திட்டமிட்டபடி முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். கடுமையான வெயில் நிலவி வந்ததன் காரணமாக கடந்த 1ம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது பெற்றோர்கள், கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து, அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியாக இன்று (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என அனைத்தும் இன்று திறக்கப்பட்டுள்ளன. பள்ளிக்குத் திரும்பிய மாணவர்களை ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் இனிப்புகள் மற்றும் மலர்கள் வழங்கி இன்முகத்தோடு வரவேற்றனர். புதிய வகுப்பறை, புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் தங்களது நண்பர்களை மீண்டும் சந்தித்த மகிழ்ச்சி எனப் பள்ளி…
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த் தொற்று இன்னபிற நேரங்களில் அவசர கால பணிகளை கூடுதலாக மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் கடலூர் – என்.ஆனந்த் (ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை) சென்னை, திருவண்ணாமலை – ஆதவ் அர்ஜூனா (பொதுப்பணி, விளையாட்டுத்துறை) மயிலாடுதுறை – வெங்கடரமணன் (உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர்) திருவள்ளூர் – ரா.குமார் (செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை) திருநெல்வேலி – மரிய வில்சன் (நிதி, திட்டம், வளர்ச்சித் துறை) பெரம்பலூர் – ராஜ்மோகன் (பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி, விளம்பரத்துறை) காஞ்சிபுரம் – தென்னரசு (வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை) திருப்பத்தூர் – ரஞ்சித் குமார் (வனத்துறை) செங்கல்பட்டு – சரத்குமார் (மனித வள மேலாண்மைத்துறை) கள்ளக்குறிச்சி – வன்னி அரசு…