Author: Editor web1

தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவை பதவியேற்றதைத் தொடர்ந்து, தற்போது அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ மூப்பு நிலைப் பட்டியல் (Seniority List) வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. மே 10ம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன் என மேலும் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதையடுத்து மே 21ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின்போது 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆட்சி அமைக்க ஆதரவு தந்த காங்கிரஸ், ஐயூஎம்எல் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அமைச்சரவை இடம் வழங்கப்பட்டது. காங்கிரசுக்கு 2, ஐயூஎம்எல் மற்றும் விசிக-வுக்கு தலா ஒரு இடங்கள் அமைச்சரவையில் தரப்பட்டன. ஆக மொத்தம் தவெக அமைச்சரவையின் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்தது. இந்தநிலையில், தமிழ்நாடு…

Read More

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, 22 மாவட்டங்களில் இன்று (ஜூன் 2) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கேரளம் மற்றும் அதனையொட்டி தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், தென்கிழக்கு அரபிக் கடல் அதனையொட்டி லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் மலைப் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் கொங்கு மற்றும் உள் மாவட்டங்களான ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, வட மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 22 மாவட்டங்களுக்கு இன்று (ஜூன்…

Read More

கொரிய சுற்றுலா அமைப்பின் (KTO) சார்பில், கொரிய சுற்றுலாவிற்கான ‘கவுரவத் தூதராக’ பிரபல நடிகை பிரியங்கா மோகன் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கொரிய கலாச்சாரத்தை இந்திய ரசிகர்களுடன் இணைக்கும் முக்கியப் பணியில் ஈடுபடத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன் இந்த நியமனம் குறித்துப் பிரியங்கா மோகன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய கொரிய அரசாங்கத்திற்கும், கொரிய சுற்றுலா அமைப்பிற்கும் (KTO) தனது மனமார்ந்த நன்றிகளை அவர் தெரிவித்துள்ளார். நடிகை பிரியங்கா மோகனின் திரைப் பயணத்தில் கிடைத்திருக்கும் இந்த உலகளாவிய அங்கீகாரம், அவரது திறமைக்குக் கிடைத்த மற்றொரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Read More

தவெக அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், “ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படிதான் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று மழுப்பலான பதில் ஒன்றை அளித்துள்ளார். இந்நிலையில் “வாக்கு அறுவடை “ முடிந்ததும் இப்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றுவதாகும் என முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள சமூகவலைதளப்பதிவில்,தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வாராத ‘ரிசர்வ் வங்கி விதிமுறைகள்’, மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது மட்டும் எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றன? இது நிர்வாகத் திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா? இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி தான் “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது”…

Read More

நீட்-யுஜி (NEET-UG) மறுதேர்வை கணினி அடிப்படையிலான (CBT) முறையில் நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. தேசிய தேர்வு முகமை (NTA) ஏற்கனவே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், தற்போதைய சூழலில் மறுதேர்வை CBT முறையில் நடத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அரவிந்த் குமார் அமர்வு, ஆர்.ஜே.டி. எம்.பி. சுதாகர் சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சத்யம் சிங் ராஜ்புத், மறுதேர்வை CBT முறையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த நீதிமன்றம், “NTA ஏற்கனவே பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படுகிறது. இந்த சூழலில் CBT முறையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது” என்று தெரிவித்தது. கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட்-யுஜி தேர்வில் வினாத்தாள்…

Read More

முதல்வர் விஜயின் இன்றைய உரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக, அவர் தனது ஆட்சியின் குறைபாடுகளுக்கு பொறுப்பேற்காமல் முந்தைய அரசுகளின் மீது பழிசுமத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுயநல தற்பெருமை பேச்சு. இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இதுதான். தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார். சட்டம் – ஒழுங்கை சீர்செய்ய காவல் துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா? என்ன புது உருட்டாக இருக்கிறது இதெல்லாம்? இவர் மீது பழிபோடுகிறார்களாம். தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு தெரிந்ததா? இது சுயநல தற்பெருமை இல்லாமல் வேறென்ன?…

Read More

தமிழக அரசியலில்  கூட்டணி கணக்குகள் வேகமாக மாறி வரும் நிலையில், மதிமுகவின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தம்மை வெற்றி பெற வைத்ததற்காக அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று திருச்சி வந்தார். அப்போது விமான நிலையம் அருகே அரசு மற்றும் காவல்துறை சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மதிமுக எம்.பி. துரை வைகோ நேரில் சென்று  முதல்வர் விஜய்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இது வழக்கமான அரசியல் நாகரிகமாகக் கருதப்பட்டாலும், பின்னர் அவர் தெரிவித்த கருத்துதான் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விஜய் சந்திப்பும் மதிமுகவின்  ஆதங்கமும் “நாங்கள் துரதிருஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டோம்” என்று துரை வைகோ கூறியதாக வெளியான தகவல்கள், திமுக கூட்டணியில் மதிமுக உண்மையில் திருப்தியாக இருக்கிறதா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளன. ஏற்கெனவே முதலமைச்சர் விஜய் மதிமுக…

Read More

நாட்டின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் 2026 மே மாதத்தில் 3.2 சதவீதம் உயர்ந்து ரூ.1.94 லட்சம் கோடியை கடந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.88 லட்சம் கோடியாக இருந்தது. மத்திய ஜிஎஸ்டி (CGST) வசூல் ரூ.37,397 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி (SGST) வசூல் ரூ.45,143 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) வசூல் ரூ.51,990 கோடியாகவும் பதிவாகியுள்ளது. உள்நாட்டு பொருட்களின் வரிக்குட்பட்ட விநியோகம் 26.9 சதவீதமும், சேவைத் துறையின் வரிக்குட்பட்ட பரிவர்த்தனைகள் 22.2 சதவீதமும் உயர்ந்துள்ளன. இது நாட்டின் உள்நாட்டு நுகர்வு மற்றும் தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதை காட்டுவதாகக் கூறப்படுகிறது. இறக்குமதிகளின் மீதான ஐஜிஎஸ்டி வசூல் 19.1 சதவீதம் அதிகரித்து ரூ.59,654 கோடியாக உயர்ந்துள்ளது. இது தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளின் விரிவாக்கத்தைக் காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மே மாதத்தில் ஜிஎஸ்டி திருப்பிச் செலுத்தும் தொகை ரூ.27,281 கோடியாக இருந்தது.…

Read More

தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 2 முதல் 3 நாட்களில் தொடங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஜூன் 3 முதல் 7-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் மணிக்கு 40 முதல்…

Read More

12-ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தேர்வுத் தாள்களை ஆன்லைனில் மதிப்பீடு செய்ய பயன்படுத்தப்படும் OSM (On-Screen Marking) அமைப்பில் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததை சிபிஎஸ்இ (CBSE) வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. சிபிஎஸ்இ பயன்படுத்தி வந்த OSM இணையதளத்தில் தரவு பாதுகாப்பு தொடர்பான பலவீனங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, ‘அமேசான் கிளவுட் ஸ்டோரேஜ்’ தளத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக 19 வயதான ஹேக்கர் நிசர்கா அதிகாரி ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்கிடையில், டெல்லியைச் சேர்ந்த வேதாந்தா என்ற மாணவர், தனது மதிப்பெண்களில் சந்தேகம் எழுந்ததால் விடைத்தாளின் நகலை பெற்றபோது, அதிலிருந்த கையெழுத்து தன்னுடையது அல்ல என்றும், அது தனது விடைத்தாளே அல்ல என்றும் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிபிஎஸ்இ நடத்திய உள்விசாரணையில் OSM அமைப்பில் சில குளறுபடிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, OSM அமைப்பின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக…

Read More