Author: Editor web1
தமிழக டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர். அண்மையில் தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் புதிய டிஜிபியாக அவர் இன்று (ஜூன் 3) பதவியேற்றார். இந்தநிலையில் சட்டமன்றத் தேர்தலின் போது, தமிழக டிஜிபியாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டிருந்த சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று சிறைத்துறை கூடுதல் டிஜிபி-யாக இருந்த கே.சங்கர் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபி-யாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இரு வேறு இடங்களில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில், பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தருவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த மணி என்ற கூலி தொழிலாளி சிறுமியை காவல் நிலையம் அருகில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியில் சிறுமிக்கு மணி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி கூறியதையடுத்து அவர்கள் மணியை தேடி உள்ளனர். அவர் கிடைக்காத சூழ்நிலையில் இன்று (ஜூன் 3) அதிகாலையில் மணியை கண்டுபிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதேபோல் குமாரபாளையம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர்…
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கலைஞரின் பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. கலைஞரின் நினைவிடத்தில் ‘புத்தெழுச்சி நாள் விழா- அகவை 103’ என்ற வாசகத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா நினைவிடத்தில் “தம்பி கருணாநிதியின் உழைப்பு இரவும் பகலும் அறியாதது” என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது. இந்தநிலையில், கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். உடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திமுக…
தமிழக முதலமைச்சர் விஜய்யை சந்தித்த திரைப்பட இயக்குனர் சுந்தர் சி, அவரது மனைவி நடிகை குஷ்பு ஆகியோர் தங்களது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினர். சென்னையில் நீலாங்கரை இல்லத்தில் முதலமைச்சர் விஜய்யை திரைப்பட இயக்குனர் சுந்தர் சி, அவரது மனைவி நடிகை குஷ்பு ஆகியோர் சந்தித்தனர். அப்போது, தங்கள் மகள் மற்றும் ஷ்ரவண் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினர். இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத நாள்! எங்களது அன்பிற்குரிய சகோதரரும், தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சருமான திரு. @actorvijay அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, எங்கள் மகள் மற்றும் திரு. ஷ்ரவண் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினோம். அவரைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் இதயம் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிறைகிறது. குழந்தைகள் அனைவரும் மிகுந்த உற்சாகமடைந்து, அவரிடமிருந்து தங்கள் கண்களை எடுக்கவே இல்லை. தனது பிஸியான பணிச்சுமைக்கு இடையிலும்,…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் புத்தெழுச்சி நாள் விழா அகவை 103 என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 3) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றிய கலைஞர், சமூக நீதி, தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழகத்தின் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஆற்றிய பங்களிப்புகள் ஈடுஇணையற்றவை. இந்தநிலையில், கலைஞரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் புத்தெழுச்சி நாள் விழா அகவை 103 என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும், தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில், “தம்பி கருணாநிதியின் உழைப்பு இரவும் பகலும் அறியாதது” என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வாசகம் எழுதப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை முதலே அரசியல் தலைவர்கள், அரசுப் பிரதிநிதிகள்…
சென்னையில் திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் கேஸ் பலூன் சிலிண்டர் வெடித்ததில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா தற்போது கில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல்வேறு இடங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள மில்லில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் கில்லர் படப்பிடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜூன் 3) அதிகாலை 3.30 மணியளவில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த போது அங்கிருந்த கேஸ் பலூன் சிலிண்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றி வந்த மதுரவாயல் பகுதியை சேர்ந்த மதன் (26) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குன்றத்தூரை சேர்ந்த சக்திவேல் (27), மதுரவாயலை சேர்ந்த சூர்யா…
சென்னையில் மது பாரில் ஏற்பட்ட தகராறில் அதிவேகமாக காரை மோதச் செய்த சம்பவத்தில் இளம் பெண் உயிரிழந்தநிலையில், படுகாயமடைந்த சிகிச்சை பெற்று வந்த மற்றொரு சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள மது பாரில் நடனம் ஆடிய போது மே 31ம் தேதி இரவு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இளம்பெண் யான்சி தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருதரப்பினரையும் பவுன்சர்கள் வெளியேற்றி உள்ளனர். வெளியே வந்த போதும், இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து, யான்சி மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இருப்பினும், யான்சியை பின்தொடர்ந்தவர்கள், இருசக்கர வாகனத்தை வேகமாக இடித்து தள்ளியதில் தூக்கி வீசப்பட்ட ஜான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற 17 வயது சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி இந்த சிறுமியும் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கோயம்பேடு போலீசார்,…
தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாள் இன்று. ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, தனது அறிவாற்றலாலும், தளராத உழைப்பாலும் தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உயர்ந்த கலைஞரின் வாழ்க்கைப் பயணம், ஒரு காவியம். 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி திருக்குவளையில் பிறந்த கலைஞர் கருணாநிதி, தனது இளம் வயதிலேயே சமூக மாற்றத்தின் மீது ஆர்வம் கொண்டார். ‘முரசொலி’ இதழைத் தொடங்கி, அதன் மூலம் தனது கொள்கைப் பரப்புரையைச் செய்தார். சினிமாத்துறையில் வசனகர்த்தாவாக நுழைந்த அவர், ‘பராசக்தி’ உள்ளிட்ட படங்களின் மூலம் சமூக அநீதிகளைத் திரையில் தோலுரித்துக் காட்டினார். வசனங்கள் மூலமே ஒரு தலைமுறையையே மாற்றியமைத்தவர் அவர். தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் வழியில் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1957-ல் குளித்தலை தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி, தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து…
தமிழக முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார். திருச்சியில் நடைபெற்ற தவெக நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த நடிகர் விஜய்யைக் ஆர்.பி.உதயக்குமார் கடுமையாகச் சாடினார். எந்தவித உழைப்பும், மக்கள் போராட்டமும் இல்லாமல் நேரடியாகத் தேர்தல் களத்தைச் சந்தித்துவிட்டு, தம்பி விஜய் இப்போது வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். “தமிழக மக்களுக்கு நீங்கள் ஆற்றிய உழைப்பு என்ன, போராட்டக் களம் என்ன என்பதை ஒரே ஒருமுறை பட்டியலிட்டுக் காட்டுங்கள்” என்று அவர் சவால் விடுத்தார். “கஜா புயல், சுனாமி மற்றும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய கொரோனா பேரிடர் காலங்களில் நீங்கள் எங்கு போனீர்கள், மாங்காய் பறிக்கப் போனீர்களா? தமிழ்நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற நீங்கள் எப்போதாவது களத்தில் இறங்கிப் பாதுகாப்பு அரணாக நின்றிருக்கிறீர்களா? முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு போன்ற சட்டப் போராட்டங்களில் தமிழக உரிமைகளை மீட்க நீங்கள் என்ன பாடுபட்டீர்கள்?…
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் இன்று (ஜூன் 2). இந்தியத் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. பாமர மக்களின் இதயத் துடிப்பையும், பட்டிதொட்டியெங்கும் உள்ள உணர்வுகளையும் தனது இசையால் கட்டிப்போட்ட மாபெரும் கலைஞர். இசைஞானியின் திரையுலகப் பயணம் பற்றி ஒரு தொகுப்பை பார்க்கலாம்… 70-களின் மத்தியில் தமிழ் திரை இசையை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்ல தயாராக காத்திருந்தார் ஒரு இளைஞர். அந்நேரம் திரைப்படத் தயாரிப்பாளரும், கதையாசிரியருமான பஞ்சு அருணாசலம் ஒரு கிராமத்துக் கதையை உருவாக்கினார். அதற்கு மண்ணின் வாசம் மாறாத புதிய இசை தேவைப்பட்டதால், நாடக மேடைகளில் பின்னணி இசை அமைத்துக் கொண்டிருந்த ‘ராசையா’ என்ற இளைஞனை அழைத்தார். அவர்தான் பின்னாளில் தமிழ் சினிமாவின் முகவரியாக மாறிய இளையராஜா. நாடோடி இசையையும், கிராமிய மணத்தையும் தமிழ் சினிமாவில் அழுத்தமாகப் பதியச் செய்தார். “அன்னக்கிளி உன்னைத் தேடுதே” என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் பக்கம் திருப்பினார். 80-களில்…