Author: Editor web1
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்தநிலையில், மக்களவை சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு உரையாடினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி இன்று (டிச. 19) வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் SIR மற்றும் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், காப்பீடு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு, அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட, விபி ஜி ராம் ஜி மசோதா உள்ளிட்டவை விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறும்போது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எம்.பி.க்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்தநிலையில், சபாநாயகர் ஓம்பிர்லா இன்று (டிச. 19) தேநீர் விருந்து அளித்தார். இந்த முறை எதிர்க்கட்சி எம்பி.க்களும் விருந்தில் பங்கேற்றனர்.…
காவல்துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, ஆர்டர்லிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பது பற்றி நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், எந்த காவல்துறை அதிகாரிகள் தரப்பிலும், ஆர்டர்லிகள் யாரும் இல்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று (டிச. 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியதை நீதிபதிகள் பாராட்டினர். இருப்பினும், ஆர்டர்லிகளாக சீருடை காவலர்கள் பணியாற்றி வருவதாக செய்தித்தாள்களிலும்,…
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று (டிச. 19) தீர்ப்பு வழங்குகிறது. கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழ்நாடு அரசு, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. அதனை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்தது.…
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்தநிலையில், தயாரிக்கப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று (டிச. 19) வெளியிடுகிறது. 2026ல் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. நவம்பர் 4ம் தேதி துவங்கிய வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகள் டிசம்பர் 14ம் தேதி நிறைவடைந்தது. வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகள், 100 சதவீதம் முடிவடைந்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று (டிச. 19) வெளியிட உள்ளது. இதனிடையே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், SIR பணிகள் சரியாக நடைபெறவில்லை என கூறப்படும் நிலையில், இன்று வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில், குளறுபடிகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் உரிய…
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஒத்தி வைத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று (டிச. 18) 5வது நாளாக நடந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை நடைபெற்று நிறைவடைந்தது. இதனையடுத்து, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் …
பிரதமர் மோடிக்கு ஓமனின் உயரிய ‘ஆர்டர் ஆப் ஓமன்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதலில், ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்தார். இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி உடனான சந்திப்பில், பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து எத்தியோப்பியாவின் ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ என்ற உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் அபி அகமது வழங்கி கவுரவித்தார். ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியா பயணத்தை…
டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதியை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி மாலை டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான NIA விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை மருத்துவர்கள் உட்பட 8 பயங்கரவாதிகளை NIA கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 9வது நபரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தை சேர்ந்த யாசிர் அகமது தர் என்ற நபரை டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர். கார் குண்டுவெடிப்பு சதியில் யாசிர் அகமதுக்கு முக்கிய பங்கு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக NIA அதிகாரிகள்…
கிறிஸ்துமஸ் பரிசாக அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 17ம் தேதி நாட்டு மக்களுக்கு அதிபர் டிரம்ப் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே தெற்கு எல்லையில் நடந்த ஊடுருவல்களை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார். கடந்த 7 மாதங்களாக சட்டவிரோதமாக ஒரு வெளிநாட்டினரைக் கூட அமெரிக்காவுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறிய அதிபர் டிரம்ப், காசா போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்களின் சேவை மற்றும் தியாகத்தை போற்றும் வகையில், கிறிஸ்துமஸ் பரிசாக வீரர்களுக்கு ஈவுத் தொகை வழங்க உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அந்த வகையில் 14.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமசுக்கு…
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து, சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி உள்ளது. கடந்த 12ம் தேதியில் இருந்து தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உச்சத்தை அடைந்து வருகிறது. அந்தவகையில் கடந்த 15ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. இதன்மூலம் ஒரு லட்சம் ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை தங்கம் விலை தொட்டது. இந்தநிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து, ரூ.12,440-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.224-க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்து, ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை கைப்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே போரை நிறுத்தி, அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், இருநாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சில் தீர்வு காணாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ரஷ்ய ராணுவ தளபதிகளின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்று பேசிய அதிபர் புதின், பேச்சுவார்த்தைகள் மூலம் இருதரப்பு மோதலை தீர்ப்பதை ரஷ்யா விரும்புவதாக தெரிவித்தார். ராஜாங்க ரீதியில் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தொடர்ந்து முயற்சிக்கும் என்று குறிப்பிட்ட அதிபர் புதின், ராஜதந்திர முயற்சிகள் தடைபட்டால், ரஷ்யா ராணுவ பலத்தை நம்ப தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து…