Author: Editor web1

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த இயக்குநர்களில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா முதன்மையானவர். கதைக்களங்களை மட்டும் மாற்றாமல், அறிமுகம் செய்யும் ஒவ்வொரு கலைஞர்களையும், ஒரு நட்சத்திரமாக மாற்றும் வித்தை அவரிடம் இருந்தது. இவரது அறிமுகங்கள் தமிழ் திரையுலகின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்தன. பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தனர். அவர் அறிமுகப்படுத்திய நடிகைகளில் பெரும்பாலோர் ‘R’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்டிருந்தது ஒரு சுவாரஸ்யமான அம்சம். ராதிகா (கிழக்கே போகும் ரயில்), ராதா (அலைகள் ஓய்வதில்லை), ரேவதி (மண்வாசனை), ரதி அக்னிஹோத்ரி (புதிய வார்ப்புகள்), விஜயசாந்தி (கல்லுக்குள் ஈரம்), ரேகா (கடலோரக் கவிதைகள்) சுகன்யா (புது நெல்லு புது நாத்து) ஆகியோர் பாரதிராஜாவால் அடையாளம் காணப்பட்டு திரையில் ஜொலித்த நட்சத்திரங்கள். பாரதிராஜா நடிகர்களை உருவாக்குவதில் மட்டுமல்ல, சிறந்த கலைஞர்களை உருவாக்குவதிலும் முன்னோடியாக இருந்தார். பல உதவி…

Read More

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று, ஒரு மாதத்தை நிறைவு செய்கிறது. நிர்வாகத்தை முறைப்படுத்துவதிலும், தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதிலும் இந்த ஒரு மாத காலத்தில் கவனம் செலுத்தியுள்ளது தவெக அரசு. மக்கள் அளித்த அதிர்ச்சி வைத்தியம் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்திற்கான தீர்ப்பை அளித்த மக்கள், அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். 60 ஆண்டுகளாக மாறிமாறி இருந்து வந்த திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு மாற்றாக, 2024 பிப்ரவரி 2ம் தேதி விஜய் புதிதாக தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் ஆதரவளித்து பெருவாரியாக வெற்றி பெறச் செய்தனர். தவெக 108 இடங்களிலும், திமுக 59 இடங்களிலும் (திமுக தலைமையிலான கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது), அதிமுக 47 இடங்களிலும் (அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது) வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்காதநிலையில், காங்கிரஸ்,…

Read More

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷ்யாவின் இளம் நட்சத்திரம் மிரா ஆண்ட்ரீவா சாம்பியன் பட்டம் வென்று தனது முதல் கிராண்ட் ஸ்லாம் வெற்றியைப் பதிவு செய்தார். கிராண்ட் ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான இறுதிப் போட்டியில், தரவரிசையில் 8-வது இடம் வகிக்கும் ரஷ்யாவின் மிரா ஆன்ட்ரீவாவும், தகுதி நிலை வீராங்கனையான போலந்தின் மஜா சாலின்காவும் மோதினர். இந்தப் போட்டியில் மிரா ஆண்ட்ரீவா தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை இழந்தாலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் செட்களில் சிறப்பாக விளையாடிய அவர், தனது துல்லியமான சர்வீஸ் மற்றும் ரிட்டர்ன் மூலம் சாலின்காவை நிலைகுலையச் செய்தார். முடிவில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சாலின்காவை வீழ்த்தி மிரா ஆன்ட்ரீவா பட்டம் வென்றார். 19 வயதிலேயே கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மிகச்…

Read More

மத்திய கிழக்கில் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானின் 2 டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. அணுசக்தி பயன்பாடு விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதலை நடத்தியது. இந்தப் போரில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் தலைவர்கள் பலர் உயிரிழந்தனர். இருதரப்புக்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்தநிலையில், அமைதி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதையடுத்து, தற்காலிக போர் நிறுத்தம் நிலவி வருகிறது. இந்தநிலையில், சர்வதேச கடல் வணிகத்திற்கு மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்பகுதியில் சர்வதேச கடல் போக்குவரத்துக்கும், வணிகக் கப்பல்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறி, ஈரான் அனுப்பிய 2 டிரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு…

Read More

டாஸ்மாக்கில் வருவாய் சீரமைப்பு மாற்றத்தை செய்வதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக ரூ.1,200 கோடி வருவாய் வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டாஸ்மாக் மதுபான விற்பனையில் கணக்கில் வராமல், மறைமுகமாக வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணங்களைச் சீரமைத்து, அந்தத் தொகையை நேரடியாக அரசு கருவூலத்திற்கு வருவாயாக மாற்ற தமிழ்நாடு அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறது. இதன் மூலம் அரசிற்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களின் அதிகாரப்பூர்வ விலையை விட கூடுதலாகப் பணம் வசூலிக்கப்படுவது நீண்டகாலமாக சர்ச்சையாக உள்ளது. இந்த நடைமுறை குறித்து அரசு புதிய மாற்றங்களை கொண்டு வர உள்ளது. இதுவரை மதுபான வகைகளுக்கு ஏற்ப, பெட்டிகளுக்கு (Cases) தலா ரூ.90, பீர் பெட்டிகளுக்கு ரூ.40 மற்றும் ஒயின் பெட்டிகளுக்கு ரூ.20 வீதம் கூடுதல் கட்டணமாக…

Read More

கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் #rajini173 படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குவது உறுதியாகி உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘ரஜினி 173’. இப்படத்தின் இயக்குநர் குறித்த நீண்ட நாள் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குவது தற்போது உறுதியாகியுள்ளது. அஷ்வத் மாரிமுத்துவை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்கமல் நிறுவனம் பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று இப்படத்திற்கான Photoshoot நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுவீச்சில் தொடங்கத் தயாராகிவிட்டதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சுந்தர்.சி ‘ரஜினி 173’ படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை…

Read More

மலையாளத் திரையுலக நடிகர் சலீம் குமார் உடல்நலக்குறைவு காரணமானார். தேசிய விருது பெற்ற நடிகரும், மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகருமான சலீம் குமார் (56), உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவு மலையாள மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாகக் கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த சலீம் குமார், முன்னதாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். இந்நிலையில், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூன் 6) இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. கேரள மாநிலம், வட பறவூரைச் சேர்ந்த சலீம் குமார், மிமிக்ரி கலைஞராக தனது கலைப்பயணத்தைத்…

Read More

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.29 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களின் காரணமாக, வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ. 928.50-ல் இருந்து ரூ.957.50-ஆக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. டெல்லியில் ரூ.913.00-ல் இருந்து ரூ.942.00-ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல் சூழல் காரணமாக, எரிசக்தி விநியோகச் சங்கிலியில் (Supply Chain) பெரும் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இது உலகளவில் எரிபொருள் தட்டுப்பாட்டையும் விலை உயர்வும் உருவாக்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படும் இரண்டாவது விலை உயர்வு…

Read More

தவறான ஆட்சி மற்றும் நிர்வாகம் காரணமாக காங்கிரசை மக்கள் ஓரம்கட்டி உள்ளதாக பிரதமர் மோடி சாடி உள்ளார். குஜராத் மாநிலம் சூரத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ரூ.18,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். பின்னர், அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 12 ஆண்டுகளாக நாட்டில் குழப்பத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருவதாக விமர்சித்தார். ஆனால், நாட்டின் வாக்காளர்கள் அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டி வருவதாக தெரிவித்தார். குஜராத் மக்கள் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை அரசியலில் ஓரம்கட்டிவிட்டதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும் மக்கள் அவர்களது தவறான நிர்வாகத்தால் சலிப்படைந்து போய் உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்களிடையே எழுந்த கடுமையான அதிருப்தி காரணமாகவே, அங்கு முதலமைச்சரை மாற்ற வேண்டிய கட்டாயம் அந்த கட்சிக்கு ஏற்பட்டதாகவும்…

Read More

டெல்லியில் இருந்து சென்னை வந்த அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜகவில் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை கடந்த 2ம் தேதி டெல்லியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து தனது நிலையை விளக்கினார். இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக உடனடியாக டெல்லி வருமாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைக்கப்பட்டார். அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சி பலனளிக்கவில்லை என கூறப்பட்டது. இந்தநிலையில், அண்ணாமலையின் ராஜினாமா முடிவை ஏற்பதாக பாஜக தேசியத் தலைமை இன்று (ஜூன் 5) அறிவித்தது. இதையடுத்து, காணொலி வாயிலாக பேசிய அண்ணாமலை, புதிய இயக்கத்தை தொடங்க இருப்பதாக அறிவித்தார். அடுத்து வர உள்ள தேர்தலில் கட்சி அமைத்து போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து தனது அரசியல் இயக்கத்தில் ஆதரவாளர்கள் இணைவதற்கான இணையதளப் பக்கத்தையும் அண்ணாமலை அறிவித்தார். அதில், தற்போதை நிலவரப்படி அண்ணாமலையில் இயக்கத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை…

Read More