Author: Editor web1

தமிழ்நாட்டில் இன்று 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை (சுமார் 38°C) கடந்து பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவ தொடங்கிய போதும், இன்னும் முழுமையாக மழைப் பொழிவு கிடைக்கப் பெறவில்லை. இதனிடையே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை கடுமையாகவே பதிவாகி வருகிறது. பகல் வேளையில் வெளியில் நடமாட முடியாத அளவில் அனல் காற்று வீசி, வாட்டி வதைத்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக 7 இடங்களில் இன்று வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. மதுரை விமான நிலையம் 103 டிகிரி பாரன்ஹீட் மதுரை நகரம் 103 டிகிரி பாரன்ஹீட் மீனம்பாக்கம் 102 டிகிரி பாரன்ஹீட் நுங்கம்பாக்கம் 102 டிகிரி பாரன்ஹீட் திருச்சி 101 டிகிரி பாரன்ஹீட் தஞ்சை 100 டிகிரி பாரன்ஹீட் நாகை 100 டிகிரி பாரன்ஹீட் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும், உள் மாவட்டங்களில் இயல்பை விட 2°C…

Read More

நெல்லை ரயில் நிலையத்தில் உள்ள பராமரிப்பு பணிமனையில் தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனடிப்படையில் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: கோவை – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (வ.எண். 16322): ஜூன் 20-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் (வ.எண். 16321): ஜூன் 20-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் (வ.எண். 16729): ஜூன் 26 முதல் ஜூன் 29 வரை ரத்து. புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் (வ.எண். 16730): ஜூன் 27 முதல் ஜூன் 30 வரை ரத்து. ராமேஸ்வரம் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வ.எண். 22621): ஜூன் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ரத்து. கன்னியாகுமரி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வ.எண். 22622): ஜூன் 28…

Read More

பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச ஏசியன் லெ மான்ஸ் கார் பந்தயத்தில் அஜித்குமாரின் ரேஸிங் அணி 13வது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தயத்திலும் பங்கேற்று, தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வருகிறார். ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற பெயரில் சொந்தமான பந்தய அணியையும் தொடங்கி, சர்வதேச பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இந்த அணி, துபால், ஸ்பெயின், இத்தாலி, அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் பங்கேற்று அஜித் பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தநிலையில், பிரான்ஸில் நடைபெற்ற  புகழ்பெற்ற ஏசியன் லெ மான்ஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி பங்கேற்றுள்ளது. இந்தப் கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்திய அணி என்ற பெருமையை ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி பெற்றுள்ளது. கடும் சவால்கள் நிறைந்த இந்த ரேஸில், மொத்தம் 62 கார்கள் களமிறங்கின. இதில் அஜித்குமாரின் அணி 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பந்தயத்தில் கலந்து…

Read More

தமிழக அரசியல் வரலாற்றில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய ஆளுமைகளுக்குப் பிறகு கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு மூன்றாவதாக முதலமைச்சர் விஜய் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். மிகவும் பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில், ஆன்மிக ரீதியாகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்தக் கோயிலுக்குத் தமிழக முதலமைச்சர்கள் செல்வது ஒரு நீண்டகாலப் பாரம்பரியமாக இருந்து வருகிறது. தமிழக முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று அம்மனைத் தரிசித்து சிறப்பு வழிபாடு நடத்தி உள்ளனர். தனது திரைப்பயணம் மற்றும் அரசியல் பயண காலகட்டங்களில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள ஆற்றல் வேண்டியும், உடல் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ய கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்  சென்றுள்ளார். அப்போது, ஒரு கிலோ எடையில் இரண்டரை அடி நீளமுள்ள தங்க வாள் ஒன்றை எம்ஜிஆர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். கடந்த 2004ம் ஆண்டு…

Read More

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், விக்ரம் நடிக்கும் 63வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ‘இருமுகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகள் கழித்து விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இத்திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில், இதற்காக விரிவான முன்தயாரிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதன் மூலம் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. “சீயான் 63” விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களையும் கவரும் வகையிலான உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இணைந்த முழுமையான விருந்தாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு…

Read More

பிரான்சில் நடைபெறும் ‘லெ மன்ஸ்’ (Le Mans) கார் பந்தயத் தொடரில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித்குமாருக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக அவரது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் அவருடன் தங்கி உள்ளனர். திரைத்துறையைத் தாண்டி கார் பந்தயங்களில் சர்வதேச அளவில் தடம் பதித்து வரும் அஜித்குமார், பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது பிரான்சில் நடைபெற உள்ள புகழ்பெற்ற ‘லெ மன்ஸ்’ (Le Mans) கார் பந்தயத் தொடரில் பங்கேற்க, தனது ‘அஜித்குமார் ரேசிங்’ (Ajith Kumar Racing – AKR) அணியினருடன் இணைந்து தீவிர கார் பந்தயப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் அவரது தாயார் மோகினி மணி காலமானநிலையில், பேரிழப்பில் இருந்து மீளாத கனத்த இதயத்துடன் மீண்டும் பந்தைய களத்திற்குத் திரும்பி உள்ளதாக தனது அதிகாரப்பூர்வ  பந்தய அணியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இந்தநிலையில், அஜித்துக்கு பக்கபலமாக இருக்கும் வகையில், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும்…

Read More

நாட்டில் உள்ள தன்னாட்சி அமைப்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் வகையில் பிரதமர் மோடி தனது ஆதரவாளர்களை மட்டுமே முக்கியப் பதவிகளில் அமர்த்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டி உள்ளார். நாட்டின் முக்கியப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பறிபோய்விட்டதாகக் மல்லிகார்ஜூன கார்கே கவலை தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது சட்டவிரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் உத்தரவு இல்லாமல் இது நடந்திருக்காது என்றும் மல்லிகார்ஜூன  கார்கே விமர்சித்துள்ளார். நாட்டின் மிக முக்கிய மற்றும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட உயர் பதவிகளில், தகுதியின் அடிப்படையில் அல்லாமல், பிரதமர் மோடியும் அவரது கட்சியும் தங்களது கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் நபர்களை மட்டுமே திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்து நியமிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். இதன் மூலம் தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்புகள் அனைத்தும் மத்திய…

Read More

கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாளை முதலமைச்சர் விஜய் காணிக்கையாக வழங்கி உள்ளார். டெல்லியில் நேற்று (ஜூன் 11) நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு இன்று (ஜூன் 12) காலை தமிழ்நாடு இல்லத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் புறப்பட்டார். தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மங்களூர் சென்றடைந்த அவர், பின்னர் சாலை மார்க்கமாக கொல்லூர் சென்றார். அங்கு பிரசித்தி பெற்ற மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கொட்டும் மழையில் அவர் கோயிலுக்குள் சென்றார். பின்னர், மூகாம்பிகை அம்மனை முதலமைச்சர் விஜய் தரிசனம் செய்தார். இந்தநிலையில், மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாளை முதலமைச்சர் விஜய் காணிக்கையாக வழங்கி உள்ளார்.

Read More

மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கோரி பிரதமரைத் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலையும் சந்தித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மனு அளித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடியை சந்தித்து காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தொடர்ந்த சட்டரீதியான தடைகள் மற்றும் மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்தத் திட்டத்தை விரைவாக ஆய்வு செய்து, மத்திய அரசு இறுதி ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். இந்தநிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலையும் டி.கே.சிவக்குமார் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாது…

Read More

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவெக நிர்வாகி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூர் வடக்கு தவெக பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் கூறி வரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக  உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை என்று குற்றம்சாட்டி உள்ள அண்ணாமலை இதுபோன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது என கேள்வி எழுப்பி உள்ளார்.  சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக் கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்றும்…

Read More