Author: Editor web1
சென்னை, கோயம்பேடு பகுதியில் இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனமும், கவலையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பகுதியில் இத்தகைய துணிகரமான குற்றம் அரங்கேறியிருப்பது தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கின் நிலையை உலுக்கும் விதமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். கோயம்பேடு பகுதியில் நேற்று இளம்பெண் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த வன்முறை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. கொடூரக் கொலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது இதுவரை காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை மக்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கண்காணிப்புக்…
டாலர் சிட்டி என்ற பெருமையைக் கொண்ட திருப்பூர் மாநகரம் பல்வேறு கலாச்சாரப் பண்பாட்டு மாறுதல்களை அடைந்து வருவது கண்கூடு. ஏறத்தாழ 10 லட்சம் பேர் வசிக்கும் திருப்பூர் மாநகரில், 4 லட்சம் பேர் என்ற அளவுக்கு வடஇந்தியர்கள் காணப்படுகின்றனர். பீகார், ஜார்கண்ட், ஒடிசா, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் இருந்து வந்துள்ளனர். மூன்றரை லட்சம் அளவுக்கு தென்தமிழக பகுதிகளைச் சேர்ந்த குறிப்பாக மதுரை, நாகர்கோவில், விருதுநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிறுகடை உரிமையாளர்களாக மாறி உள்ளனர். எஞ்சியவர்கள் தான் மண்ணின் மைந்தர்கள். டாஸ்மாக் கடைகளில் உள்ளூர் மக்கள் அதாவது தமிழர்கள் தான் அதிகளவில் தென்படுகின்றனர். பான்பராக்கிற்கு தடை அமலில் உள்ள காரணத்தால், சமீபகாலமாக வட இந்திய தொழிலாளர்களில் கணிசமானோர், டாஸ்மாக் கடைகளில் திரள்வதை பார்க்க முடிகிறது. இடதுசாரி சிந்தனை அதிகம் கொண்ட திருப்பூர் மாநகரில் ஓர் எல்லை வரை வடஇந்தியர்கள் ஆதிக்கம் பெருகுவதற்கு கம்யூனிஸ்டுகளும் ஒரு காரணம். 8 மணி நேர வேலை, திங்கட்கிழமைகளில்…
தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு முன்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அல்லது விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரை முதலமைச்சராக்குவதற்கான மாற்று வழிகளை திமுக ஆராய்ந்ததாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திமுகவிடம் முன்கூட்டியே எச்சரிக்கை கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கொளத்தூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்த ஐயுஎம்எல் மகளிர் அணியினர், குறிப்பாக பெண் வாக்காளர்களிடையே அரசியல் மாற்றத்திற்கான பலத்த அலை வீசுவதை கவனித்து அதனை திமுக தலைமையிலான கூட்டணித் தலைவர்களிடம் முன்கூட்டியே எச்சரித்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் தகவலை திமுகவிடம் பகிர்ந்துகொண்ட போதிலும் அவர்கள் என்ன மாதிரியான தொடர் நடவடிக்கைகளை எடுத்தார்கள் என்று தங்களுக்குத் தெரியவில்லை என்றார். தவெகவுக்கு ஆதரவு ஏன்? தவெக தலைவர் விஜய் இந்த அளவிற்குப் பெருவாரியான ஆதரவைப்…
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயற்குழு கூட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கேது என்கிறதென்னவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமையகச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். தவெகவுக்கு ஆதரவு… திருமாவளவனுக்குப் பாராட்டு இந்த மாநாட்டில், பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, அண்மையில் நடந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தனிப் பெரும்பான்மை பெறாத நிலையிலும், மாநிலத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் தவெக ஆட்சி அமைக்க விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவுக்கரம் நீட்டியதற்கு மாவட்டச் செயற்குழு தனது முழுமையான ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. பல…
பாகிஸ்தான் மற்றும் சீனா விவகாரங்களில் சிறந்த நிபுணராகக் கருதப்படும் தமிழரான ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி, இந்தியாவின் புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக (CDS) இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக இப்பதவியில் இருந்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, அவர் தனது பொறுப்பை ஒப்படைத்தார். இதற்கு முன்பு தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றிய ஜெனரல் சுப்பிரமணி, கடந்த ஆண்டு ஜூலை 31 அன்று ராணுவத்தின் துணைத் தளபதியாகப் (VCOAF) பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முப்படைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதும், ராணுவக் கட்டமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதுமே தனது முதன்மையான நோக்கம் என்று தெரிவித்தார். மேலும், இந்தியாவின் இறையாண்மையையும் எல்லை ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க முப்படைகளும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஆயுதங்களை ராணுவத்தில் சேர்ப்பதை வேகப்படுத்துவேன் என்றும்…
ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில், “குதிரை பேரம்” நடந்ததாகக் கூறி அதிமுக முன்வைத்துள்ள சிபிஐ விசாரணை கோரிக்கைக்கு திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக-வின் இந்த கோரிக்கை “நியாயமானது” என்று குறிப்பிட்டதோடு, எம்.எல்.ஏ-க்களின் திடீர் ராஜினாமா குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். “இந்த விவகாரத்தால் அதிமுக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியைத் திடீரென ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்துள்ளனர். இதற்கு என்ன காரணம்? அண்மையில்தான் மக்கள் வாக்கு அளித்து வெற்றி பெற்ற பதவியை அவர்கள் ஏன் தேவையின்றி இழக்க வேண்டும்? எனவே, இதில் சாதாரணக் கட்சி மாறுவதைத் தாண்டி ஏதோ ஒரு பின்னணி இருக்கிறது,” என்று கூறிய இளங்கோவன், இந்த விவகாரத்தில் மத்திய விசாரணை அமைப்பு விசாரிப்பது தேவையானதுதான் என்றார். தவெக-வில் இணைந்த அந்த…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ள ‘இம்பாக்ட் பிளேயர்’ (Impact Player) விதிமுறையை முழுமையாக நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார். மும்பையில் நடைபெற்ற ‘ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ’ (ESPNcricinfo) விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர் இதுகுறித்து பேசுகையில்,”என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நான் சொல்வது என்னவென்றால், ஐபிஎல் தொடரில் இருந்து ‘இம்பாக்ட் பிளேயர்’ விதிமுறை உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஏற்கனவே டி20 போட்டிகளில் 20 ஓவர்கள் மட்டுமே விளையாட வேண்டிய சூழலில், இந்த விதியால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணிகள் தங்களது வரிசையில் சேர்த்துக் கொள்கின்றன. பிட்ச்சுகள் ஏற்கனவே பேட்டிங்கிற்கு சாதகமாக மாறி, பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் நிலையில், இந்த விதிமுறை ஆட்டத்தின் சமநிலையை முற்றிலுமாகப் பாதிக்கிறது” என்றார். கடந்த சில ஐபிஎல் சீசன்களாக ரன் குவிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இந்த விதிமுறை பந்துவீச்சாளர்களை…
ஆலங்குளம் அருகே நெட்டூரில் திருமண விருந்தில் புகுந்து 6 பேரை வெட்டிய சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களைக் காவல்துறை வெளியிட மறுப்பது ஏன் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக (தமமுக) தலைவர் ஜான் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: காவல்துறையின் அலட்சியமே காரணம் நெட்டூர் பகுதியில் கடந்த 3 மாதங்களாகவே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து உள்ளூர் மக்கள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் எந்தவொரு எளிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய கொடூரச் சம்பவம் நடப்பதற்கு முன்பாகவும்கூட ஊர்மக்கள் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் புகாரைப் பெற மறுத்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு முழு முதற்காரணம் காவல்துறையின் அஜாக்கிரதை தான். முன்பே எச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. காவல்துறையினர் எதிர்த்தரப்பிடம்…
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்பி, படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், “மே மாதத்தின் கடைசி பணி நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள புதிய காலியிடங்களையும் சேர்த்து, ஒட்டுமொத்த அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தற்போது 5 லட்சத்தைக் கடந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அரசுத் துறைகளில் 41.7% பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தையே நிலைகுலையச் செய்து விடும். 20 ஆண்டுகளாகத் தொடரும் அலட்சியம் தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் மொத்தம் 12 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள்…
சிவகங்கை அருகே சோழபுரம் எட்டிச்சேரிக் கண்மாயில், 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிக அரிய வகையான “ஆசிரியம்” கல்வெட்டு ஒன்றை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர். புலிச் சிற்பம் மற்றும் மங்கலச் சின்னங்களுடன் கூடிய இந்தக் கல்வெட்டு, இப்பகுதியின் பழங்கால வணிக முறையையும் வீரத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சோழபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர், தங்கள் ஊர்க் கண்மாயில் ஒரு விசித்திரமான கல் இருப்பதாகச் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்குத் தகவல் அளித்தார். அதன்பேரில், தொல்நடைக் குழுவின் நிறுவனர் புலவர் காளிராசா தலைமையிலான குழுவினர் அந்த இடத்தில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர். சோழபுரம் எட்டிச்சேரிக் கண்மாயின் நடுப்பகுதியில், உள்கடையில் உள்ள குமிழித் தூண் அருகே இந்தக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இது சுமார் 3 அடி உயரமும், ஒண்ணேகால் அடி அகலமும் கொண்டதாக உள்ளது.கல்வெட்டின் தனித்துவமான அமைப்புகள்:புலிச் சிற்பம்: கல்வெட்டின் மேற்பகுதியில் ஒரு காலைத் தூக்கியபடி இருக்கும் புலிக் உருவம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.…