Close Menu
    What's Hot

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வறட்சி, உரம் தட்டுப்பாட்டால் சாகுபடியைக் கைவிடும் காஞ்சிபுரம் விவசாயிகள்!
    தமிழ்நாடு

    வறட்சி, உரம் தட்டுப்பாட்டால் சாகுபடியைக் கைவிடும் காஞ்சிபுரம் விவசாயிகள்!

    Editor web1By Editor web1July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 20 07h19m24s701
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘ஏரிகளின் மாவட்டம்’ என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பு பருவத்தில் போதிய மழையின்மை, பாசன நீர் தட்டுப்பாடு மற்றும் உரம் தட்டுப்பாடு போன்ற அடுக்கடுக்கான காரணங்களால், பயிரிடப்பட்ட நெற்பயிர்களை கைவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்ட அவளூர், காவந்தண்டலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், இந்த ஆண்டு பருவமழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விதைகளை வாங்கி நெல் பயிரிடும் முதல்கட்டப் பணிகளைத் தொடங்கினர். ஏற்கனவே ஏரிகளில் நீர் சேமிப்பு குறைவாக இருந்தபோதிலும், மழையை மட்டுமே நம்பி சாகுபடியில் இறங்கிய விவசாயிகளுக்கு நடப்பு பருவமழை ஏமாற்றத்தையே தந்துள்ளது.

    மழை இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும் முதல்கட்டமாக வளர்க்கப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகத் தொடங்கியுள்ளன. இதனால் வேறு வழியின்றி விவசாயிகள் தங்களது நெற்பயிர்களை அப்படியே கைவிட்டுள்ளனர். போதிய நீரின்றி விவசாய நிலங்கள் அனைத்தும் பாலம் பாலமாக வெடித்துக் காணப்படுவது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

    vlcsnap 2026 07 20 07h20m11s206

    பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய இரண்டு முக்கிய ஆறுகள் மாவட்டத்தின் வழியே சென்றாலும், பருவமழைக் காலங்களில் அவற்றில் ஓடும் உபரி நீர் கிராமப்புற ஏரிகளுக்குச் சென்றடைய முறையான பாசனக் கால்வாய் வசதிகள் இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிர்வாகக் குறைபாடே தங்களின் தற்போதைய அவல நிலைக்குக் முக்கியக் காரணம் என்று அவளூர் கிராம விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    இயற்கை பொய்த்த நிலையில், யூரியா போன்ற உரங்களின் இருப்பு இல்லாததும் கூடுதல் சுமையாக மாறியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: நீட், ராமர் கோயில் விவகாரங்களால் அனல் பறக்க வாய்ப்பு!
    Next Article ‘எலும்பு இருக்காது, உடைத்து அனுப்புவோம்’- முதல்வர் விஜய் பற்றி சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது!
    Editor web1
    • Website

    Related Posts

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    July 20, 2026

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    July 20, 2026

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    திருவிழா பேனரில் திரிஷாவுடன் சிஎம் விஜய் படம்.. அகற்றிய போலீஸ்; பாய்ந்தது வழக்கு..!!

    வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்..!! வாயைக் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.