Author: Editor web1

கோவை தொண்டாமுத்தூர் அருகே அரசு பேருந்தில் அரங்கேறிய சாதிய தீண்டாமை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக சமூக நீதி மற்றும் மனிதநேயத்துறை அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் உள்ள அண்ணாநகர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் தங்களது அன்றாடப் பயணங்களுக்கு 21-ஆம் எண் கொண்ட அரசு நகரப் பேருந்தையே முழுமையாக நம்பியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக அண்ணாநகர் பகுதிக்குள் பேருந்தை முறையாக இயக்காமல் ஓட்டுநரும், நடத்துநரும் புறக்கணிப்பதாகவும், பட்டியலின மக்களை பேருந்தில் ஏற்றுவதில் சாதிய தீண்டாமை காட்டப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அமைச்சர் வன்னி அரசு காட்டம் இந்த விவகாரம் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து,…

Read More

உள்ளாட்சி தேர்தல் மற்றும் திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த வைகோ, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், “தமிழக மக்களின் ஆவேசத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும் என்ற எண்ணம் மேகேதாட்டு விவகாரத்தில் வந்தால் அன்றி வேறு வழியில்லை. மேகேதாட்டில் அணை கட்ட அனுமதிக்ககூடாது என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜூன் 2-ம் தேதி சென்னையில் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதே போல் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ஜூன் 5-ம் தேதி விவசாயிகள் பிரச்சினை மற்றும் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டம் நடைபெறுகிறது. தமிழக தற்காலிக ஆளுநர், திமிர் பிடித்து சர்வதிகாரியாக திருவள்ளுவருக்கு காவி ஆடை போர்த்தியது மன்னிக்க முடியாது. மகா அயோக்கியத்தனம். அவருக்கு காவி ஆடை போர்த்தியது திட்டமிட்டு நம்மை உசுப்பி பார்ப்பது போல் ஆணவத்துடன்…

Read More

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் இயக்கத்தில், நாளை (ஜூன் 1) முதல் புதிய கால அட்டவணை அமல்படுத்தப்பட உள்ளது. ரயில்வே இயக்கக் காரணங்கள் மற்றும் எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய கால அட்டவணையின் முக்கிய அம்சங்கள் தற்போது இயக்கப்பட்டு வரும் 212 மின்சார ரயில்களின் சேவைகள் எவ்விதக் குறைப்பும் இன்றி அப்படியே தொடரும். ரயில்கள் இயங்கும் நேரத்தில் மட்டுமே சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அட்டவணைப்படி, அலுவலக நாட்களில் 212 ரயில்களும், வாராந்திர விடுமுறை நாட்களில் 190-க்கும் மேற்பட்ட ரயில்களும் இயக்கப்படும். பயணிகளின் கோரிக்கையை ஏற்று, காலை மற்றும் மாலை நேரங்களான நெரிசல் மிகுந்த நேரங்களில் (Peak Hours) ரயில்களுக்கு இடையேயான காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற சாதாரண நேரங்களில் 15…

Read More

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற தேமுதிக மாவட்டக் கழக செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக 5 முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. சட்டம் ஒழுங்கை சீரமைக்கக் கோரிக்கை தமிழ்நாட்டில் தற்போது சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. அரசு உடனடியாக சட்டம் ஒழுங்கை சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை முற்றிலும் தடுக்க வேண்டும். இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் கடுமையான…

Read More

தமிழ்நாடு மின்சாரத்துறையில் இனிமேல் எந்தவொரு புதிய டெண்டர் (ஒப்பந்தப் புள்ளி) அறிவிப்பை வெளியிடுவதற்கும் முன்பாக, மூன்று கட்ட ஆய்வுகளைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்று மின்வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மின்வாரியத்தின் கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 3 புதிய குழுக்கள் டெண்டர்களை முறையாக ஆய்வு செய்வதற்காக மின்வாரியம் சார்பில் தற்போது 3 முக்கியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தைப் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு சரிபார்ப்புக் குழு உள்நாட்டுச் சந்தையில் மூலப்பொருட்களின் தற்போதைய விலை நிலவரங்களை இக்குழு ஆய்வு செய்யும். மேலும், பல்வேறு வகையிலான விலைத் தரவுகளை மதிப்பீடு செய்வதுடன், தனியார் நிறுவனங்கள் அதே பொருட்களை என்ன விலைக்குக் கொள்முதல் செய்கின்றன என்பதையும் ஒப்பிட்டு ஆராயும். உற்பத்தியாளர் மதிப்பீட்டுக் குழு மின்வாரியத்திற்குத் தேவைப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின்…

Read More

டாஸ்மாக் ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாகவும், படிப்படியாக அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் உள்ள புகழ்பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து அமைச்சர் விக்னேஷ் வழிபட்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர், டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆட்சியில் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்ட முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி 10 ரூபாய் மட்டும் திரும்பப் பெரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் குறித்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் தீர்வு காணப்படும் என்றார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை லஞ்சம் மற்றும் ஊழல் செய்பவர்களுக்கு மட்டுமே கடுமையானதாக இருக்கும்; துறையில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் உறுதியாக தெரிவித்தார். கோவையைச் சிறந்த மாநகரமாக…

Read More

கடந்த திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை குறித்து இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் மரியா வில்சன், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார். தகுதியான தமிழகப் பெண்களுக்குச் சென்று சேர வேண்டிய 1000 ரூபாய் உரிமைத் தொகை, முறையான சரிபார்ப்பு இன்றி வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இத்திட்டத்தில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பாகத் தகுந்த ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். முந்தைய திமுக அரசின் நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருவதாகக் கூறிய அமைச்சர், “இந்த வெள்ளை அறிக்கை இன்னும் இரண்டு வார காலத்திற்குள் பொதுமக்களின்…

Read More

விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டத்தில் அமைச்சர்  முகமது பர்வேஸ், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தேரை வடம்பிடித்து வழிபாடு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறுபடை வீடுகளுக்கு நிகரான புகழ்பெற்ற விராலிமலை முருகன் கோயிலில், வைகாசி விசாகத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மே 30) வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த சில நாட்களாக வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சிம்ம வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் உச்சகட்டமான இன்று, அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் ஆகியோர் அருகருகே நின்று, தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.…

Read More

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நிர்வாகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று (மே 29) 30 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டிருந்தனர். இந்தநிலையில், இன்று (மே 30) சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கிர்லோஸ்குமார்: தமிழக கவர்னரின் செயலாளராக இருந்த இவர், வீட்டு வசதித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். சிவகுரு பிரபாகரன்: கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த இவர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கவிதா, சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி, அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருணாளினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி ஆணையராக கவுரவ் குமார், திருச்சி…

Read More

இந்தியாவின் ராணுவ வலிமை மற்றும் அதன் நவீனமயமாக்கல் முயற்சிகளை அமெரிக்கா பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் பாராட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத், உலக அரங்கில் இந்தியா ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார். இந்தியா தனது முப்படைகளையும் நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தி வருவது, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் பலமாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் ராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் முயற்சியை வரவேற்பதாகவும், இது இந்தியாவின் தற்சார்பு நிலையை வலுப்படுத்துவதாகவும் ஹெக்செத் குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ந்து வரும் ராணுவத்திறன், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா ஒரு நம்பகமான மற்றும் வலிமையான கூட்டாளியாகத் திகழ்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இராணுவ ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் அதிகரித்து வருவதாகவும், வரும் காலங்களில், குறிப்பாகக் கடற்படைப்…

Read More