Close Menu
    What's Hot

    தேர்வுத்தாள் கசிவு விவகாரம்.. 60%க்கும் மேல் பாஜக ஆளும் மாநிலங்களில் தான்..!! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1..!!

    புதுக்கோட்டை: மாநகராட்சி குளங்களில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவை நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றிய ஆந்திர தம்பதி: புதுவித மோசடி எப்படி நடந்தது?- 2 பேரும் கைது!
    Featured

    கோவை நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றிய ஆந்திர தம்பதி: புதுவித மோசடி எப்படி நடந்தது?- 2 பேரும் கைது!

    Editor web1By Editor web1July 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 07 18 at 11.11.57 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் போலி தங்கக் கட்டிகளைக் கொடுத்து தங்க நகைகளைப் பறித்துச் சென்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணவன்- மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

    கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் மூலம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட்ராவ் (45) மற்றும் அவரது மனைவி காமாட்சி (35) ஆகிய இருவர் உதயகுமாரிடம் அறிமுகமானனர்.

    தங்களிடம் 380 கிராம் தங்கக் கட்டிகள் இருப்பதாகக் கூறி, அதை விற்க உதவி கேட்டுள்ளனர். ஒரு கட்டியை உதயகுமாரிடம் கொடுத்து ஆய்வு செய்யச் சொல்லியுள்ளனர். உதயகுமார் அதைச் சோதித்தபோது, அது அசல் தங்கம் போலவே இருந்துள்ளது. இதனை நம்பிய உதயகுமார், அந்த தங்கக் கட்டிகளைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாகத் தனது கடையில் இருந்த 6.5 பவுன் தங்க நகைகளையும், சரண்யாவிடமிருந்த 1 பவுன் தங்கச் சங்கிலியையும் அவர்களிடம் கொடுத்துள்ளார். பிறகு முழுமையாகச் சோதித்தபோதுதான், அந்தத் தங்கக் கட்டிகள் போலி என்பது தெரியவந்தது. உடனடியாக நகைக்கடை உரிமையாளர் உதயகுமார் பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    சாமநாயக்கன்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த வெங்கட்ராவ் மற்றும் காமாட்சி ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவர்கள் தான் அந்த மோசடி கும்பல் என்பது உறுதி செய்யப்பட்டது. இருவரிடமிருந்தும் 7.5 பவுன் நகைகள் மற்றும் போலி தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    விசாரணையில், அந்தப் போலி தங்கக் கட்டியின் ஒரு பகுதியில் மட்டும் உண்மையான தங்கத்தைச் சிறிய அளவில் ஒட்டி வைத்திருந்தது தெரியவந்தது. அதை உடைத்துச் சோதிக்கும்போது அது உண்மையான தங்கம் போலவே தெரிவதால், நகைக்கடை உரிமையாளர்கள் ஏமாந்திருப்பது கண்டறியப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பூரில் கோர விபத்து: நின்றிருந்த கேஸ் லாரி மீது கார் மோதி 3 பேர் பலி- 5 பேர் படுகாயம்!
    Next Article ஒரு வருஷத்துல இத்தனை பஸ் ப்ரேக் டவுன்-ஆ..!! தமிழக அரசுக்கு கோடிகளில் நஷ்டமாம்..!!
    Editor web1
    • Website

    Related Posts

    தேர்வுத்தாள் கசிவு விவகாரம்.. 60%க்கும் மேல் பாஜக ஆளும் மாநிலங்களில் தான்..!! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    July 18, 2026

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1..!!

    July 18, 2026

    புதுக்கோட்டை: மாநகராட்சி குளங்களில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்வுத்தாள் கசிவு விவகாரம்.. 60%க்கும் மேல் பாஜக ஆளும் மாநிலங்களில் தான்..!! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1..!!

    புதுக்கோட்டை: மாநகராட்சி குளங்களில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    சிதம்பரம்: மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.