Author: Editor web1
கொடைக்கானலின் முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமான குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோயிலில், வைகாசி விசாகத் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் மலர் கண்காட்சியைத் தொடர்ந்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு மலர் வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி விசாகத்தை முன்னிட்டு, குறிஞ்சி ஆண்டவர் முருகப் பெருமானுக்குப் பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்களைக் கொண்டு கண்கவர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. கோயிலின் கருவறை முதல் வளாகம் வரை மலர்களால் பல்வேறு வடிவங்கள் செய்யப்பட்டு, ஆலயம் விழாக்கோலம் பூண்டிருந்தது. முருகப் பெருமான் தங்கக் கவசத்தில் ஜொலிக்க, சிறப்புப் பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவையொட்டி கொடைக்கானலில் நிலவும் இதமான சூழலில், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதலே கோயிலில் திரண்டனர். தங்கக் கவச அலங்காரத்தில் காட்சியளித்த முருகப் பெருமானை தரிசிக்க, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி…
ஈரோட்டில் ₹1 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், இளைஞர் ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி, I.P.S. நேரடி மேற்பார்வையில் காவல் துறையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகில் போதை மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அப்பகுதியில் தீவிர வாகனச் சோதனையிலும், ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரிப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவரைப் பிடித்து போலீசார் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த கலைச்செல்வன் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த பையைச் சோதனை செய்தபோது, விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 3,000…
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், சமூகநீதியை மேம்படுத்தவும் ‘சமூகநீதி சர்வே’ எனப்படும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: “இந்தியாவிலேயே சமூகநீதியில் முன்னோடியாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு. 100 ஆண்டுகளுக்கு முன்பே 100 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்த பெருமை கொண்ட இந்த மாநிலம், அண்மைக்காலமாக சமூகநீதி முன்னெடுப்புகளில் பிற மாநிலங்களை விடப் பின்தங்கியுள்ளது. சுமார் 95 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய தரவுகளைக் கொண்டே இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் கையாளப்படுவதால், புதிய சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயமாகியுள்ளது.” “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் ‘சாதிவாரி சர்வே’ மேற்கொள்ளப்படும் என்று முதல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. அந்த வாக்குறுதியை…
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்தின் குடிநீர் தேவைக்காகக் கிருஷ்ணா நதி நீர் நேற்று (மே 28) மாலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை வந்தடைந்தது. சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் பூண்டி நீர்த்தேக்கத்திற்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காக, கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டது. அந்தத் தண்ணீர் தற்போது தமிழக எல்லைப் பகுதியை வெற்றிகரமாக வந்தடைந்துள்ளது. எல்லையை வந்தடைந்த இந்தத் தண்ணீர், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அனுப்பப்படுவதற்காகக் கண்டலேறு – பூண்டி கால்வாயில் தூர்வாரும் பணிகள் மற்றும் கரை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. கால்வாயின் கரைகள் பலவீனமாக இருக்கும் பகுதிகளில் தண்ணீர் சீராகச் செல்வதையும், கரைகளில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்யப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணா நதி நீர் வருகையினால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட…
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், இன்று (மே 29) நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றுப் (Qualifier 2) போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் இன்றிரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான மோதலில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. முதலாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் தோல்வியடைந்ததால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இறுதிப்போட்டிக்கு நுழைய முனைப்பு காட்டும். மறுபுறம், வெளியேற்றுதல் சுற்றில் (Eliminator) ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி உற்சாகத்துடன் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், அதே வேகத்தைத் தொடர முயற்சிக்கும். இந்த சீசனில் இவ்விரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தலா ஒரு வெற்றியை…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்குமான மிக முக்கியமான முன்னெடுப்பாக, முதலமைச்சர் விஜய், ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப்படையை இன்று தொடங்கி வைப்பதாக இருந்தது. பெண்கள் அச்சமின்றி நடமாடவும், கல்வி பயிலவும், பணிபுரியவும் வழிவகுக்கும் வகையில், குற்றங்கள் நடக்கும் வரை காத்திருக்காமல், அவை நடப்பதற்கு முன்பே தடுக்கும் வகையில் இந்தப் படை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிப்படை நேரடியாக முதலமைச்சரின் கண்காணிப்பிலேயே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐடி பூங்காக்களில் இந்த அதிரடிப்படை 24/7 தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும். இப்படையின் சிறப்பு ஐஜியாக (Special IG) மூத்த ஐபிஎஸ் அதிகாரி பவானீஸ்வரி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். முதற்கட்டமாக, ஒரு காவல் கண்காணிப்பாளர் (SP), இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர்கள் (DSP), நான்கு ஆய்வாளர்கள் என 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். இப்படையினர் அதிநவீன தகவல்…
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. கோடை வெயிலின் உச்சகட்ட காலமான கத்திரி வெயில் கடந்த 4 ம் தேதி தொடங்கியநிலையில், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த காலத்தில் அதிகபட்சமாக 108 டிகிரி…
மதுரையில் அரசு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் செயல்பட்டு வந்த 11 கல் குவாரிகளை, மாவட்ட நிர்வாகம் அதிரடியாகத் தற்காலிகமாக மூடி உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வில், இந்தக் குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அனுமதி வழங்கப்பட்ட அளவை விட அதிகப்படியான கற்கள் மற்றும் ஜல்லிகள் வெட்டி எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. முறையான ஆவணங்கள் மற்றும் அனுமதிச் சீட்டுகள் (Transit Passes) இன்றி கனிமங்கள் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. அனுமதி வழங்கப்பட்ட பரப்பளவைத் தாண்டி, அருகில் உள்ள அரசு நிலங்களிலும் சட்டவிரோதமாகச் சுரண்டல் நடைபெற்றது கண்டறியப்பட்டது. தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள இந்தக் குவாரிகளில் இருந்து கனிமங்கள் வெளியே கொண்டு செல்லக் கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மூடப்பட்ட குவாரிகளின் ஆவணங்கள் மற்றும் உரிமங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.…
வைகாசி மாதத்தில் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு நாளை (மே 29) சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் (Tokens) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவை எளிதாக்கும் வகையில் நாளை (மே 29) அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் (Tokens) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வழக்கமான 100 டோக்கன்களுக்குப் பதிலாக, நாளை (மே 29) 150 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் வழக்கமான 200 டோக்கன்களுக்குப் பதிலாக, 300 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 100 முக்கியமான அலுவலகங்களில் வழக்கமான 100 டோக்கன்களுடன், கூடுதலாக 50 டோக்கன்கள் (மொத்தம் 150) வழங்கப்பட உள்ளன. மேலும், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் (Tatkal) டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்கள் சேர்த்து மொத்தம் 16 தட்கல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சுபமுகூர்த்த நாட்களில் பொதுமக்கள் தங்கள் பத்திரப் பதிவுகளை எந்தவித சிரமமும்…
வங்கதேசத்தில் டிரம்ப் என்று செல்லமாகப் பெயரிடப்பட்ட 700 கிலோ எடை கொண்ட அல்பினோ வகை எருமை, பக்ரீத் பண்டிகையின் போது பலியிடப்பட இருந்தநிலையில், கடைசி நிமிடத்தில் வங்கதேச அரசால் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த எருமையின் தலையில் இருக்கும் அடர்த்தியான தங்க நிற முடிகள் மற்றும் அதன் முக அமைப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிகை அலங்காரத்தைப் போலவே இருப்பதால், சமூக வலைதளங்களில் இது மிகவும் பிரபலமானது. இதன் புகைப்படங்களும், காணொளிகளும் இணையத்தில் காட்டுத்தீ போல பரவின. இதனைப் பார்ப்பதற்காகவே நூற்றுக்கணக்கான மக்கள் பண்ணைக்குத் திரண்டனர். ஈரானிய சமூக வலைதளக் கணக்குகள் கூட இந்த எருமையை வைத்து வேடிக்கையான கருத்துகளைப் பகிர்ந்தன. பக்ரீத் பண்டிகையின் போது பலியிடுவதற்காக ஒருவர் இந்த எருமையை விலைக்கு வாங்கியிருந்தார். ஆனால், இந்த எருமை பொதுமக்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியதாலும், அதன் தனித்துவமான தோற்றத்தாலும், பலியிடப்படுவதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டது. அரசாங்கத்தின் உத்தரவுப்படி, எருமையை வாங்கியவருக்குப் பணம் திருப்பி…