Author: Editor web1
Dude திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியது தொடர்பாக இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. தனது இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘பணக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு’ ஆகிய பாடல்களை தனது அனுமதியின்றி, உருமாற்றி தீபாவளிக்கு வெளியான Dude திரைப்படத்தில், பயன்படுத்தி உள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இரண்டு பாடல்களையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பாடல்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு நடைபெற்ற விசாரணையில், தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாடலை உருமாற்றி உள்ளதால் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று…
எந்த அரசியல் கட்சியும் சாலை நடுவிலும், அருகிலும் தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மீறினால் அரசு அதிகாரிகள் மீது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்காக தற்காலிகமாக கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு விதிமுறைகள் வகுத்துள்ளது. இந்தநிலையில், சாலைகளின் நடுவிலும், ஓரங்களிலும் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பான வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்காக தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் அமைக்க வசூலித்த வாடகை, விதிகளை மீறி கொடிக் கம்பங்கள் அமைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து 37 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கொடிக் கம்பங்கள் அமைத்த…
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் விழாக்கள் விமர்சையாக நடைபெற்றது. இன்று (டிச. 3) அதிகாலை, 4 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. முக்கிய நிகழ்வாக இன்று (டிச. 3) மாலை அண்ணாமலையார் கோயிலில் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு மகா தீபத்தை கண்டு வழிபட்டனர். முன்னதாக மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை பாதுகாப்புடன் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய் மற்றும், 1,150 மீட்டர் காடா…