Author: Editor web1

பண்ருட்டி அருகே செங்கல்சூளை ஒன்றின் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டிய போது பழங்கால மக்களின் வாழ்வியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பூண்டி மற்றும் வரிஞ்சிப்பாக்கம் கிராம பகுதியின் வயல் பகுதியில் செங்கல் சூளை போடுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 3 உறை கிணறுகள், பானை ஓடுகள் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர் இளைஞர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் தண்டபாணி மற்றும் இம்மானுவேல் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த போது, அங்கே சங்க காலத்தை சேர்ந்த  சுடுமண் காதணி, கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், கெண்டி மூக்குகள், குறியீடு பானை ஓடு, சுடுமண் குடுவை,  செங்கற்கள் மற்றும் 3 உறை கிணறுகள் ஆகியவற்றை கண்டறிந்தனர். இதுகுறித்து பேசிய தொல்லியல் ஆய்வாளர்கள் தண்டாயுதபாணி மற்றும் இம்மானுவேல் ஆகியோர், 3  உறை கிணறுகள் 100 மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே இருந்தது. அதில் ஒன்று…

Read More

பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் பல ஆண்டுளாக தேங்கியுள்ள 95.81 லட்சம் டன் கழிவுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தேங்கி இருக்கும் குப்பைக் கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் அவற்றை அகற்றுவதில் உள்ள பிரச்சனை குறித்து ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கு விசாரித்தது. பெருங்குடி, கொடுங்கயூரில் தேங்கியுள்ள 95.81 லட்சம் டன் கழிவுகளை கையாள்வது குறித்தோ, அதை அகற்ற தேவையான கால அளவு குறித்தோ சென்னை மாநகராட்சியிடம் உறுதியான  செயல்திட்டங்கள் எதுவும் இல்லை என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் 29,28,398 மெட்ரிக் டன்கள் கழிவுகள்,  கொடுங்கையூரில் 66,52,506 டன் கழிவுகள் தேங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. இதனிடையே சென்னை பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் பல ஆண்டுளாக…

Read More

ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்திற்கு ‘தர்மன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 173’ என பெயரிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில், ‘தலைவர் 173’ படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று படம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். படத்தின் புதிய போஸ்டரில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் இருப்பது போன்று உள்ளதால், கதைக்களம் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Read More

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 21ம் தேதி ஆத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், நான் ஒரு வியாபாரி, என் கடைக்கு வருபவர் பணம் வைத்துக் கொண்டு பொருள் வாங்க வருகிறாரா அல்லது கடன் வாங்க வருகிறாரா என்று அவர் முகத்தை வைத்து கண்டுபிடித்து விடுவேன். அதேபோல் முதலமைச்சர் விஜய்யின் முகத்தை பார்க்கும் போது சினிமாவில் நடித்துக் கொண்டு நடிகையோடு சந்தோஷமாக இருந்த என்னை இப்படி அரசியலில் மாட்டி விட்டீர்களே என்று முழிப்பது போல் முகம் உள்ளது என பேசியதாக தெரிகிறது. இந்தநிலையில், முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றங்கள் மற்றும் விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்துப் பேசினார். டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, இந்தச் சந்திப்பு மிக நடைபெற்றது. மத்திய இணையமைச்சர்களாக இருந்த ஜார்ஜ் குரியன் மற்றும் ரவ்நீத் சிங் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூன் 21-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இவர்களுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை. இதன் காரணமாக, சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சராக இருந்த ஜார்ஜ் குரியன் தனது பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்தார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சராக உள்ள ஹர்ஷ் மல்ஹோத்ரா டெல்லி பாஜக தலைவராகவும், நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் சில அமைச்சர்கள் கட்சிப் பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டதாலும்,…

Read More

2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் பல புதிய உலக சாதனைகளை படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அமெரிக்காவின் ஹூஸ்டர் நகரில் குரூப் K பிரிவில் நடந்த போட்டியில் போர்ச்சுகல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இதில், 5-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி போர்ச்சுக்கல் அசத்தல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரட்டை கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் அவர் பல உலக சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார். 6 வெவ்வேறு உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர்: உலகக்கோப்பையின் நீண்டகால வரலாற்றிலேயே 6 வெவ்வேறு தொடர்களில் (2006, 2010, 2014, 2018, 2022 மற்றும் 2026) கோல் அடித்த உலகின் முதல் மற்றும் ஒரே கால்பந்து வீரர் என்ற அசாத்தியமான சாதனையை 41 வயதான ரொனால்டோ படைத்துள்ளார்.…

Read More

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே போர்ச்சுகல் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ஆதிக்கத்தைச் செலுத்தினர். போட்டியின் 6வது நிமிடத்திலேயே போர்ச்சுகல் அணி தனது முதல் கோலை அடித்து அசத்தியது. சக வீரர் கேன்செலோ கொடுத்த துல்லியமான வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திய நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பந்தைக் கோல் வலைக்குள் அனுப்பி அணிக்கு முன்னிலை தேடித் தந்தார். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி மற்றொரு கோல் அடித்து அசத்தியது. அந்த அணியின் நுனோ மென்டெஸ் கோல் அடித்தார். 39வது நிமிடத்தில் ரொனால்டோ மற்றொரு கோல் அடிக்க போர்ச்சுகல் 3-0 என வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் 60வது மற்றும் 87வது நிமிடத்தில் போர்ச்சுக்கள் அணி…

Read More

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை அமெரிக்க தூதர் சந்தித்து பேசினார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் இன்று (ஜூன் 22) தமிழ்நாடு வந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியச் சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார், பொதுத்துறை முதன்மை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் மரியானா எல்.நெய்ஷூலர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

Read More

மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டாங்கெட்கோ கூடுதல் டிஜிபி மற்றும் தலைமை விழிப்புப் பணி அதிகாரி ஆயுஷ்  மணி திவாரி– காவல்துறை தலைமையக கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன்– மதுரை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர்– சென்னை பெருநகர காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையர் பிரவேஷ் குமார்– கடலோர பாதுகாப்புக் குழும (CSG) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு ஐஜி எஸ்.ராஜேஸ்வரி– திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி– சிலைத் திருட்டு தடுப்பு பிரிவு…

Read More

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண் “1091” அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி காவல் உதவியை வழங்கவும், பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய இடங்களில் கண்காணிப்பு பணியை வலுப்படுத்தவும் சிங்கப் பெண் சிறப்பு காவல் படையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். சிங்கப் பெண் சிறப்புப் அதிரடிப்படையின் செயல்திறனை மேலும் மேம்படுத்தவும், அவசர அழைப்புகளுக்கு விரைவான நடவடிக்கையை  மேற்கொள்ளவும், 1091 என்ற உதவி எண் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான பிரத்யேக உதவி எண்ணாக அறிவிக்கப்பட்டு, 112 அவசர கால உதவி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவசர காலங்களில் தகவல் பரிமாற்றம் வேகமாக நடைபெறுவதுடன், சம்பவ இடத்திற்கு உடனடி காவல் உதவி வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. 1091 உதவி எண்ணிற்கு வரும் ஒவ்வொரு அவசர அழைப்பிற்கும் உடனடி கவனம் செலுத்தும் வகையில், மாநில…

Read More