Close Menu
    What's Hot

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மாநில பாடலின் முன்னுரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெக எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேர வழக்கில் இருவருக்கு ஜாமின்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
    Featured

    தவெக எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேர வழக்கில் இருவருக்கு ஜாமின்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    Editor web1By Editor web1July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 37
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகம் எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஜாமினும், மற்றொருவருக்கு முன் ஜாமினும் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க, ரூ.35 கோடி தருவதாக சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் இதுவரை 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் கடந்த 14-ம் தேதி கைது செய்யப்பட்ட திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகர் ஜாமின் கோரியும், கரூரைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் முன்ஜாமின் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முழுமையான ஆதாரங்கள் எதுவுமின்றி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படத் தயார் என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், இருவருக்கும் நிபந்தனை ஜாமின் மற்றும் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    மறு உத்தரவு வரும் வரை மனுதாரர்கள் இருவரும் தினமும் காலை 10.30 மணி மற்றும் மாலை 5.30 மணி ஆகிய இரு வேளைகளிலும் திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணை அதிகாரி முன்பாக ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை எக்காரணம் கொண்டும் கலைக்கக் கூடாது, காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நீதிபதி இளந்திரையன் நிபந்தனை விதித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெலட் துப்பாக்கி பயன்பாடு: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
    Next Article எனக்கு ஏன் நீங்கள் ஓட்டு போடவில்லை?. மக்களை பார்த்து கேள்வி எழுப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்!
    Editor web1
    • Website

    Related Posts

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    July 30, 2026

    3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மாநில பாடலின் முன்னுரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

    July 30, 2026

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மாநில பாடலின் முன்னுரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.