Close Menu
    What's Hot

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பழனி மலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு… தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு..
    தமிழ்நாடு

    பழனி மலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு… தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு..

    Editor TN TalksBy Editor TN TalksJune 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    927405
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த புருஷோத்தமன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி சுற்றியுள்ள கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளேட்டுகள், ஸ்பூன், கொடிகள் போன்ற அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைந்து வருகிறது.

    தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனையும் மீறி உற்பத்தி செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அது கைவிடப்பட்டதால், மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால் பிறப்பிக்கப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டு தடை தொடர்பான அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்தவும், விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, “வழக்கு தொடர்பாக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் செயலர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு துறையின் சுற்றுச்சூழல் பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    court order on plastic usage environmental issues Tamil Nadu Madras High Court plastic case Palani plastic ban issue Palani plastic pollution case Palani temple environment plastic in religious places Tamil Nadu plastic policy temple waste management TN govt plastic response
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநேரில் ஆஜராவதில் விலக்குக் கோரி பொன்முடி மனு.. 21-ந் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்..
    Next Article நெடுஞ்சாலையில் நாற்று நடும் போராட்டம்..அதிமுகவினர் கைது..
    Editor TN Talks

    Related Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    February 19, 2026

    குட்நியூஸ்!. இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு தொகை!. அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

    February 19, 2026

    நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    எப்ஸ்டீன் சர்ச்சை!. பிரிட்டன் முன்னாள் இளவரசர் அதிரடி கைது!

    Trending Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    February 19, 2026

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    February 19, 2026

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    February 19, 2026

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    February 19, 2026

    எப்ஸ்டீன் சர்ச்சை!. பிரிட்டன் முன்னாள் இளவரசர் அதிரடி கைது!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.