Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் !!!
    தமிழ்நாடு

    பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் !!!

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Waste collected
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டதாக வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    கோவை, அடுத்த பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து ஏழாவது மலையில் சிவன், சுயம்பு லிங்கமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த சிவனை தரிசிக்க தமிழக மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வன விலங்குகள் மற்றும் கால நிலை மாற்றத்தின் காரணமாக பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நான்கு மாத மலையேற்ற காலம் கடந்த மே மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதை அடுத்து வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை வெள்ளிங்கிரி கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாலையோரம் வனப் பகுதியில் என ஆங்காங்கே வீசிச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் கடந்த 4 மாதங்களில் மொத்தம் 10, 905 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டன. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் கோவையை தலைமை இடமாகக் கொண்டு ரீ கம்போஸ்ட், ரீ சைக்கிளிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் மறுசுழற்சி செய்யப்பட்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதற்காக மாற்றப்பட்டு உள்ளன. குடிநீர் பாட்டில்களை தனியார் நிறுவனம் மறுசுழற்சி செய்யும் கடினமாக இருக்கும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் சாக்லேட் பேப்பர்கள் போன்ற பல அடுக்கு பிளாஸ்டிக்கை கூரைத்தாள்கள், கவரிங் தாள்கள் மற்றும் பிளாக் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் மாற்றப்பட்டு உள்ளது. இது குறித்து வனத் துறையினர் கூறும் போது பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்தில் உள்ள நுழைவாயில் மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூபாய் 20 வசூல் செய்யப்படும், பின்னர் அந்த பாட்டிலை கொடுத்து விட்டு அந்த பணத்தை திரும்பி பெற்றுக் கொள்ளலாம், இதில் சில பக்தர்கள் மட்டுமே பாட்டிலை திரும்பி ஒப்படைத்து பணத்தை பெற்று சென்றனர். பலர் ஆங்காங்கே வனப் பகுதியில் பாட்டில்களை வீசி சென்று உள்ளனர் இதனை சேகரிக்கும் பணியில் வனத் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதில் 11 டன் வரையிலான பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பப்பட்டு உள்ளது பக்தர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பதால் தான் தண்ணீர் பாட்டில்களை வனப் பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் பக்தர்கள் முறையாக பாட்டில்களை வனத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார்.

    11 tonnes plastic removed Tamil Nadu Coimbatore environmental news green initiative Coimbatore plastic free Tamil Nadu campaign plastic pollution Tamilnadu forests Poondi forest cleanup Tamil Nadu eco volunteers Velliangiri cleanup drive 2025 Velliangiri Hills plastic ban Velliangiri plastic waste removal
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜுலையில் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு பயணம்…
    Next Article முறைகேடுகளில் ஈடுபட்ட ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் – கோவை ஆணையர் சரவண சுந்தர் நடவடிக்கை !!!
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.