சென்னையில் காற்றுடன் பெய்த மழையினால் தேனாம்பேட்டை  ஆலயம்மன் கோயிலில் இருந்த நூறாண்டுகள் பழமையான அரசமரம் சாலையில் சாய்ந்தது.

தமிழ்நாடு முழுவதும் கோடை மழை தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக அதிகாலை நேரத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் இன்று அதிகாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இதனிடையே பலத்த காற்று வீசியதால் சென்னை தேனாம்பேட்டை சிக்னல் சந்திப்பு அருகே உள்ள ஆலயம்மன் கோயிலில் இருந்த நூறாண்டுகள் பழமையான அரசமரம் சாய்ந்து சாலையில் விழுந்தது.

சம்பவம் அறிந்த மின்வாரிய ஊழியர்கள், காவல்துறையினர் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அறுத்து அப்புறப்படுத்த கூடிய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நூறாண்டுகள் பழமையான அரசமரம் கோவிலின் ஒருபுறம் சுவர் மீது விழுந்து சாலையில் இருந்த மின்விளக்கில் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக காற்று வீசும் பொழுது யாரும் அருகில் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version