Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சூரஜ் மரணம்!. சந்தேக மரணம் என வழக்குப் பதிவு!. உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்!.
    தமிழ்நாடு

    சூரஜ் மரணம்!. சந்தேக மரணம் என வழக்குப் பதிவு!. உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்!.

    Editor web3By Editor web3February 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Suraj death Case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்ற தவெக கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற வடமாநில இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகில் உள்ள தாளமுத்து நடராசன் திடலில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார். திடலுக்குள் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையிலும், கூட்டநெரிசல் மற்றும் கடும் வெயிலில் நின்றிருந்த மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் என்பவர் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார்.

    இவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த உடலை பெறமாட்டோம் என அவரது உறவினர்கள் கூறிவருகின்றனர். அதாவது குடும்பத்தை காப்பாற்ற தவெக சார்பில் விஜய் உதவி செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இருப்பினும், சூரஜ் மரணத்தை சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே பாஸ் கொடுக்கப்பட்டு தவெக பொதுக்கூட்டங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், நேற்றைய தவெக கூட்டத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் எப்படி நுழைந்தார் என்று கேள்வி எழுந்து வருகிறது.

    இதுமட்டுமல்லாமல், சூரஜ்ஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கக் கூட விஜய் தரப்பிலோ, தவெகவினர் தரப்பிலோ யாரும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால், கரூர் சம்பவத்துக்கும் அமைதி காத்த விஜய், சூரஜ் மரணத்திலும் மவுனம் காப்பது அரசியல் ரீதியாக மீண்டும் பேசுப்பொருளாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவில் விருப்ப மனு சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
    Next Article ​கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் டவர் கட்டுமான பணியின்போது விபத்து!. 5 தொழிலாளர்கள் படுகாயம்!
    Editor web3
    • Website

    Related Posts

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.