டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “மத்திய உள்துறை அமைச்சரை நேற்று சந்தித்தேன். தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து கலந்து பேசினோம். தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் விவாதித்தோம். சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக எந்த ஒரு விவாதமும் செய்யவில்லை.

எங்கள் கூட்டணி நிலையான, சுமுகமாக இருந்து கொண்டிருக்கின்றது. விரைவில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும். திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது. காங்கிரஸ் அந்த கூட்டணியில் இருக்குமா? இல்லையா என்பது தொடர்பாக ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது.

தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதனால் என்ன அவசரம் இருக்கிறது. தொகுதி உடன்பாடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version