Close Menu
    What's Hot

    போர் பதற்றம்!. 90 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு!. உலகப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்?

    எங்கள் தீவுகளை தாக்கினால்; ” பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும்”!. ஈரான் கடும் எச்சரிக்கை!

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நீதி கிடைக்கும்வரை அதிமுக துணைநிற்கும்.. அஜித்குமார் தாயாரிடம் ஆறுதல் கூறிய இபிஎஸ்…
    தமிழ்நாடு

    நீதி கிடைக்கும்வரை அதிமுக துணைநிற்கும்.. அஜித்குமார் தாயாரிடம் ஆறுதல் கூறிய இபிஎஸ்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2025Updated:July 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 07 02 144615
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தைரியமாக இருங்கள், உங்களுக்கு நீதி கிடைக்கின்ற வரை அ.தி.மு.க. துணை நிற்கும் என்று திருப்புவனம் அஜித்குமார் தாய், தம்பியை செல்போனில் தொடர்பு கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார். அஜித்குமாரை இழந்து வாடும் அவரது தாய், தம்பி ஆகியோரிடம், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்து பேசியதாவது:-

    துரதிர்ஷ்டவசமாக சில மனித மிருகங்கள் கடுமையாக தாக்கியதினால் உங்கள் மகன் அஜித்குமார் அவர்கள் மரணமடைந்து விட்டார். தைரியமாக இருங்கள் அம்மா. உங்களுக்கு நீதி கிடைக்கின்ற வரை அ.தி.மு.க. துணை நிற்கும். நாங்களும் துணை நிற்போம்.

    இது மீள முடியாத துயரம். ஒரு தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது மிகப்பெரிய கொடுமையான விஷயம். இதை யாராலும் மன்னிக்க முடியாது. இது பெற்ற தாய்க்குதான் அந்த வலி தெரியும். அதனால் நீங்கள் மனம் தளராதீர்கள்.

    எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ஈடாகாது. இருந்தாலும் நீங்கள் இருக்கின்ற குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மனம் நிம்மதி இருக்க வேண்டும். நீங்களும் நிம்மதியாக இருந்தால் தான் அவர்களும் நிம்மதியாக இருப்பார்கள். அதனால் நாங்கள் உங்களுக்கு முழு துணையாக இருப்போம். அ.தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். நீதிமன்றம் மூலம் உங்களுக்கு நீதி நிலைநாட்டப்படும். உங்களுக்கு நியாயம் கிடைக்கும். மனம் தளராமல் இருங்கள். என்னுடைய ஆழ்ந்த இரங்கல், வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் அம்மா.

    இந்த நிகழ்வு மீள முடியாதது. ஒரு கொடுமையான சம்பவம் நடந்து முடிந்து விட்டது. உங்களது அண்ணன் இறப்புக்கு யார் யார் எல்லாம் காரணமோ, அவர்கள் தண்டிக்கப்படுகின்ற வரை அ.தி.மு.க. உங்களுக்கு துணை நிற்கும். நீதிமன்றம் மூலம் நீதி நிலைநாட்டப்படும். தைரியமாக இருங்கள். எங்களது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதக்கலவரத்தை தூண்டிய பேச்சு.. மதுரை ஆதீனம் ஆஜராக உத்தரவு..
    Next Article கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் -வைகோ
    Editor TN Talks

    Related Posts

    போர் பதற்றம்!. 90 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு!. உலகப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்?

    March 13, 2026

    எங்கள் தீவுகளை தாக்கினால்; ” பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும்”!. ஈரான் கடும் எச்சரிக்கை!

    March 13, 2026

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    March 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் பதற்றம்!. 90 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு!. உலகப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்?

    எங்கள் தீவுகளை தாக்கினால்; ” பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும்”!. ஈரான் கடும் எச்சரிக்கை!

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    Trending Posts

    போர் பதற்றம்!. 90 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு!. உலகப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்?

    March 13, 2026

    எங்கள் தீவுகளை தாக்கினால்; ” பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும்”!. ஈரான் கடும் எச்சரிக்கை!

    March 13, 2026

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    March 12, 2026

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    March 12, 2026

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    March 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.