Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது!. பிரதமர் மோடி காரசார பேச்சு!.
    தமிழ்நாடு

    திமுக ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது!. பிரதமர் மோடி காரசார பேச்சு!.

    Editor web3By Editor web3January 23, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm modi speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாமக, அமமுக,தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.  இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்களான, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ,அன்புமணி, டிடிவி தினகரன் , ஜி.கே. வாசன், சண்முகம், ஜான் பாண்டியன், ஜெகன் மூர்த்தி, பாரி வேந்தர் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.  இந்த கூட்டத்தில் பிரமரின் உரை முக்கியமாக பார்க்கப்பட்டது.

    கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, பொங்கலுக்கு பிறகு மக்களிடையே ஆனந்தம் நிறைந்திருக்கிறது. சில நாட்களுக்கு பின்னர் தான்,பாரத ரத்னா விருது பெற்ற எம்.ஜி,ஆர் பிறந்த நாளை கொண்டாடினோம். இந்த மேடையில் இருந்து ஏறிக் காத்த ராமனின் திருவடிகளை தலைவணக்குகிறேன் என்றார். அதுமட்டும் இல்லை, அனைவரின் நலன் மற்றும் தமிழ்நாட்டின் நலனுக்காக வேண்டிக்கொள்வதாக தெரிவித்தார்.

    ”2026 ஆம் ஆண்டின் முதல் தமிழக வருகை இது. சில நாட்கள் முன்பு தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி மனிதன் பாரத் ரத்னா விருது பெற்ற எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை நாம் கொண்டாடினோம். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளும் கூட. தேசம் இந்த நாளை பராக்கிரமத்திருநாள் என்ற வகையிலே கொண்டாடி மகிழ்கின்றது. வீரம் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவை தமிழ்நாட்டு மக்களின் நாடி நரம்புகளிலே பெருக்கெடுத்து ஓடுகின்றது

    இந்த புனிதமான மண்ணிலிருந்து நான் நேதாஜி சுபாஷுக்கு நினைவாஞ்சல்களை காணிக்கையாக்குகின்றேன். நண்பர்களே இங்கே அலைகடல் என திரண்டு இருக்கும் மக்கள் வெள்ளம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் தேசம் அனைத்திற்கும் கூட ஒரு செய்தியை அளிக்கிறது. தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகிவிட்டது. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட துடிக்கிறது என்பதே அது.

    பிரதமர் மோடி, “நாங்கள் தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, அதைப் பாதுகாக்க உறுதியுடன் செயல்படுகிறோம். சில நாட்களுக்கு முன்பு, முருகனுக்கு விளக்கு ஏற்றுவது தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்தபோது, ​​எங்கள் தலைவர்கள் பக்தர்களுக்காக குரல் கொடுத்தனர். அவர்கள் (திமுக) தங்கள் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த நீதிமன்றத்தைக் கூட அவதூறு செய்தனர். தமிழ் கலாச்சாரத்தின் மிகப்பெரிய எதிரி யாராவது இருந்தால், அது திமுக தான்” என்றார்.

    தமிழ்நாடு இப்போது பிஜேபியின் என்.டி.என் அரசினை விரும்புகிறது. இந்திய குடும்பத்தின் நம்முடைய மூத்த தலைவர்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இந்தப் மேடையில் கூடியிருக்கின்றார்கள். இந்த நண்பர்கள் அனைவரும் தமிழ்நாட்டை திமுக அரசிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்கிற உறுதிப்பாட்டோடு உள்ளனர்.

    திமுக அரசை சிஎம்சி ( CMC) அரசு என அழைக்கின்றனர். சிஎம்சி என்றால் கரப்சன், மாபியா, கிரைம் என்று அர்த்தம். தமிழ் நாட்டு மக்கள் திமுக மற்றும் சிஎம்சி இரண்டையும் கிள்ளி எறிய வேண்டும் என தீர்மானம் செய்துவிட்டனர். தமிழகத்தில் தேஜவின் இரட்டை இன்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது.

    தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த பாதுகாப்பான ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுக அரசாங்கத்தின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது.

    2014 ஆம் ஆண்டு முன்பாக காங்கிரஸ் – திமுக ஆட்சியின் போது தமிழ் நாட்டிற்கு மிகக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் என்டிஏ அரசு அதிகாரப் பகிர்வு வாயிலாக மட்டும் கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் கோடி நிதியை அளித்துள்ளது. இது மட்டுமல்ல, கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக ரூ. 11 லட்சம் கோடி உதவிகளை அளித்திருக்கிறது. காங்கிரஸ் – திமுக அரசாங்கம் ரயில்வே பட்ஜெட் என்ற பெயரில் தமிழ்நாட்டு அளித்த தொலையைவிட, என்டிஏ அரசாங்கம் 7 மடங்கு அதிகமான நிதியை அளித்து வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் ஜல்லிக்கட்டைத் தடை செய்ததாக கூறினார். அவர்கள் உங்கள் அனைவரையும் அவமதித்தனர். ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தை மதித்து, அதற்கான சட்டப்பூர்வ வழிகளைக் கண்டுபிடித்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இது. தேசிய ஜனநாயகக் கூட்டணி எல்லா வகையிலும் உங்களுடன் உள்ளது என்று அவர் தமிழக மக்களிடம் கூறினார். மத்திய அரசுடன் தோளோடு தோள் சேர்ந்து செயல்படும் அரசு தமிழ்நாட்டிற்குத் தேவை. தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும். இந்தியா வளர்ச்சியடைய வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுகவை விரட்டி அடிக்கும் Countdown தொடங்கியுள்ளது – மோடி சாடல்!
    Next Article அது ஒரு டப்பா இன்ஜின்; தமிழ்நாட்டில் ஓடாது!. பிரதமர் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி!
    Editor web3
    • Website

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.