Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை (டிச. 9) விசாரணை!
    தமிழ்நாடு

    திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை (டிச. 9) விசாரணை!

    Editor web1By Editor web1December 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mdu 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை (டிச. 9) விசாரணைக்கு வருகிறது.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின், அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் இந்த தீபத்தை, மலையில் உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அந்தப் பகுதியில் சிக்கந்தர் தர்கா உள்ளதாகவும், தீபத்தூணுக்கும், தர்காவுக்கும் குறுகிய இடைவெளி இருப்பதால், அங்கு தீபம் ஏற்றும்பட்சத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ம் தேதி உத்தரவிட்டார். ஆனால், தீபநாளான 3ம் தேதி வழக்கம்போல் உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காட்டி தீபத்தூணில் தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இதனையடுத்து மீண்டும் நீதிமன்றத்தில் ராம ரவிக்குமார் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரரே உடனடியாக தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்றும், அவருக்கு சிஐஎஸ்எஃப் படையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதனால் அவர்கள் சென்ற போது, போலீசார் தடுத்தனர். உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய உள்ளதால், தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்று போலீசார் மறுத்தனர்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  இதனையடுத்து மனுதாரர் ராம ரவிக்குமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுவை தாக்கல் செய்தார். அதனை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த 4ம் தேதி மாலை 7 மணிக்கு தீபத்தூணில் மனுதாரர் உள்ளிட்ட 10 பேர் சென்று தீபம் ஏற்றலாம் என்றும் அதற்கு காவல் ஆணையர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து, மனுதாரர் ராம ரவிக்குமார் தீபம் ஏற்றச் சென்றனர். அப்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவினர், இந்து முன்னணியினர் உடன் சென்றனர். அவர்களை அப்போது தடுத்த போலீசார், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதால் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்று மறுத்தனர். இதனையடுத்து ஏற்பட்ட பரபரப்பான சூழலால் நயினார் நாகேந்திரன் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை நிறைவேற்றாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை (டிச. 9) விசாரணைக்கு வர உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவிரியில் தமிழ்நாட்டிற்கு 7.35 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஆணை!
    Next Article டிச. 22 முதல் டெல்லியில் ஆன்லைன் விசா விண்ணப்ப முறை தொடக்கம்!- சீன தூதரகம்
    Editor web1
    • Website

    Related Posts

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    டிடிவி, ஓபிஎஸ்-சை அதிமுக கூட்டணியில் இணைப்பது குறித்து இபிஎஸ்சுடன் கோயல் பேச்சா? நயினார் மறுப்பு

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.