Author: Editor TN Talks

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களிடம் 2வது நாளாக தவெக தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் பேசினார். கடந்த 27ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பலரும் ஆறுதலையும், கருத்துகளையும் கூறிவந்தனர். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்த விஜய் யாரிடமும் பேசாமல் அமைதி காத்தார். தொடர்ந்து அமைதியாகவே இருந்த விஜய் வீடியோ மூலம் பேசியதுடன், தற்போது வீடியோ கால் மூலமாக கரூர் மக்களுடன் பேசி வருகிறார். சம்பவம் நடந்து 12 நாட்கள் கடந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் வீடியோ கால் மூலம் விஜய் பேசியுள்ளார். காவல்துறை அனுமதி கிடைத்ததுடன் நேரில் வந்து சந்திப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஜய் பேசவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் விஜய் வீடியோ காலில் பேசி…

Read More

நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல், வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக திகழும் கவினின், சமீபத்தில் வெளியான ‘கிஸ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், நயன்தாரா மற்றும் கவின் இருவரது நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார். ஜென் மார்டின் இசையமைப்பாளராகவும், பிலோமின்ராஜ் படத் தொகுப்பாளராகவும், ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தின் கேப்சனில் “அனைத்து உரையாடல்களும் சின்னதாக, சிம்பிளாக Hi 🙂 ல் இருந்துதான் ஆரம்பிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது, குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மனித மிருகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் எந்த அளவுக்கு வலிமையற்று இருக்கிறோம் என்பதற்கு இந்த வழக்கு வேதனையான எடுத்துக்காட்டு ஆகும். வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன், தடயங்களை அழிக்கும் நோக்குடன் சிறுமியின் உடலையும் எரித்ததாக அதேபகுதியைச் சேர்ந்த தஷ்வந்த்…

Read More

மழைக்காலம் நம் வாழ்வில் வளம் தரும் காலமாக இருக்கட்டுமே அன்றி, நோய்களை உருவாக்கும் காலமாக மாறக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், மக்கள் உடல்நலம் குறித்து மிகுந்த கவலை தருகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ள இந்நேரத்தில், டெங்கு தொற்றைத் தடுக்க விழிப்புணர்வு மிக அவசியமானதாகும். இந்த நோயை எதிர்கொள்வதில் ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். நமது வீடு மற்றும் அதன் சுற்றுப்புறம் சுத்தமாக இருப்பது மட்டுமே டெங்கு பரவலைத் தடுக்கும் முக்கியமான முன்னெச்சரிக்கை வழியாகும். வீடுகளின் அருகே தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொட்டிகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள் மற்றும் திறந்த பாட்டில்கள் போன்றவற்றில் நீர் தேங்கியிருந்தால் உடனே அகற்ற வேண்டும். குடிநீர் தொட்டிகளைப் பாதுகாப்பாக மூடி…

Read More

10க்கும் மேற்பட்ட பெண்களை மோசடி செய்து விட்டதாக சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மாநில மகளிர் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். சமையல் கலை நிபுணரும், திரையுலக பிரமுகருமான மாதம்பட்டி ரங்கராஜ் அனைவராலும் அறியப்பட்டவர். அவரது பாரம்பரிய உணவுகள் பொதுமக்கள் மத்தியிலும், சமையல் ஆர்வலர்களுக்கு மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் இல்ல விழாக்களில் சமையல் செய்து பெரும் பிரபலமடைந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த மாதம்பட்டி ரங்கராஜ், ‘பென்குயின்’ படத்திலும் நடித்தார். தொடர்ந்து, சின்னத்திரையான விஜய் டி.வி.யில் வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை…

Read More

கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க அனுமதி கோரி, டிஜிபி அலுவலகத்தில் விஜய்யின் வழக்கறிஞர் மனு அளித்துள்ளார். கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையில், விஜய் கரூர் செல்லும்போது எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு…

Read More

தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா? என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார். பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவடைந்தது. அதனடிப்படையில், பீகாரில் உள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 64 லட்சம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இறப்பு, இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இரு இடங்களில் பதிவு என மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், இது குறித்து கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், “SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும்…

Read More

திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் கலந்துரையாடி வரும் நிலையில், மாவட்ட, நகர, பகுதி செயலாளர்களை மாற்றியுள்ளது அக்கட்சியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 2026 தேர்தல் பணி தொடர்பாக சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார். உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சரமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை, நேற்று மதுரை தெற்கு, சிவகாசி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதுவரை மொத்தமாக 22 நாட்களில் 52 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்துள்ள நிலையில் நேற்று 23வது நாளாக ஒன் டூ ஒன் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்தி நீக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி புதிய மாவட்ட செயலாளராக கிரகாம்பெல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, அரூர் தொகுதி, வேறொரு…

Read More

காவல்துறையிலிருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படி பேசுவது ஆச்சர்யமில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரும், மாநிலச் செயலாளருமான முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் மொழியால் போலிப்பணிவும், நரம்பில்லாத நாக்கால் தடித்த வார்த்தைகளை தரம் பார்க்காமல் எல்லோர்மீதும் கொட்டுவதும் வழக்கமாக கொண்ட, பாஜகவாலேயே புறக்கணிக்கப்பட்ட மாஜி அண்ணாமலை, இன்று எங்கள் தலைவரைப்பற்றி, ஒரு ராஜ்யசபா சீட்டிற்காக தன் ஆன்மாவை விற்றுவிட்டவர் என்று கூறியுள்ளார். ஆட்களையும், கட்சிகளையும் விலைக்கு வாங்கும் பழக்கமுள்ள பாஜகவும், அந்தக்கட்சியால் காவல்துறையிலிருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படி பேசுவது ஆச்சர்யமில்லை. உலகம் புகழும் மாபெரும் கலைஞர், இந்திய அரசின் வருமானத் துறையாலேயே நேர்மையாளர் பட்டம் பெற்றவர், 7 ஆண்டுகள் மய்யம் என்ற புதிய சித்தாந்ததோடு கட்சி நடத்தி வருபவர், பல்துறை வித்தகர் எங்கள் தலைவர். அவர் ஏற்றுக்கொண்டதால் அந்த எம்.பி., பதவிதான் கவுரவம் பெற்றதேயோழிய அவர் தகுதிக்கு…

Read More

கரூரில் துயர சம்பவம் தொடர்பான வழக்கில், கற்பனையான நபரின் பெயரில் நீதிமன்றத்தில் மோசடி செய்து உத்தரவு பெறப்பட்டுள்ளதாக, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கரூரில், தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டி விதிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து, அக்டோபர் 3ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அதிகார வரம்புக்குட்பட்ட இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “வழக்கை…

Read More