Author: Editor TN Talks
அந்தரங்கப் படங்கள், விடியோக்கள் இணையத்தில் பரவினால் உடனடியாக நீக்குவதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்கள், ஆபாச இணையதளங்களில் பரவி வரும் தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை நீக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெண் வழக்கறிஞரின் விடியோக்களை நீக்க இணையதளங்களுக்கும், இது போன்ற வீடியோக்கள் இணையத்தில் பரவுவதை தடுக்கும் வகையிலும், புகார் அளிக்கும் வகையிலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள், தமிழகத்தில் மேலும் 9 இணையதளங்களில் பரவி வருவதாக அதன் விபரங்களை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு டி.ஜி.பி. தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, மனுதாரர் தரப்பில் ஏற்கனவே…
இன்று மும்பையில் 2வது சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். நாட்டின் பரபரப்பான நகரங்களில் ஒன்றான மும்பையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மிகப்பெரிய அளவில் 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணி 4 கட்டங்களாக நடைபெற்றது. ரூ.19,650 கோடியில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்ட பணி நிறைவு பெற்றது. இந்த நிலையில் விமான நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து ஆச்சார்யா அட்ரோ சவுக் முதல் கப்பரேடு வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக ரூ.12,300 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பை மெட்ரோவின் 3வது வழித்தட பணியும் முற்றிலும் பயன்பாட்டிற்கு வருகிறது. இதனை தொடர்ந்து மும்பை ஒன் போக்குவரத்து திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.…
கரூர் தவெக பிரச்சாரப் பரப்பரை கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார் இன்று கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் பரத் முன்பு ஆஜர் படுத்தினர். அப்போது, இருவரையும் பார்த்த நீதிபதி, உங்களை எதற்காக கைது செய்து உள்ளார்கள், நீங்கள் கைது செய்யப்பட்டது உங்கள் குடும்பத்தினருக்கு தெரியுமா, போலீசார் உங்களை தாக்கினார்களா என கேட்டார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கரூரில் நடந்த உண்மைகளை டாக்குமெண்டாக தாக்கல் செய்வதாகவும், உண்மை தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக தரப்பில் கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், அருணா ஜெகதீசன் விசாரணையில் உள்ளதால் அதில் நடந்த உண்மை தன்மை தெரிய வரும் என்றார். தொடர்ந்து வாதாடிய தவெக தரப்பினர், கரூர் மாவட்டத்தில் சம்பவம் நடந்த அன்று சம்பள…
சிங்கபெருமாள் கோவில் அடுத்த மருதேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தன்னை கடித்த நல்ல பாம்புடன் சிகிச்சைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த மருதேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (38). விவசாயியான இவர், தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, தன்னை ஏதோ சீண்டியது போல உணர்ந்துள்ளார். இதனையடுத்து விவசாயி முத்து, தன்னைச்சுற்றி பார்த்தபோது, நல்லபாம்புக் குட்டி ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்துள்ளது. இதற்கிடையில் முத்துவிற்கு மயக்கம் ஏற்ப்பட்டது. முத்துவோடு உடன் இருந்த உறவினர் ஒருவர், முத்துவை கடித்தது இந்த பாம்புதான் என அந்த பாம்புக் குட்டியை பிடித்தார். மேலும், அந்த பாம்புக் குட்டியை கவர் ஒன்றில் போட்டுக்கொண்டு நேரடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக முத்துவை அழைத்துச் சென்றார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முத்துவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நல்லப்பாம்புடன் முத்து சிகிச்சை பெற வந்ததை கண்ட சக நோயாளிகள் மற்றும்…
கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், தவெக தலைவர் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையில், விஜய் கரூர் செல்லும்போது எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில்,…
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாகவும், இந்தியாவிலேயே 11.19% பொருளாதார வளர்ச்சியோடு இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) சார்பில் இன்று முதல் 3 நாட்கள் வரை நடைபெறும் “AeroDefCon25” கண்காட்சி மற்றும் கருத்தரங்கை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறை சார்ந்த இந்த மாநாட்டை தமிழ்நாட்டில் முதல்முறையாக தொடங்கி வைத்துள்ளதாகவும், அனைத்து விதமான வளர்ந்து வரும் தொழில்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் அடையாளம் தான் இந்த மாநாடு. மின்னணு பொருட்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக கூறிய அவர், இந்தியாவிலேயே 11.19% பொருளாதார வளர்ச்சியோடு இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் துறை இடம்பெற்றிருக்கும் நகரங்களில் பல தொழில்…
இனிவரும் காலங்களில் கரூர் சம்பவம் போன்று நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பும், என் பொறுப்பும் தான் என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று முன்தினம் (05-10-25) இரவு அப்போலோ மருத்துவமனையில் திடீரெனெ அனுமதிக்கப்பட்டார். மாதம் மாதம், பரிசோதனை மேற்கொள்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு செல்லும் ராமதாஸ், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. மேலும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசன், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “பாமக நிறுவனர் ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன் நலம் விசாரிப்பதற்கு முன்பே நல்ல செய்தி வந்தது.இன்று மாலை அவர் சிகிச்சை முடிந்து இல்லம்…
சிலம்பரசன், வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு ‘அரசன்’ என பெயர் சூட்டப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சிலம்பரசன் (STR) மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் ‘STR 49’ என்று குறிப்பிடப்பட்டு வந்தது. கேங்ஸ்டர் சம்பந்தமான இந்த திரைப்படத்தின், படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக புரோமோ விடீயோ வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான தலைப்பு ’அரசன்’ என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதோடு, ‘அரசன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியது. போஸ்டரில் சிலம்பரசன் இரத்தத்தால் நனைந்த சட்டையுடன் காட்சியளிக்கிறார். அவர் கையில் கத்தியை ஏந்தி, ஒரு சைக்கிளுக்கு அருகில் நிற்பது போன்ற தோற்றம் அமைந்துள்ளது. இந்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ் ஐசியூவில் இருப்பதால் பார்க்கமுடியவில்லை என அன்புமணி தெரிவித்த சில நிமிடங்களில், நேரில் சந்தித்த புகைப்படத்தை ஜி.கே.மணி வெளியிட்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று முன்தினம் (05-10-25) இரவு அப்போலோ மருத்துவமனையில் திடீரெனெ அனுமதிக்கப்பட்டார். மாதம் மாதம், பரிசோதனை மேற்கொள்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு செல்லும் ராமதாஸ், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. மேலும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து, மருத்துவர் ராமதாஸின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் நேற்று திங்களன்று மருத்துவமனை மருத்துவர்களை சந்தித்து, ராமதாஸுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று இருதய மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அவர் ஐ.சி.யூவில் இருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை” என்று…
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி வயது முதிர்வு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். சட்டமன்ற தேர்தல் காரணமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் தவெக கட்சியை விமர்சித்து பேசி வந்தார். தொடர்ந்து தேமுதிக பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சாரம், தேர்தல் பணிகளில் பிரேதமலதா விஜயகாந்த் ஈடுபட்டு வரும் சூழலில், அவருக்கு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் உள்ள அவரது தாயார் அம்சவேணி திடீரென உயிரிழந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில், பிரேமலதா விஜயகாந்தின் தாய் உடல் சாலி கிராமத்தில் உள்ள சுதீஷ் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தாய் இறந்த செய்தி கேட்ட பிரேமலதா தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியுள்ளார். அம்சவேணியின் இறுதி ஊர்வலம் விருகம்பாக்கம் இல்லத்தில் இருந்து நாளை மதியம் 1 மணி அளவில் தொடங்கி வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில்…