Author: Editor TN Talks
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தி வருமாறு.. சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று (3.7.25) என்னை நேரில் சந்தித்து, தாங்கள் தங்கும் சட்டக் கல்லூரியில் போதிய விடுதி வசதியின்மை, மோசமான கழிவறை பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதியின்மை குறித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போரட்டத்தை நிறுத்தியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். ஆனால், அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குறிப்பாக இந்தாண்டு சட்டத்துறை மானிய கோரிக்கையின்போது சுமார் 21.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விடுதி கட்டிடம் பல்கலைக்கழக வளாகத்திலேயே கட்டப்படும் என்று அறிவித்த நிலையில், இதுவரை எந்த முன்னெடுப்பு செய்யப்படவில்லை என்றும் என்னிடம் முறையிட்டனர். தற்போது அரசின் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றில் மாணவர்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், பல மாணவர்கள் தனியார் விடுதிகளில் தங்குவதாகவும், அவர்களால் அதிக வாடகை கொடுத்து தங்க முடியாத…
திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியத்தின் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக இருக்கும் செல்வானந்தம். இவரது மனைவி முத்துபிரியா நவநாரி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார். செல்வானந்தம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்காச்சோளம் தொழில் செய்து வந்தார். இதன் இடையில் தொழில் நஷ்டம் ஏற்பட்ட காரணமாக பணத்தை தாமதமாக செலுத்தி வந்து உள்ளார். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ பவித்ரா ட்ரேடர்ஸ் உரிமையாளர் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் செல்வானந்தம் 80 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று வீட்டில் வந்து மிரட்டியதாக செல்வானந்த மனைவி கூறுகிறார். அதனைத் தொடர்ந்து அந்த இருவருக்கும் தி.மு.க மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகியான மணிமாறன் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முத்துக்குமார் என்பவர் செல்வானந்தத்தை மிரட்டி 40 லட்சம் ரூபாய் மற்றும் 45 லட்சம் ரூபாய் என மொத்தம் 85 லட்சம்…
நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் செயல்பட, இது என்ன போலீஸ் ராஜ்யமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாலை 4 மணிக்கு நேரில் ஆஜரான சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டை பார்த்து நீதிபதி வேல்முருகன், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை ஏன் பதிவு செய்யவில்லை, பதிவு செய்வதில் என்ன சிக்கல் உள்ளது என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மாஜிஸ்திரேட், சம்மன் அனுப்பிய போதிலும் அதை காவல்துறையினர் திருப்பி அளித்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, உங்கள் மோசடிக்கு நீதிமன்றத்தையும் உடந்தை ஆக்குவதா என காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, வாக்குமூலம் பதிவு…
தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆகியோர் நேரில் வந்து இன்று மனு ஒன்றை கொடுத்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 7ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். வருகிற 7 ஆம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சுற்றுப்பயணத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் மனு அளித்துள்ளோம். திருப்புவனம் விவகாரம் லாக்அப் மரணம் அல்ல. அது ஒரு படுகொலை என வெளிக்கொண்டு வந்தது அதிமுக தான். முதலமைச்சர் சாரி சொல்லிவிட்டால் போன உயிர் திரும்ப வந்து விடுமா? அஜீத்குமாருக்கு முன் நிகழ்ந்த 24 லாக்கப் மரணங்களுக்கு சாரி சொன்னாரா?…
ஜனநாயகத்தின் உணர்வை வெளிப்படுத்தும் கானாவில் இருப்பதை பாக்கியமாக கருதுவதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். கானா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ஜனநாயகம் என்பது வெறும் ஒரு கட்டமைப்பு அல்ல என்றும், அது ஒரு கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு சவால்களையும் கண்ணியத்துடன் எதிர்கொள்ளும் வகையில் கானா துணிச்சலுடன் செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்தார். தமக்கு அளிக்கப்பட்ட கானாவின் தேசிய விருதை பெற்றது ஆழமான நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோதி, இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். மேலும், விருதை வழங்கிய கானா மக்களுக்கு தமது நன்றியை கூறிக்கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். கானா ஒரு தங்க பூமி என்றும், இங்குள்ள மக்கள், இதயத்தில் உள்ள அரவணைப்பு மற்றும் வலிமைக்கு சான்றாக இருப்பதாகவும் பிரதமர் கூறினார். இதையும் படிக்க: புது கணவன்களை குறிவைக்கும் புது மனைவிகள்… பீகாரில் மேலும் ஒரு சம்பவம்… கானா நாடாளுன்றத்தில்…
வேட்பு மனுவில் வழக்கு விவரங்களை மறைத்ததால், ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்ததாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம், ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது, 1 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்ற நிலையில், ஜனநாயக தீர்ப்பிற்கு மதிப்பளிக்காமல் தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதாக கூறுவது தவறு என…
”திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்” என்ற வசனத்தை நாம் அனைவரும் கேட்டிருப்போம். அந்த ஆயிரங்காலத்துப் பயிரை, பலர் அவசரகால செயல்களைச் செய்து கருக வைக்கும் அவலங்களும் இதே தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. 21-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வந்துவிட்ட பிறகும், எத்தனையோ அறிவியல், உலக வளர்ச்சிகளைக் கண்டுவிட்ட பின்பும், சாதிய ஏற்றத்தாழ்வுகள் நம் பூமியை விட்டு மறைந்தபாடில்லை. அன்றாட வாழ்வில் அதன் தாக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்திருக்கிறதோ, திருமணம் என்று வரும்போது அதன் பார்வை அவ்வளவுக்கு அவ்வளவு பெருகிக் கிடக்கிறது. “இந்தக் காலத்தில் யாரு ஜாதி பார்க்குறா?” என்று கேள்வி கேட்பவர்கள் கூட, அதன் பிடிமானத்திலிருந்து விலக அஞ்சும் அளவு நெருக்கடியான கட்டமைப்பை சாதிகள் உருவாக்கி வைத்திருக்கின்றன. அதுவே இளைஞர்கள் பலரது வாழ்வையும் வருங்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கி வருகிறது. அண்மையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைக்காட்டிபுதூரில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த ரிதன்யாவின் கதையிலுள்ள சோகமும் இதன் விளைவுதான். கடந்த ஏப்ரல் மாதம் ரிதன்யாவுக்கு…
காவல் நிலையத்தில் மூன்று பெண்கள் காவலரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மனித உரிமை ஆணையம், இதுசம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் பேக்கரி நடத்தி வரும் சிவாஜி என்பவர், மதுமிதா என்பவருக்கு செல்போனில் தகாத வார்த்தைகளால் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மதுமிதா தனது தோழி செவ்வந்தி, தனம் ஆகியோருடன் சென்று கனகம்மாசத்திரம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றபோது, ராமர் என்ற காவலர், மூவரையும் தாக்கியதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், இதுசம்பந்தமாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கை செம்பியம் காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரும் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினரின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்து வரும் நிலையில், மாநில காவல்துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும்,…
மிரட்டல் வந்திருந்தால் மன்னித்து விடுங்கள்.. விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டது ஏன்? மகனால் வந்த சோதனை…
வாரிசு நடிகர்கள் சினிமாவில் வருவது என்பது வழக்கமான ஒன்று தான். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே அடுத்தடுத்து சினிமாவை ஆள்வது என்னவோ வாரிசு நடிகர்கள் தான். அந்த வகையில் தமிழ் சினிமாவின் புதிய வாரிசு நடிகராக வளர்ந்து கொண்டு வருகிறார் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் நேரடியாக வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு வெளியான ஏஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அவரது மகனான சூர்யா பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் புரமோஷனில் சூர்யா சேதுபதி பேசிய வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக புகார் எழுந்தது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா பேசும் போது, நான் வேறு அப்பா வேறு என பேசியிருந்தது விமர்சனங்களை சந்தித்தது. பீனிக்ஸ் திரைப்படம் வரும் 4-ம் தேதி…