Author: Editor TN Talks
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முசிறி வருவாய்க் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. மதுரையை பூர்வீகமாக கொண்டவர் ஆரமுத தேவசேனா(52). திருச்சி மாவட்டத்தில் உள்ல முசிறியில் வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தவர். இவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (20.06.2025) நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தேவசேனா தனது அரசு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஜீயபுரம் பகுதிக்கு வந்த போது, திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து சாலையின் நடுப்பகுதியை தாண்டி வந்ததால், எதிரே வந்த ஆர்.டி.ஓ வாகனம் பக்கவாட்டில் மோதி விபத்தில் சிக்கியது. இதனால் நிலைதடுமாறிய வாகனம் சாலையோரம் நின்ற ஜே.சி.பி மீது விபத்தில் சிக்கியது. இதில் ஆர்.டி.ஓ ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வாகன ஓட்டுநர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில்…
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சூரியனார்கோவில் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் 16 அன்று இந்தக் கட்டிடத்தைத் திறந்துவைத்த நிலையில், திறப்பு விழாவுக்கு முதல் நாளே இரண்டு அறைகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து அவசர அவசரமாகப் பழுதுபார்க்கப்பட்டதாகவும், தற்போது மீண்டும் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் அண்ணாமலை தனது X (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “முதலமைச்சர் திறப்பு விழாவிற்குப் பிறகு, தற்போது, மீண்டும் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. ஒட்டு மொத்தமாக பேட்ச் வொர்க்கில் கட்டப்பட்ட தரமற்ற கட்டிடத்தைத்தான் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்திருக்கிறார்” என்று அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரியனார் கோவில்…
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது 67வது பிறந்தநாளை இன்று (ஜூன் 20, 2025) கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி உட்படப் பல அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து: பிரதமர் மோடி தனது X (முன்பு ட்விட்டர்) பக்கத்தில், “மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது முன்மாதிரியான தலைமை, தேசத்திற்கு அவர் ஆற்றி வரும் மகத்தான சேவை மற்றும் நமது அரசியலமைப்பைப் பேணிக்காப்பதற்கான அவரது அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாகும். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வுக்காகப் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். Warmest birthday wishes to Rashtrapati Ji. Her life and leadership continue to inspire crores of people across the country. Her unwavering commitment to public service, social justice and inclusive…
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குப் பணி நீட்டிப்பு என்பது இனி கிடையாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்று (ஜூன் 19, 2025) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “அரசு மருத்துவமனைகளில் 58 வயதுக்குப் பிறகு மருத்துவர்களுக்குப் பணி நீட்டிப்பு அளிக்கும் வழக்கம் கடந்த காலத்தில் இருந்தது. ஆனால், தற்போது மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால், இளம் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளில் காணப்படும் காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனிமேல் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்படாது. 58 வயதுடன் அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவார்கள்,” என்று கூறினார். இந்த முடிவு, இளம் மருத்துவர்களுக்கு அரசுப் பணிகளில் சேர வாய்ப்பளிப்பதோடு, மருத்துவத் துறையில் புதிய ஆற்றலையும் புத்துணர்வையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது அரசு மருத்துவமனைகளில்…
தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு மட்டுமே அரசு கடன் திட்டங்கள் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது உண்மை என்றாலும், மற்ற பிரிவினருக்கும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. சிறுபான்மையினர் நலனுக்கான தமிழக அரசின் திட்டங்கள்: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதத்தினர் போன்ற சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக குறைந்த வட்டியில் பல்வேறு கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுகடன், கைவினைக் கலைஞர்களுக்கான கடன், கல்விக்கடன் போன்ற பல திட்டங்கள் அடங்கும். தனிநபர் கடன் திட்டம்: ஆண்டுக்கு 6% வட்டியில் ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. குடும்ப…
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, ஜூன் 20, 2025 முதல் ஆகஸ்ட் 18, 2025 வரை சில முக்கிய விரைவு ரயில்களின் புறப்படும் மற்றும் வந்தடையும் நிலையங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, 5 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன. இது தென் தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும். தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 5 விரைவு ரயில்கள்: சென்னை எழும்பூர் – மதுரை தேஜஸ் விரைவு ரயில் (22671): இந்த ரயில் ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 18, 2025 வரை தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்கு புறப்படும். எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் (16127-16128): இந்த ரயில் ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 19, 2025 வரை தாம்பரத்தில் இருந்து காலை…
சன் டிவி பங்குகள் தொடர்பாக அண்ணன் கலாநிதி மாறனுக்கு, தம்பியும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பங்குகள் விவகாரத்தில் 2003-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலையை தொடர வேண்டும் என்று அந்த நோட்டீசில் அவர் வலியுறுத்தி உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இது தயாநிதி மாறன் அனுப்பும் 2-வது நோட்டீஸ் ஆகும். இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி குழுமங்களில் முக்கியமானது சன் குழுமம் ஆகும். இதனை மறைந்த முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன் நடத்தி வருகிறார். இந்தியாவின் பில்லியனர்களில் இவர் ஒருவர் ஆவார். இவருடைய சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் தான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தவறான நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத பணபரிமாற்ற விவகாரம் போன்றவற்றில் சன் குழுமம் ஈடுபட்டுள்ளதாக அந்த நோட்டீசில் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டி உள்ளார். 2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பங்குதாரர்கள்…
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளும் நாளை (19.06.2025) முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. ரோகித், விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி, எப்படி விளையாட போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் பந்துவீச்சு கூட்டணியை முன்னணி வீரரான பும்ரா வழிநடத்தவுள்ளார். இருப்பினும் அவரால் 5 போட்டிகளிலும் விளையாட முடியுமா என்பது கேள்வி தான். இருப்பினும் அவர் விளையாடும் போட்டிகளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்சமயம் உலகின் நம்பர் 1 பவுலராக செயல்பட்டு வரும் பும்ரா கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டார். அதே ஃபார்மோடு தொடரும் பட்சத்தில் அது இங்கிலாந்து அணி திணற வாய்ப்புள்ளது. இந்த…
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், நாளை இரு அணிகளுக்கும் இடையே முதல் போட்டி நடைபெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்-க்கு உட்பட்ட தொஅட்ர் என்பதால், இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அத்துடன் 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த நிலையை இந்திய அணி இந்த வருடம் மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கி காணப்படுகிறது. முதல் போட்டிக்கு தயாராகும் இந்திய அணியினர் லீட்சில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் கூடுதல் வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையானது, முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா, சமண சிற்பங்கள் என மதநல்லிணக்கத்துக்கு சான்றான தளமாக விளங்குகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தர்காவுக்கு ஆடு, கோழியை பலியிட சென்ற இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். திருப்பரங்குன்றம் மலை இந்துகளுக்கு சொந்தமானது, அங்கு ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது என பாஜக உட்பட இந்து அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்தன. தொடர்ந்து இந்தாண்டு தொடக்கத்தில் திருப்பரங்குன்றதிற்கு சென்ற எம்.பி நவாஸ்கனி மலைப் படிக்கட்டுகளில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதும் சர்ச்சையானது. மறுபுறம் தொல்லியல் துறை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் நெற்றியில் வைக்கப்பட்ட விபூதியை அழித்து விட்டு விசிக தலைவர் திருமாவளவன் மக்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது பேசுபொருளாக மாறியுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் விசிக தலைவர்…