Author: Editor TN Talks

சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தன. இந்நிலையில் சென்னை மட்டுமில்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பொய்தது. குறிப்பாக சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், கோடம்பாக்கம்,வேளச்சேரி, கிண்டி, ஆயிரம் விளக்கு, இராயப்பேட்டை, தேனப்பேட்டை, மெரினா கடற்கரை,திருவல்லிக்கேணி பகுதிகளிலும் மழை பெய்தது. அதேபோல புறநகர் பகுதிகளான கோயம்பேடு, விருகம்பாக்கம், மதுரவாயல். , பழவந்தங்கல், மீனம்பாக்க, பல்லாவரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி, பம்மல், ஆவடி உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இன்று காலையில் இருந்து வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

Read More

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்பவர், காந்த 28-ம் தேதி தனது தாய் சிவகாமியுடன் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு காரில் சென்றுள்ளார். அங்கு காவலாளியாக பணியில் இருந்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமாரிடம் தனது காரை ஓரமாக நிறுத்துமாறு சாவியை கொடுத்து சென்றுள்ளார். சாமிதரிசனம் முடித்து விட்டு திரும்பி வந்து பார்த்தப் போது நிகிதாவின் காரில் இருந்த ஒன்பதரை சவரன் நகை மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நிகிதா அஜித்குமார் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அஜித்தை அழைத்து சென்ற மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், சரமாரியாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது பணமோசடி வழக்க்கு உள்ளது தெரியவந்துள்ளது. வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.16லட்சம் வரை மோசடி செய்ததாக நிகிதா மீது கடந்த 2011-ம் ஆண்டு எஃப்.ஐ.ஆர்…

Read More

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் புதுமைகளை வெளிகொண்ர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியான ஒரு புதுமையான தொழில்நுட்பம் என்றால் அது ஏ.ஐ. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தற்போதைய இளைஞர்களிடம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் கோடிக்கணக்கானோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். எழுதுவது மற்றும் ஆராய்ச்சி செய்வது என பல வழிகளில் அதனை பயன்படுத்துகின்றனர். இதற்காக பலரும் சாட்ஜிபிடியை சார்ந்து உள்ளனர். இந்த அதிநவீன தொழில்நுட்பத்தால் மனிதர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். இந்த நிலையில் ஓபன் ஏ.ஐயின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், சாட்ஜிபிடி பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதவது சாட்ஜிபிடியை அப்படியே நம்பவேண்டாம். கேள்வி கேளுங்கள். அப்படி கேட்காமல் அதன் தகவல்களை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார். சாட் ஜிபிடியை கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம் என எச்சரித்து உள்ள அவர், அதனை ஆய்வு செய்து கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது என…

Read More

திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் என்பவர் நகை திருடுபோன வழக்கில் விசாரணைக்காக அழைத்து சென்று போலீசார் தாக்கியதில், வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சியினர் உட்பட பல அரசியல் தலைவர்களும் கண்டனம் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் போலீஸ் உயரதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி, * Social Media – வில் தற்போது ஒரு தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது எனில் அதுதான் அதிகமாக பொதுமக்கள் மத்தியில் பரவுகிறது. அது போல ஏதும் பதிவிடப்பட்டிருந்தால் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் உண்மை தன்மை குறித்து மீடியாவில் பேட்டியாக கொடுக்கலாம். மேலும், State Fact Team-க்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை கண்டிறிய வேண்டும். அது பொய் செய்தியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது Legal opinion பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.…

Read More

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கு நடைபெற உள்ளது. தமிழ் மொழியில் நடத்த கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவின் போது யாகசாலை, கருவறை, கோபுரவிமான பூஜை ஆகியவற்றை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் தரப்பில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் இணை ஆணையர் பதில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, பன்னிரு திருமுறைகள் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது முதல்…

Read More

த.வெ.க கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி பி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர், விஜய் நாராயண் நேரில் ஆஜராகி வாதிட்டார். பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் வழக்கறிஞர் பி.ஆனந்தன்…

Read More

சிவகங்கை லாக்அப் மரணத்தை தொடர்ந்து அனைத்து காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்று நடந்த கூட்டத்தில் மண்டல ஐஜிக்கள், எஸ்பிக்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பல்வேறு உத்தரவுகள் அறிவுறுத்தல்களை டி.ஜிபி வழங்கி உள்ளார். Social Media வில் தற்போது ஒரு தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது எனில் அதுதான் அதிகமாக பொதுமக்கள் மத்தியில் பரவுகிறது. அது போல ஏதும் பதிவிடப்பட்டிருந்தால் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் உண்மை தன்மை குறித்து மீடியாவில் பேட்டியாக கொடுக்கலாம். மேலும், State Fact Team-க்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை கண்டிறிய வேண்டும். அது பொய் செய்தியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது Legal opinion பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும். காவல் நிலையத்துக்கு யாரும் புகார் அளிக்க வந்தால் உடனடியா FIR / CSR கொடுக்க வேண்டும். அதில்…

Read More

குறைந்த ரயில்வே கட்டண உயர்வு என்பது வெறும் கண் துடைப்பு என்றும், உண்மையில் மறைமுகமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருமானம் ஈட்டப்படுவதாகவும் வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், குறைந்த கட்டண உயர்வு ஒரு மாயை: ரயில்களில் புறநகர் பயணக் கட்டணமோ அல்லது சீசன் டிக்கெட் கட்டணமோ உயர்த்தப்படவில்லை என்றும், ஒரு கிலோமீட்டருக்கு அரை பைசா, ஒரு பைசா அல்லது இரண்டு பைசா என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இது உண்மை நிலவரம் அல்ல என்றும், புள்ளிவிவரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன என்றும் சு. வெங்கடேசன் கூறுகிறார். வருவாய் அதிகரிப்பும் பயணிகள் எண்ணிக்கைக் குறைவும்: 2017-18 மற்றும் 2018-19 நிதியாண்டுகளில் 824 கோடி முதல் 846 கோடி பேர் பயணித்துள்ளனர். இதன்மூலம் ₹45,000 கோடி வருமானம் கிடைத்தது. ஆனால், 2024-25 நிதியாண்டில் பயணிகளின் எண்ணிக்கை 715 கோடியாகக் குறைந்துள்ளது (130 கோடி பயணிகள் குறைவு). இருப்பினும், வருமானம் ₹45,000 கோடியிலிருந்து ₹75,000 கோடியாக…

Read More

குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரது தொலைப்பேசி உரையாடல்கள், தகவல்களை ஒட்டுக்கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிஷோர் என்பவரின் தொலைப்பேசி உரையாடல்கள், தகவல்களை ஒட்டுக்கேட்ட சிபிஐ-க்கு அதிகாரம் வழங்கி, மத்திய உள்துறை அமைச்சகம், 2011 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கிஷோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சட்டப்படி நியாயப்படுத்தாத வரை, தனி நபரின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது அந்தரங்க உரிமைக்கு விரோதமானது என்பதால், குற்றச் செயல்களை கண்டறிவதற்காக ரகசியமாக ஒட்டுக்கேட்பது அனுமதிக்கத்தக்கதல்ல எனக் கூறி, கிஷோரின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அதிகாரம் வழங்கி உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், பொது பாதுகாப்பு மற்றும் பொது அவசரம் காரணாமாக மட்டும் தனி நபர்களின் தொலைப்பேசி…

Read More

குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரது தொலைப்பேசி உரையாடல்கள், தகவல்களை ஒட்டுக்கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிஷோர் என்பவரின் தொலைப்பேசி உரையாடல்கள், தகவல்களை ஒட்டுக்கேட்ட சிபிஐ-க்கு அதிகாரம் வழங்கி, மத்திய உள்துறை அமைச்சகம், 2011 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கிஷோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சட்டப்படி நியாயப்படுத்தாத வரை, தனி நபரின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது அந்தரங்க உரிமைக்கு விரோதமானது என்பதால், குற்றச் செயல்களை கண்டறிவதற்காக ரகசியமாக ஒட்டுக்கேட்பது அனுமதிக்கத்தக்கதல்ல எனக் கூறி, கிஷோரின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அதிகாரம் வழங்கி உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், பொது பாதுகாப்பு மற்றும் பொது அவசரம் காரணாமாக மட்டும் தனி நபர்களின் தொலைப்பேசி…

Read More