Author: Editor TN Talks

வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக் காலம் கடந்த 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 16ஆம் தேதி முதல் தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இதுவரை 4 அல்லது 5 முறை மட்டுமே அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்திருப்பார்கள் எனும் நிலையில், இருமுறை அவர்கள் மீது இலங்கை அரசின் ஆதரவுடன் இயங்கி வரும் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இப்போது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. தமிழக…

Read More

அமித் ஷா ஒரு முறை வந்ததற்கு பா.ம.க. உடைந்து விட்டது, அடுத்த முறை வருவதற்குள் அதிமுகவில் பிளவு வந்து விட்டது, கட்சிகளை உடைக்க நாங்கள் தேவையில்லை அமீத்ஷா அடிக்கடி வந்தாலே போதும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். சென்னையை அடுத்த நங்கநல்லூரில் ஆலந்தூர் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார். விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:- திமுகவை எப்படியும் வரும் தேர்தலில் வீழ்த்தி விட வேண்டும் என்பதற்காக அமித் ஷா அடிக்கடி வந்து போகிறார். நாடாளுமன்ற தேர்தலின் போது 8 முறை மோடி வந்தார். மோடியை ஒட ஒட விரட்டியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். மோடி 8 முறைக்கு வரும் முன் ஒரு சீட்டில் இருந்தார்கள். ஆனால் அதன் பின் அதுவும் போய்விட்டது. அமித் ஷா எங்கே…

Read More

ஒடிசா மாநிலம் புரியில் அமைந்துள்ளது ஜெகநாதர் கோயில். 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரம்மாணடமாக நடைபெறுவது வழக்கம். இந்த ரத யாத்திரையில் ஒடிசா மக்கள் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஒன்று கூடுவர். இந்த நிலையில் புரியில் நடந்த ரத யாத்திரையில் சிக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 4.30மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெகநாதர் கோயில் அருகேயுள்ள ஸ்ரீகுண்டிகா கோயிலில் ரதங்கள் சென்று கொண்டிருந்த போது, இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரதங்கள் குண்டிகோ கோயிலை நெருங்கியப் போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முண்டியடித்துக் கொண்டனர். அப்போது சிலர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். அவ்வாறு விழுந்தவர்களில் பிரபாதி தாஸ், பசந்தி சாஹூ ஆகிய இரண்டு பெண்கள் உட்பட 70…

Read More

சினிமா திரையுலகில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகிறது என்றால், உடனே அப்படங்களில் நடித்தவர்களுக்கு இடையே போட்டி, மனக்கசப்பு, சண்டை என கதைகட்டி விடுவார்கள்… அந்த வகையில், சமீபத்தில் பிரபல நடிகைகளான சமந்தா, ஸ்ரீலீலா ஆகியோருக்கு இடையே பிரச்னை என தகவல் பரவியது. தமிழ், தெலுங்கு என பல மொழிகளை தாண்டி பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. அதேப் போல நடிகை ஸ்ரீலீலாவும் பாலிவுட்டில் வலம் வரத் தொடங்கியுள்ளார். புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றீயா மாமா…’ பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். புஷ்பா-2 படத்தில் சமந்தாவுக்கு பதில் ஸ்ரீ லீலா ‘கிஸ்ஸிக்’ என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடலைப் போல் இந்த பாடலும் பெரிய அளவில் பிரபலமானது. இதையடுத்து சமந்தாவுக்கும் ஸ்ரீலீலாவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக சலசலப்புகள் எழுந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த பட விழா ஒன்றில் திரை உலக…

Read More

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த நிக்தா, என்பவர் தனது தாய் சிவகாமியுடன் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலுக்கு காரில் சென்றுள்ளார். கோயிலுக்கு சென்றதும், அங்கு காவலாளியாக பணியில் இருந்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞரிடம் காரை ஓரமாக நிறுத்துமாறு சாவியை கொடுத்துள்ளார். அவர், தனக்கு கார் ஓட்டத்தெரியாது எனக் கூறி வேறொருவரை வைத்து காரை ஓரமாக காரை நிறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய நிக்தா, அஜித்திடம் இருந்து கார் சாவியை வாங்கி, வீடு புறப்பட தயாராகியுள்ளார். அப்போது காரில் இருந்த ஒன்பதரை சவரன் நகை காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்த நிக்தா காவலாளி அஜித்குமாரிடம் கேட்க, அவர் தனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிக்தா போலீசில் புகார் அளிக்க, இது தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அங்கு சென்று அஜித்குமாரை விசாரணைக்காக ஒரு வேனில் அழைத்து சென்றுள்ளனர்.…

Read More

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை கைது செய்வது என்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து தமிழக மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே இலங்கை கடற்படையினர் தங்களது கைது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றுவிட்டு கரை திரும்பியுள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 8 மீனவர்களையும் படகோடு சேர்த்து கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசரணைக்காக அழைத்து சென்றனர்.

Read More

இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் 2025 மார்ச் மாத இறுதியில் 73,630 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2023-24 நிதியாண்டு இறுதியில் 66,880 கோடி டாலராக இருந்த நாட்டின் அந்நியக் கடன், அதே காலகட்டத்தில் 10 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்: மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம்: வெளிநாட்டுக் கடன் விகிதம் 2024-25 நிதியாண்டு இறுதியில் 19.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இறுதியில் 18.5 சதவீதமாக இருந்தது. மதிப்பீட்டு விளைவு: அமெரிக்க டாலரின் மதிப்பு ரூபாய் மற்றும் பிற நாணயங்களுக்கு எதிராக உயர்ந்ததால் ஏற்பட்ட ‘மதிப்பீட்டு விளைவு’ 530 கோடி டாலராகும். இந்த விளைவை நீக்கினால், வெளிநாட்டுக் கடன் 7,290 கோடி டாலராக உயர்ந்திருக்கும். கடன்களின் பிரிவுகள்: நிதி சாரா நிறுவனங்களின் கடன்கள்: 26,170 கோடி டாலர் மத்திய…

Read More

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.15 அடியாக உயர்ந்துள்ள நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்பட உள்ளது. நீர் இருப்பு 6155 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3720 கன அடியாகவும் உள்ள நிலையில், தமிழக பகுதிக்கு விநாடிக்கு 2100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 12 மணிக்கு, முல்லைப் பெரியாறு அணையின் 13 மதகுகள் வழியாக கேரளாவுக்கு விநாடிக்கு 250 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு, படிப்படியாக 1500 கன அடியாக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவின் பெரியாற்றின் கரையோரம் அமைந்துள்ள வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு, உப்புத்தரா, சப்பாத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் “ரூல் கர்வ்” முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜூன் 30 வரை 136 அடிக்கு மேல் நீர் தேக்க முடியாது என்பதால்,…

Read More

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் விதமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், திருமழிசை, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. எதிர்பாராத இந்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Read More

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை குறித்து விவாதிப்பதற்காக காணொலி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கணொலி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் காணொலி வாயிலாக பேசிய மு.க.ஸ்டாலின், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரை என்று மட்டும் நினைக்காதீர்கள். இது தமிழ்நாட்டு மக்களை நம்ம மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்குற ஒரு முன்னெடுப்பு என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்றார். ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்! நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்! இதுதான் தமிழர்களின் தனிக்குணம்- ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான் என்றார். வாட்சாப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ – ‘common…

Read More