Author: Editor TN Talks

மேட்டுப்பாளையத்தில் கழிவு நீர் தேங்கி நிற்கும் நெடுஞ்சாலையில் நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினர் 30 பேர் கைது..காவல்துறையினரோடு தள்ளுமுள்ளு. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தின் அருகே அன்னூர் நெடுஞ்சாலையில் 5 முக்கு சந்திப்பு சிக்னல் அருகே கழிவு நீர் வெளியேறி வருகிறது..கழிவு நீர் வெளியேறி சாலை சேதமாவதோடு அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் இதனை சீரமைக்க மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. இப்பிரச்சனை இரு மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்காத மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் கழிவு நீர் வெளியேறும் நெடுஞ்சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.. மேட்டுப்பாளையம் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக கையில் தென்னங்கன்றுடன் நாட்டு நடும் போராட்டத்திற்கு அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் தலைமையில் நகர்மன்ற குழு தலைவர்…

Read More

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த புருஷோத்தமன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி சுற்றியுள்ள கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளேட்டுகள், ஸ்பூன், கொடிகள் போன்ற அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைந்து வருகிறது. தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனையும் மீறி உற்பத்தி செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அது கைவிடப்பட்டதால், மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால் பிறப்பிக்கப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டு…

Read More

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை ஜூன் 21 ம் தேதிக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. கடந்த 2006 – 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. பின்னர், செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் திமுக முன்னாள் எம்.பி. கவுதம சிகாமணி உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத்…

Read More

பாமகவின் நிறுவனர் தலைவர் ராமதாஸ், அவரது மகனும் செயல் தலைவருமான அன்புமணி இடையிலான மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமகவின் தலைவராக நானே நீடிப்பேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் ராமதாஸ். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து நடத்திய சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது. சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருவர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தலைவர் பதவியை நான் விட்டுக் கொடுக்க தயாராக இருந்த போதும் அன்புமணி நம்பவில்லை. அய்யாவை நம்ப முடியாது. எழுதி கொடுக்க சொல்லுங்கள் என்றார். என்னை தேடி வந்த 14 பஞ்சாயத்துக்காரர்களும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள். எல்லாம் தனக்கே வேண்டும் என்று அன்புமணி சொல்கிறார். மாவட்ட செயலாளர்கள் வருகையை தடுத்து நிறுத்தி, அவரே (அன்புமணி) செல்போனில் பேசி, என்னை மானபங்கம் செய்துள்ளார். அன்று அமைதி காத்திருந்தால், அதிகாரம் தானாக…

Read More

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட 6.5 சென்ட் நிலத்தை உரிய காரணத்திற்கு பயன்படுத்தாததால் அதை திருப்பித் தரக்கோரி அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என, நில உரிமையாளர்கள்லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரித்து, இரண்டு மாதங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு 2023 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின்…

Read More

தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட காவல் துறை கதையாக உருவாகிறது. இதேவேளை, விஜய்க்கான ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் மற்றும் எமோஷனல் காட்சிகளும், அரசியல் உள்நோக்கங்களும் இதில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தை ஹச்.வினோத் இயக்குகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ரசிகர்களுக்கான சிறப்பு விருந்தாக, ஜூன் 22 – தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு டீசர் அல்லது க்ளிம்ப்ஸ் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது ✅️ தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ‘ஜனநாயகன்’ மிகப்பெரிய அரசியல் கலவையுடன் கூடிய ஆக்ஷன் கதையாக உருவாகி வருகிறது!

Read More

கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்றுக் கொள்ள இன்னும் அறிவியல்பூர்வமான தரவுகள் தேவைப்படுகின்றன என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இந்நிலையில், இன்னும் என்ன தரவுகள் வேண்டும் என்று கவிதை வடிவில் வைரமுத்து கேள்வி எழுப்பி உள்ளார். ராமர் என்ற தொன்மத்தை ஏற்றுக் கொள்ளும் மத்திய அரசு, கீழடி என்ற தொன்மையை ஏற்க மறுப்பது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார். அவரது ஆங்கார கவிதை இதோ.. ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் அவர்கள் கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க இன்னும் அறிவியல் தரவுகள் தேவையென்று சொல்லித் தமிழர் பெருமைகளைத் தள்ளி வைக்கிறார் ஒரு தமிழ்க் குடிமகனாக அமைச்சர் அவர்களுக்கு எங்கள் அறிவின் வலியைப் புலப்படுத்துகிறேன் கீழடியின் தொன்மைக்கான கரிமச் சோதனைகள் இந்தியச் சோதனைச் சாலையில் முடிவு செய்யப்பட்டவை அல்ல; அமெரிக்காவில் ஃபுளோரிடாவின் நடுநிலையான சோதனைச் சாலையில் சோதித்து முடிவறியப்பட்டவை அதனினும் சிறந்த அறிவியல் தரவு என்று அமைச்சர் எதனைக்…

Read More

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிவாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை நேரில் அழைத்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் பரிசு வழங்கி பாராட்டி வருகிறார். முதல்கட்டமாக கடந்த 30-ந் தேதியும், கடந்த 4-ந் தேதி இரண்டாம் கட்டமாகவும் இந்த விழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை அழைத்து பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டு மதிய உணவு விருந்தளித்து பாராட்டினார். இதன் மூன்றாம் கட்ட விருது விழா, நாளை (13/6/25) அன்று மாமல்லபுரத்தில் ஷெரட்டன் ஓட்டலில் நடைபெற உள்ளது. இதில் செங்கல்பட்டு, கோவை, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, தென்காசிஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 32 சட்டமன்ற தொகுதிகளில் படித்து முதலிடம் பிடித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். இதேபோன்று புதுச்சேரி மாநிலத்தின் 19 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறப்பு செய்யப்பட உள்ளனர். பெற்றோர்கள்…

Read More

காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து நீரினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 114.910 அடியாகவும் நீர் இருப்பு 85.583 டி.எம்.சி. ஆக உள்ளது. குறுவை பாசனம் காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை 5,22,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 138.52 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா அணைகளிலிருந்து மாதந்தோரும் விடுவிக்கப்படும் நீரினை கருத்தில் கொண்டும் மேட்டூர் அணையில் இருந்து 125.68 டி.எம்.சி தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள 12.84 டி.எம்.சி தண்ணீரானது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும். குறுவை பாசனம் நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 118.17 டி.எம்.சி தண்ணீரும்,…

Read More

கோவையில் திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (27). இவர், கோவையில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த தீபிகா (21) என்பவருக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் திருமணம் முடிந்தவுடன் கோவை வந்து கோவில்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சரவணன் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர், வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது, தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு சரவணன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவலின் பேரில், விரைந்து வந்த கோவில்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து இளம்பெண் தற்கொலைக்கு கணவன்,…

Read More