Author: Editor TN Talks
ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் ஜெகநாதர் கோயிலுக்கு ரத யாத்திரை கோலாகலமாக நடைபெறும். புரி ஜெகநாதர் கோயிலைப் போன்றே, குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலும் ஜெகநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கும் ரத யாத்திரை நடைபெற்றது. 400 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் நடைபெற்ற ரத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 18 யானைகள், 100 வாகனங்களை கொண்டு ரதமானது இழுத்து செல்லப்பட்டது. மேற்கொண்டு பக்தர்களும் வடத்தை பிடித்து இழுத்து சென்றனர். இந்த ரத யாத்திரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அதேப் போல் இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களின் உட்கொண்டதில் சாம்பாரில் பள்ளி இருந்ததாக கூறி நான்கு மாணவர்கள் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அதன் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் மாணவ மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது இங்கு வழங்கப்படும் உணவு அனைத்தும் காங்கேயத்தில் தயார் செய்து அங்கிருந்து அனைத்து பள்ளிகளுக்கும் உணவு பரிமாறப்படும் உணவு கொண்டு வரும் ஊழியர்கள் தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி பள்ளிக்கு உணவு வழங்கிவிட்டு மற்ற பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பொழுது அங்கிருந்து கொண்டு வந்த சாம்பாரில் பல்லி இறந்து உள்ளதை பார்த்த ஆசிரியர்கள் உடனே சாப்பிட்ட மாணவர்களை தாராபுரம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிக்காக, மூன்று பேர் கொண்ட குழுவை ராமதாஸ் நியமித்துள்ளார். பாமக பொருளாளர் சையது மன்சூர் உசேன், கரூர் பாஸ்கர், மற்றும் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழு, அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டச் செயலாளர் வேணு பாஸ்கரன் தலைமையில் அம்மாவட்ட நிர்வாகிகள் இன்று தைலாபுரத்தில் உள்ள பாமக தோட்டத்தில் மருத்துவர் ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு, வரவிருக்கும் பொதுக்குழு கூட்டங்களுக்கான ஆயத்த பணிகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் கடலூர் மாணவி தரணி முதலிடம் பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த மைதிலி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். பொதுப்பிரிவில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடமும், நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்திகா இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 3,02,374 அதில் பதிவுக்கட்டணம் செலுத்திய மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,50298. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 40,645 கூடுதலாகும். இந்த…
முல்லைப் பெரியாற்றில் 2000 கன அடிக்கு மேல் நீர் செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று தேனி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நேற்று ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்து தற்போது 135 அடியை எட்டிய நிலையில் தமிழக பகுதிகளுக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தற்போது முல்லைப் பெரியாற்றிலிருந்து 2000 கன அடிக்கும் மேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாற்றில் இரண்டு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வைகை அணைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதிக அளவில் நீர் சென்று கொண்டிருப்பதால் முல்லைப் பெரியாற்றில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என தேனி மாவட்ட நிர்வாகம்…
இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களிலும் பருவமழை பெய்து வருகிறது. ஒருசில மாநிலங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா மற்றும் குல்லு மாவட்டங்களில் கடந்த 25-ம் தேதி முதல் மழை பெய்தது. மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்த்டால், ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் அடித்துசெல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். அதனடிப்படையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 4-ம் தெதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், வருகிற 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை, பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்தும், நம் வெற்றித் தலைவரின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது. எனவே, கழக சட்ட விதிகளின்படி மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், கழக மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி, தலைவர் ஒப்புதலுடன் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25-ம் தேதி அதிகாலை இந்து முன்னணி வடக்கு ஒன்றிய தலைவர் பாலமுருகன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி சுமன் மற்றும் அவரது நண்பர் தமிழரசன் ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் நரசிம்மப் பிரவீன் மற்றும் அஸ்வின் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், தலைமறைவாக உள்ள இருவருக்கும் சம்பவத்தன்று தமிழரசன் இருசக்கர வாகனம் கொடுத்து உதவியுள்ளார். மேலும் சுமன், அஸ்வின் இடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தலைமறைவாக உள்ள இருவரும் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சுமன் தமிழரசன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி…
தி.மு.க. இலக்கிய அணி -கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை – மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 30 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. காலை 9 மணிக்கு இலக்கிய அணி, காலை 11 மணிக்கு கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, பகல் 12 மணிக்கு மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில், தி.மு.க. இலக்கிய அணி -கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை – மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளின் மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் இலவச வைஃபை இப்போது கிடைப்பதால், விமானப் பயணிகளின் கோரிக்கைகளில் ஒன்று நனவாகியுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) அதிகாரிகள் கூறுகையில், இந்த வசதி T2 சர்வதேச முனையத்தில் கிடைக்கிறது, மேலும் இதுவரை கிட்டத்தட்ட 200 பயணிகள் இந்த சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். “ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்னர் இந்த வசதியை கிடைக்கச் செய்ய நாங்கள் திட்டமிட்டிருந்தோம், மேலும் காலக்கெடுவை பூர்த்தி செய்ய விரும்பினோம். மொத்தம் நான்கு கியோஸ்க்குகளை நாங்கள் நிறுவியுள்ளோம் – புறப்பாடு மற்றும் வருகை மண்டபங்களில் தலா இரண்டு. பயணிகள் அவற்றைப் பயன்படுத்த உதவுவதற்காக கியோஸ்க்குகளுக்கு அருகில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏதேனும் ஆரம்பக் குறைபாடுகள் இருந்தால், அவற்றை உடனடியாக சரிசெய்வோம், ”என்று ஒரு அதிகாரி கூறினார். பயணிகள் 500 எம்பி வரை டேட்டாவைப் பயன்படுத்தலாம். பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ்களை ஸ்கேன் செய்தவுடன், ஒரு சீட்டில் வைஃபை அணுகுவதற்கான OTP…