Author: Editor TN Talks

தமிழக அரசு கொண்டு வந்த மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை முன்னாள் அமைச்சர் பொன்முடி ஓசி பஸ் என்று விமர்சித்து பேசியது நினைவிருக்கலாம். அதனால் அவர் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானார். இப்போது அதேபாணியில் திமுக எம்எல்ஏ ஒருவர் ஓசி பஸ் என்று பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மண்ணூத்து மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்தார். மண்டபத்தை திறந்து வைத்து கூடியிருந்த கிராமமக்கள் மத்தியில் எம்எல்ஏ மகாராஜன் பேசினார். அவர் பேசும்போது, நான் 2019 இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஓட்டு கேட்டு வரும்போது இந்த பகுதிகள் அனைத்தும் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளித்தது. இந்த மகாராஜன் பதவி ஏற்றவுடன் மழை பெய்து உங்கள் பகுதி செழிப்படைந்தது. எப்போதும் வறட்சி ஏற்படும் ஆடி மாதத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது என்றார்.…

Read More

சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிப்பாடி கிராமத்திலிருந்து அடியனூத்து வரை 19.5 கி.மீ மாநில சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை மதுரை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இதனால் பல்வேறு விவசாயம் நிலங்கள் சாலை அமைப்பதற்காக அரசு கையகப்படுத்தி சாலை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 2018 தமிழக அரசு நில எடுப்பு சட்டத்தின் படி விவசாய நிலத்திற்கு இழப்பீடு அரசு வழங்க முடிவெடுத்துள்ளனர். இதன்படி, ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.3 லட்சம் மற்றும் கிணற்றிற்கு ரூ. 30 ஆயிரம் அளவிலான மட்டுமே தமிழக அரசு இழப்பீடாக வழங்குகிறது. ஆனால் 2013ஆம் ஆண்டு மத்திய அரசின் சட்டத்தின்படி இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் மாவட்ட…

Read More

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்புத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில். தனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்த சலுகைகளையும் கேட்க போவதில்லை என குறிப்பிட்டிருந்தார். சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க தாசில்தார்களுக்கு அதிகாரம் அளித்து எந்த உத்தரவும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ், என் செந்தில்குமார் அடங்கிய அமர்வு, ஏற்கனவே திருப்பத்தூர், கோவை, அம்பத்தூர் தாசில்தார்கள் சாதி,…

Read More

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றி சீரமைப்பது குறித்து முடிவெடுக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் இரண்டு வாரங்களில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில் அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கி கிடப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் பாத்திமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஆலை வளாகத்தில் உள்ள மாசுவை சீர்படுத்தி, நிலத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்…

Read More

நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நம்நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ராகிங்கை தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் பல்கலைக்கழக மானியக்குழுவால்(யுஜிசி) வகுக்கப்பட்டு 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கல்வி நிறுவனங்களின் பொறுப்புணர்வு, முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், திடீர் ஆய்வுகள் குறித்த பல்வேறு வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பின்பற்றி கல்லூரிகள் தங்கள் வளாகங்களில் ராகிங் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும், காலத்துக்கேற்ப திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களையும் ஆண்டுதோறும் யுஜிசி வழங்கி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு தற்போது யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகம், சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருச்சி ஐஐஎம், ஜேப்பியார் பல்கலைக்கழகம் ஆகிய 5 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.…

Read More

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள அவரது பக்தர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிப்பு செய்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜபாளையம் சேத்தூர் மற்றும் கோதைநாச்சியாபுரம் கிராமத்தில் உள்ள மருத்துவர் கணேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கி உள்ள சிஷ்யைகள் வெளியேற வேண்டும் என் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதன் அடிப்படையில் ராஜபாளையம் டிஎஸ்பி சேத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நித்தியானந்தா ஆசிரமரத்தில் உள்ள சிஷ்யைகளை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வழக்கு நிலுவையில் இருக்கும் போது, யாரையும் வெளியேற்ற கூடாது எனவே, கோட்டாட்சியர் கடந்த பிறப் பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும் என நித்யானந்த தியானபீட அறங்காவலர் சந்திரசேகரன் உயர்நீதிமன்ற கிளையில் கோரியிருந்தார், இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது. நித்தியானந்தா தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார், இந்தியாவில் இல்லை. எனவே நித்யானந்தா தொடர்பான வழக்கை எப்படி விசாரிக்க முடியும்…

Read More

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, குற்றவாளி ஞானசேகருக்கு அந்தப் பகுதியில் வசித்து வரும் கோட்டூர் சண்முகம் என்பவருடன் என்பவருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், கோட்டூர் சண்முகம் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜனின் நெருங்கிய நண்பர் என குறிப்பிட்டிருந்தார். பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற காலத்தில், ஞானசேகரன் கோட்டூர் சண்முகத்திடம் பேசியதாகவும் கோட்டூர் சண்முகம் நடராஜனிடம் பேசி சிசிடிவி ஆதாரங்களை அழித்தகவும் பேட்டி அளித்திருந்தார். அண்ணா பல்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட தன்னை குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தனக்கு மன உலைச்சல் ஏற்படுத்தியதால் தனக்கு 50 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.…

Read More

நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி, 2024 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் படத்துக்கு சென்சார் சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது. இதை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் சென்சார் செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரியும், பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக இருப்பதாகவும், படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கக் கோரிய தனது விண்ணப்பத்தின் மீது விரிவான உத்தரவை பிறப்பிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும்…

Read More

திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுகவை மேலும் பலப்படுத்தும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்கியுள்ளது திமுக. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் திமுகவில் உறுப்பினர்களை அதிகரிப்பதற்காக நடவடிக்கையை மேற்கொள்ள ஓரணியில் தமிழ்நாடு என்று உறுப்பினர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்தார். அந்த வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் குறைந்தபட்சம் 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினராக சேர்க்க இலக்கை முதலமைச்சர் அறிவித்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் வரும் 20 ம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்க உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் திமுக உறுப்பினராக யார் யார் உள்ளனர் என்ற விவரங்களை கேட்டு அதன்…

Read More

தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரை 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது… மொத்தம் 204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதேபோல இந்தியா கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை 8 மணி வரை இந்தியாவில் 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை இன்று வரை 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரொனா தொற்றால் 6 பேர் உயிரிழந்துள்ளனர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மகாராஷ்டிரா -1 கேரளா – 3 கர்நாடகா – 2

Read More