Author: Editor TN Talks

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் போதைப் பொருள் விற்பனையாளர் பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் காவல்துறை 25 ஆம் தேதி சம்மன் அனுப்பியது. கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கிருஷ்ணா சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார். தற்போது ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெறுகிறது. இதில் தான் கூடிய நிலையில் நடிகர் கிருஷ்ணா தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் எனக்கு சில உடல் நல கோளாறுகள் உள்ளது அதன் காரணமாக என்னால் போதைப்பொருள் பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார். ஆனால் நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சிலரிடம் “Code word” – ல் தகவல் பரிமாற்றங்கள் இருந்துள்ளது அதற்கு என்ன அர்த்தம்? போதைப் பொருள்…

Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய திமுக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி முத்துபாலகிருஷ்ணன் என்பவரை திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இக்கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்ன செய்திகள் வருகின்றன. இதையும் “தனிப்பட்ட கொலை” என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா? திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில்…

Read More

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டத்தில், இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடர் 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு(2025-2027) உட்பட்டது. இந்த போட்டி நிறைவடைந்ததை அடுத்து 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் இந்த சுழற்சியில் முதல் போட்டியை இந்தியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ள இங்கிலாந்து 100 சதவீத புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. 2-வது மற்றும் 3-வது இடங்களில் 33.33 சதவீத புள்ளிகளுக்கு வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் உள்ளன. தோல்வியை தழுவிய இந்திய அணி இன்னும் புள்ளிக் கணக்கை தொடங்காமல் 4-வது இடத்தில் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,…

Read More

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் சித்தார்த். தமிழில் கமலுடன் இணைந்து இவர் நடித்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் தோல்வியடைந்தாலும், இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. சித்தார்த், சரத்குமார், தேவையானி உட்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘3பி.எச்.கே.’ 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இப்படத்தையும் இயக்கியுள்ளார். சித்தார்த்தின் 40-வது படமான இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகவுள்ளது. மிடில் கிளாஸில் இருக்கும் குடும்பம், தங்களுக்கென சொந்தமாக ஒரு 3 பி.எச்.கே வீடு வாங்க ஆசைப்படும் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

ரூ.50 லட்சம் ஏமாற்றியதால் கடந்த ஒரு வருடமாக முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத்திடம் தான் பேசுவதை தவிர்த்ததாக போலீசாரிடம் நடிகர் கிருஷ்ணா வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்தின் திரைப்படம் தயாரிப்பதால் அவர்தான் தன்னை பிரசாத்திடம் அறிமுகம் செய்து வைத்ததாகவும், மற்றப்படி நேரடி பழக்கமில்லை எனவும் கிருஷ்ணா கூறியுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் போதைப் பொருள் விற்பனையாளர் பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் காவல்துறை 25 ஆம் தேதி சம்மன் அனுப்பியது. கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கிருஷ்ணா சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார். தற்போது ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய நிலையில் நடிகர் கிருஷ்ணா தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் எனக்கு சில உடல் நல கோளாறுகள் உள்ளது அதன் காரணமாக என்னால் போதைப்பொருள் பயன்படுத்த முடியாது என காவல்துறை…

Read More

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களான மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை டேக் ஆப், மாலிக் படங்களை இயக்கிய இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இதில் குஞ்சாக்கோ போபன், பகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கைய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடிக்கும் 8-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இப்படத்திற்கு “பேட்ரியாட்” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக இலங்கை சுற்றுலாத்துறை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ‘பேட்ரியாட்’ என்கிற படத்தில் நடிப்பதற்காக வரும் மோகன்லாலை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தனர். நடிகர் மோகன்லாலும் பேட்டி ஒன்றில் படத்தின் டைட்டில் பேட்ரியாட் தான் என்பதை உறுதி செய்துள்ளார்.

Read More

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது. இக்கோயிலின் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், பணிக்கு வந்துள்ள மற்ற அர்ச்சகர்கள் கணேசன், வினோத் ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் மது அருந்தி ஆபாசமாக ஆடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று 3 அர்ச்சர்கள் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோயில் அர்ச்சர்களை தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர் . விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் வருடத்திற்க்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். மேலும் முக்கிய நாட்களில் மாதாந்த வெள்ளிகளில் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் குத்துவிளக்கு ஏற்றி குத்துவிளக்கு பூஜை…

Read More

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும்,ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் தமிழக மட்டுமல்லாது பிற மாநிலங்களையும் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்துவிட்டு,சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தக்காடு , தூவானம் அணை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். சுருளி அருவிப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் எனவும், நீர் வரத்து சீரான தகவல் வந்தவுடன்…

Read More

கடந்த 23-ம் தேதி போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் கொகைன் போதைப் பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் ஸ்ரீகாந்த் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவரவே, அவரை கைது செய்த போலீசார், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வரும் ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் ஸ்ரீகாந்த் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை பெசன்ட் நகரில் கலாஷேத்ரா காலனியில் ராமச்சந்திரா காலையில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அவரது…

Read More

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கை காலை நேரத்திலேயே நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல். திருச்செந்தூரை சேர்ந்த ஆர்.சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கை 7-7-2025 அன்று காலை 06 மணி முதல் காலை 6.47 மணி வரை என நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஆனால், இதற்கு பதிலாக, 7-7-2025 மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தோஷங்கள் இல்லாத நல்ல முகூர்த்த நேரம் உள்ளது. எனவே அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இந்த ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி கோயில் நிர்வாகம் அமைத்த நிபுணர் குழு முடிவு செய்த காலை நேரத்திலேயே குடமுழுக்கு நடத்தலாம். ஆனால் வரும்…

Read More