Author: Editor TN Talks

ஈரான் அதிபர் மசூத் பெஷேஸ்கியனிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறி, அந்த நாடு மீது கடந்த 13-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் அணு ஆயுதத் தளங்கள், அணு விஞ்ஞானிகள் உள்ளிட்ட அணுசக்தித் துறையை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. அத்துடன் அந்த நாட்டின் ராணுவ நிலைகள், எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட பிற பகுதிகளையும் தாக்குதலுக்கு இலக்காக்கி வருகிறது. தங்கள் போர் விமானங்கள் மூலம் ஈரான் முழுவதும் பரவலாக இஸ்ரேல் அதிரடித் தாக்குதலை அரங்கேற்றி வருகிறது. இதற்கு பதிலடியாக, ஈரானும் இஸ்ரேல் மீது அலை அலையாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி வருகிறது. இதில் இஸ்ரேலும் பலத்த சேதங்களைச் சந்தித்து வருகிறது. மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் இந்த ராணுவ மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. நேற்றும் இரு நாடுகளும்…

Read More

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு கோலாகலமாக தொடங்கியது. இதனையொட்டி, அங்குள்ள திடலில், அறுபடை வீடு முருகன் கோவில்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டு, தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலை, கோவில் பின்னணியில் இருப்பது போன்று இந்த மாநாட்டுக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேடையில் அறுபடை வீடுகளின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு நடுவில் முருகப்பெருமான் வேலுடன் நிற்கும் பிரமாண்ட சிலை போன்ற வடிவமைப்பும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. இருக்கைகள் அமைக்கப்பட்டு நேற்று அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றன. மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது முருக பக்தர்கள் மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 3 லட்சம் சதுர அடி பரப்பில் 5 லட்சம் பக்தர்கள் அமரும் வகையில்…

Read More

1962-ல் மாநிலங்களவையில் தனது கன்னிப்பேச்சில் I belong to the Dravidian stock என்றார் பேரறிஞர் அண்ணா. அந்த ஒரு வார்த்தைக்கே ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் அதிர்ந்து போனதை அவைக்குறிப்புகளில் காண்கிறோம். அன்றுமுதல் இன்றுவரை திராவிடம் என்றாலே வடஇந்தியா ஒவ்வாமையுடன் அணுகுவதையும், தென்னிந்தியாவிலேயே கூட புரிதல் இல்லாத நிலைமையும் தான் காணப்படுகிறது. இன்று உலக அளவில் கம்யூனிசம், சோஷலிசம் போன்ற சித்தாந்தங்கள் பரந்து விரிந்திருக்கிறது என்றால் அது உயர்கல்விக் கூடங்களில், ஆய்வுத் தளங்களில் மீண்டும் மீண்டும் பயிலவும் விவாதிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டதால் தான். அந்த சித்தாந்தங்களை எதிர்ப்பவர்கள் கூட அதனை பல்கலைக்கழங்களில் பாடமாக பயில வேண்டிய ஒரு சூழல் கடந்த 200 ஆண்டுகளில் ஏற்பட்டதே அவை இன்றளவும் பேசுபொருளாக இருக்கக் காரணம். ஆனால் நூற்றாண்டு கால சித்தாந்தம், பல்லாயிரம் ஆண்டுகால நிலப்பரப்பின் பெயராக இருந்தும் திராவிடம் என்றால் தமிழ்நாட்டைத் தாண்டி பலபேருக்கு தெரிவதில்லை. சுதந்திரத்திற்கு பிறகு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியை விடவும் பல…

Read More

தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் பா.ஜ.க வை 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் எனவும் தமிழ் கடவுள் முருகனை ஏமாற்றி வேஷம் போட முடியுமா ? பா.ஜ.க வேசம் சில மக்களை ஏமாற்றலாம். முருகனை ஏமாற்ற முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ ? அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழ் கடவுள் முருகன் புறக்கணிப்பார் என்றார். தமிழகத்தில் முருகன் மாநாடு எதற்காக நடத்துகிறார்கள் அயோத்தியில் ராமர் நாடியதற்காக நடத்தினார்கள் ? என கேள்வி எழுப்பியதோடு, அயோத்தியில் ராமர் பா.ஜ.க வை கைவிட்டு விட்டார். மக்களை நம்பி பா.ஜ.க கிடையாது. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது பா.ஜ.க என்று குற்றஞ்சாட்டினார். தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி தராமல் மறுதலிக்கிறார்கள் என்றார். காங்கிரஸ் இருக்கும் வரை தமிழகத்தில் இருமொழிக்…

Read More

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தபடி, ஈரானின் பர்தாவ் (Fordow), நடான்ஸ் (Natanz) மற்றும் எஸ்பஹான் (Esfahan) ஆகிய மூன்று முக்கிய அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்திய அதிபர் டிரம்ப், இது ஈரானின் அணு ஆயுதத் திறனை அழிப்பதற்கான ஒரு வெற்றிகரமான நடவடிக்கை என்று தெரிவித்தார். “ஈரானின் முக்கிய அணு செறிவூட்டும் வசதிகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன,” என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு B-2 பாம்பர் விமானங்கள் (stealth bombers) மற்றும் Tomahawk ஏவுகணைகள் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாக ஃபோர்டோ அணு ஆலையில் “பங்கர்-பஸ்டர்” குண்டுகள் வீசப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவின் இந்த…

Read More

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 51-வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமது கட்சி மூலம் விஜய் எடுத்திருக்கும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு, இந்தப் பிறந்தநாள் விழா முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவர் பெயரில் நற்பணிகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளில் அவரது ஹிட் படங்கள் மறுவெளியீடாகி இருக்கின்றன. உலகம் முழுவதிலும் தமக்கிருக்கும் பெரும் ரசிகர்ப் படையின் நம்பிக்கையில் அரசியலில் இறங்கியிருக்கிறார் விஜய். அவரது இந்த முடிவை அலசுகிறது இந்தக் கட்டுரை. விஜய்க்கு எப்படி இந்த மாஸ்? இயக்குநர் எஸ்.ஏ.சியின் மகன் விஜய்,  நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் 1992-ம் ஆண்டிலிருந்து நடித்து வந்தபோது உருவ கேலிக்கு ஆளானார். பெரும் இயக்குநரின் மகன் என்றால் நடிக்க வந்துவிடுவதா என அடுத்தடுத்த படங்களில் விமர்சிக்கப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து தம்மை மேம்படுத்திக்கொண்டு,  நடனத்திற்காகவும் குழந்தைத்தனம் மாறாத முகத்திற்காகவும், சாக்லேட் பாய் தோற்றத்திற்காகவும்…

Read More

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மாணவி நபிலா, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், குரூப் 1 தேர்விலும் 27-வது இடம் பிடித்து இரட்டை வெற்றி பெற்று அரசுப் பணிக்குத் தேர்வாகியுள்ளார். கம்பம் மெட்டு காலனியில் உள்ள நபிலாவின் இல்லத்திற்குச் சென்ற தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மாணவி நபிலாவின் சாதனையைப் பாராட்டி, அவருக்குப் பரிசுகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நபிலாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த வெற்றி, தேனி மாவட்டத்திற்கும் கம்பம் பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளது.

Read More

தேசிய புலனாய்வு முகமை (NIA) தமிழக அரபிக் கல்லூரிகளை குறிவைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அநீதியானதாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பதாகக் கூறி, அரபி மதரஸாக்கள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதாக என்ஐஏ மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவையைச் சேர்ந்த அரபிக் கல்லூரி முதல்வர் அகமது அலி, ஊழியர் ஜவஹர் சாதிக், சென்னை பாலவக்கத்தை சேர்ந்த ஷேக் தாவூத், திண்டுக்கல் பெரியகலையம்புத்தூரைச் சேர்ந்த ராஜா அப்துல்லா ஆகியோர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்தாண்டு இதே வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மதரஸாக்களை குறிவைத்து என்ஐஏ அநீதமான முறையில் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுகின்றன. கைது செய்யப்பட்டவர்கள் கடந்த ஒரு வருடமாக என்ஐஏ விசாரணைக்கு…

Read More

சாலை மற்றும் மேம்பாலத் திட்டங்களில் தமிழ்நாடு புதிய வரலாற்றுப் படைக்கிறது. மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் பிரம்மாண்டமான சாலை மற்றும் மேம்பாலப் பணிகள், இந்தியாவின் நெடுஞ்சாலைத் துறையில் தமிழகத்தை ஒரு சிறந்த மாநிலமாக முன்னிறுத்துகின்றன. முக்கியத் திட்டங்கள் மற்றும் முதலீடுகள்: 9,620 கி.மீ. சாலைப் பணிகள்: ரூ.17,154 கோடி செலவில் 9,620 கி.மீ. நீளச் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டம்: இத்திட்டத்திற்காக ரூ.6,065 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றியச் சாலைகள்: 5,064.53 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றியச் சாலைகள் ரூ.4,907.17 கோடி செலவில் நிறைவு செய்யப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைப் பணிகள்: ரூ.4,061.71 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓடுதளப் பாதைகள் மேம்பாடு: 6,805 கி.மீ. நீள ஓடுதளப் பாதைகள் ரூ.2,074 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. உயர்மட்டப் பாலங்கள்: 1,049 தரைப்பாலங்கள் ரூ.1,372 கோடி செலவில் உயர்மட்டப்…

Read More

கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹமாஸை அழிக்கும் வரை ஓயப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்த நிலையில், காசா மீது இஸ்ரேல் ஒரு வருடத்திற்கும் மேலாகப் போர் தொடுத்து வருகிறது. இந்தச் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காகக் கொண்டு 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசித் தாக்கியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. இதன்பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்திருந்த நிலையில், திடீரென “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த 13-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இது ஈரானின் அணு ஆயுதப் பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டதால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. …

Read More