Author: Editor TN Talks
உத்தரபிரதேசத்தில் மனைவி தகாத உறவில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தியோரியா பிரசித்நகர் கிராமத்தை சேர்ந்தவர் கில்வான். விவசாயியான அவர், அரியானா மாநிலம் ஷாஹாபாத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கில்வானின் மனைவி, அதேப் பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தாக தெரிகிறது. இந்த விஷயம் கில்வானுக்கு தெரியவர, இது குறித்து மனைவியை கண்டித்துள்ளார். ஆயினும் அதனை கண்டுகொள்ளாத அவர், கள்ளக் காதலை வளர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், மனைவியை தாக்கியதோடு, அவரது மூக்கை கடித்து துப்பிவிட்டு தப்பியோடியுள்ளார். வலியால் அப்பெண் கதறிய நிலையில், சத்தம் கேட்டு வந்த அக்கம்…
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலன் விசாரணையை விரைந்து முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் இடம்பெற்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை புலன் விசாரணை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த 13-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் ஆணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கமளித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரானின் ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட சொரோகா மருத்துவமனையை பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் பேட்டியளித்த அவர், நாம் அனைவரும் இழப்புகளை சந்தித்துள்ளோம். எனது குடும்பமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனது மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அது போருக்காக நாங்கள் கொடுத்த விலையாகும். இதனால்…
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1,000கோடி டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , வி.லட்சுமி நாராயணன் அமர்வு, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.…
ன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் கடந்த 2023 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரிய வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்த போது, 2023 ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, 2023ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை; அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, 2023 ம் ஆண்டு செப்டம்பர் முதல், இதுவரை தமிழகத்தில் தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு…
நடிகர் சூர்யா தயாரிப்பு, நடிப்பு என இரண்டிலும் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சூர்யாவின் 44-வது படமாக வெளியான ரெட்ரோ, உலகளவில் ரூ.234 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஆர்.ஜே.பாலாஜி இயக்கம், நடிப்பு என இரண்டிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியான மூக்குத்தி அம்மன், எல்.கே.ஜி போன்ற படங்கள் வெற்றியடைந்தன. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45-வது படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். அத்தோடு சூர்யாவிற்கு ஜோடியாக திரிஷாவும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகிபாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இப்படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது.…
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முசிறி வருவாய்க் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. மதுரையை பூர்வீகமாக கொண்டவர் ஆரமுத தேவசேனா(52). திருச்சி மாவட்டத்தில் உள்ல முசிறியில் வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தவர். இவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (20.06.2025) நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தேவசேனா தனது அரசு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஜீயபுரம் பகுதிக்கு வந்த போது, திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து சாலையின் நடுப்பகுதியை தாண்டி வந்ததால், எதிரே வந்த ஆர்.டி.ஓ வாகனம் பக்கவாட்டில் மோதி விபத்தில் சிக்கியது. இதனால் நிலைதடுமாறிய வாகனம் சாலையோரம் நின்ற ஜே.சி.பி மீது விபத்தில் சிக்கியது. இதில் ஆர்.டி.ஓ ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வாகன ஓட்டுநர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில்…
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சூரியனார்கோவில் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் 16 அன்று இந்தக் கட்டிடத்தைத் திறந்துவைத்த நிலையில், திறப்பு விழாவுக்கு முதல் நாளே இரண்டு அறைகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து அவசர அவசரமாகப் பழுதுபார்க்கப்பட்டதாகவும், தற்போது மீண்டும் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் அண்ணாமலை தனது X (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “முதலமைச்சர் திறப்பு விழாவிற்குப் பிறகு, தற்போது, மீண்டும் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. ஒட்டு மொத்தமாக பேட்ச் வொர்க்கில் கட்டப்பட்ட தரமற்ற கட்டிடத்தைத்தான் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்திருக்கிறார்” என்று அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரியனார் கோவில்…
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது 67வது பிறந்தநாளை இன்று (ஜூன் 20, 2025) கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி உட்படப் பல அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து: பிரதமர் மோடி தனது X (முன்பு ட்விட்டர்) பக்கத்தில், “மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது முன்மாதிரியான தலைமை, தேசத்திற்கு அவர் ஆற்றி வரும் மகத்தான சேவை மற்றும் நமது அரசியலமைப்பைப் பேணிக்காப்பதற்கான அவரது அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாகும். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வுக்காகப் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். Warmest birthday wishes to Rashtrapati Ji. Her life and leadership continue to inspire crores of people across the country. Her unwavering commitment to public service, social justice and inclusive…
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குப் பணி நீட்டிப்பு என்பது இனி கிடையாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்று (ஜூன் 19, 2025) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “அரசு மருத்துவமனைகளில் 58 வயதுக்குப் பிறகு மருத்துவர்களுக்குப் பணி நீட்டிப்பு அளிக்கும் வழக்கம் கடந்த காலத்தில் இருந்தது. ஆனால், தற்போது மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால், இளம் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளில் காணப்படும் காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனிமேல் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்படாது. 58 வயதுடன் அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவார்கள்,” என்று கூறினார். இந்த முடிவு, இளம் மருத்துவர்களுக்கு அரசுப் பணிகளில் சேர வாய்ப்பளிப்பதோடு, மருத்துவத் துறையில் புதிய ஆற்றலையும் புத்துணர்வையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது அரசு மருத்துவமனைகளில்…