Author: Editor TN Talks
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று மிகுந்த ஆனந்தமாக முடிந்தது. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார், இசையை அனிருத் அமைத்துள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதனுடன் தன்னுடைய சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு, இனி முழுமையாக அரசியலில் ஈடுபட இருப்பதாக தளபதி விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரசிகர்கள் மனதில் நெகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய இந்த முடிவால், தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. தளபதி விஜய் முழு நேர அரசியல் பயணத்தை இன்று முதல் தொடங்குகிறார் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அவரது கடைசி திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு உணர்ச்சிபூர்வ தருணமாகும்.
ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசியில் பயணம் செய்வார். வைகாசியும் ஆனியும் இணைந்த மாதம். கோவில்களில் திருவிழாக்கள் நிறைந்த மாதம். ஜூன் மாதம் கிரகங்கள் கும்ப ராசியில் இருந்து வரிசையாக பயணம் செய்கின்றன. ராகு கும்ப ராசியிலும் சனி மீன ராசியிலும் மேஷத்தில் சுக்கிரன் ரிஷபத்தில் சூரியன், மிதுனத்தில் புதன், குரு சிம்மத்தில் கேது, செவ்வாய் என கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்களின் பயணம் மற்றும் பார்வையால் மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரையிலான ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பயணம் சாதகமாக உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் செயல்கள் நீங்கும். உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம்…
மறைந்த முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி விடுத்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு.. தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்! முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்! ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து – இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!
நகர்புற உள்ளாட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளி ஒருவரை நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளை பொருத்தவரை ஒரு மாநகராட்சி மன்றத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி, நகர் மன்றத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி, பேரூராட்சிக்கு ஒரு மாற்றுத்திறனாளி என ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஒரு மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக வைத்து குழு அமைக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல், ஊரக உள்ளாட்சிகளை பொறுத்தவரை கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய குழு, மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் ஒரு மாற்றுத்திறனாளியை நியமன உறுப்பினராக நியமிக்கும் வகையில் ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்து சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நகர்புற உள்ளாட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் இரண்டு மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்காலம் முடியும் வகையில் இவர்கள் பதவியில் இருப்பார்கள் என்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் இந்த சட்ட…
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று, செம்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அரசும் திமுகவும் அதன் கொண்டாட்டங்களை முன்னெடுத்துள்ளன. ஒரு தமிழறிஞராகவும், படைப்பாளராகவும், இதழாசிரியராகவும் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் அதிகம். ஆனால், அவரது பிறந்த நாளைச் செம்மொழி நாள் என்று திமுக அரசு அறிவித்த காரணம் என்ன? செம்மொழி வரலாற்றின் செப்பேடுகளில் கருணாநிதி மட்டுமா பங்களித்தார்? மொழி எப்போது செம்மொழி ஆகிறது? ஒரு மொழி நீண்ட வரலாற்றையும், இலக்கியச் செறிவும் கலைப்படைப்புகளில் வளமும் கொண்டிருக்கும்போது அதைச் செம்மொழி என்று அறிவிக்கிறார்கள். உலகில் செம்மொழித் தகுதி வழங்கப்பட்ட 21 மொழிகளில் 11 மட்டுமே இன்று புழக்கத்தில் உள்ளன. இதனால் செம்மொழித் தகுதி என்பது பொதுவாகவே வழக்கொழிந்த மொழிகளுக்குக் கொடுக்கப்பட்ட இறுதி உயர் மரியாதையாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போதும் புழக்கத்தில் உள்ள தமிழ் மொழி, 3000 ஆண்டு கால வரலாற்றையும் செழுமையான இலக்கியத் தரவுகளும், கலைப் படைப்புகளையும் கொண்டிருக்கிறது. இதுவே செம்மொழிகளின் பட்டியலில்…
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வருகிற 4-ந் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் 3-வது முறையாக பாரதிய ஜனதா ஆட்சியில் அமர்ந்தும், 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இதையொட்டி வரும் 4-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளதாம். பாகிஸ்தான் உடனான போருக்குப் பிறகு மத்திய அமைச்சர்கள் அனைவருடனும் பிரதமர் சந்திக்க இருப்பது இதுவே முதல்முறையாகும். அதேபோன்று ஒவ்வொரு அமைச்சரும் தத்தமது துறைசார் தகவல்கள், திட்டப்பணிகள், நிதி ஒதுக்கீடுகள், சட்ட சிக்கல்கள் போன்ற தகவல்களை எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனராம். ஓராண்டில் அறிவித்தது என்ன? முடிவுற்றவை என்ன? கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வரும் பணிகள் என்னென்ன? எதிர்கட்சிகள் எவற்றையெல்லாம் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றனர்?…
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வருகிற 4-ந் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் 3-வது முறையாக பாரதிய ஜனதா ஆட்சியில் அமர்ந்தும், 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இதையொட்டி வரும் 4-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளதாம். பாகிஸ்தான் உடனான போருக்குப் பிறகு மத்திய அமைச்சர்கள் அனைவருடனும் பிரதமர் சந்திக்க இருப்பது இதுவே முதல்முறையாகும். அதேபோன்று ஒவ்வொரு அமைச்சரும் தத்தமது துறைசார் தகவல்கள், திட்டப்பணிகள், நிதி ஒதுக்கீடுகள், சட்ட சிக்கல்கள் போன்ற தகவல்களை எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனராம். ஓராண்டில் அறிவித்தது என்ன? முடிவுற்றவை என்ன? கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வரும் பணிகள் என்னென்ன? எதிர்கட்சிகள் எவற்றையெல்லாம் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றனர்?…
சூர்யவம்சம் படத்தின் கலெக்டர் தேவயானியை அவ்வளவு எளிதில் தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கிட்டத்தட்ட தமிழ் பெண்ணாகவே அடையாளப்படுத்தப்படுபவர் தேவயானி. காதல்கோட்டை, அழகி, பாரதி, ஆனந்தம், ப்ரண்ட்ஸ் என்று சிறந்த திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர். விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து கரம்பிடித்து பலரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கினார். திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட பின்னர் சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கினார். குறிப்பாக கோலங்கள் நெடுந்தொடர், தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் தேவயானிக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. இதுமட்டுமல்லாது குறும்படங்கள் இயக்குவது, பின்னணி குரல் கொடுப்பது என்று சினிமாவோடு எப்போதும் தன்னை அணுக்கமாக வைத்திருப்பவர் தேவயானி. ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோ சரிகம. இதன் சீனியர் பாடகர்களுக்கான ஐந்தாவது சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதில் யாரும் எதிர்பாராதவிதமாக இனியா என்றொரு இளம்பெண் பாரதி படத்தில் இடம்பெற்ற மயில்போல பொண்ணு ஒண்ணு என்ற பாடலை பாடினார்.…
தங்கத்தையும், இந்தியர்களையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு இரண்டற கலந்த ஒன்று. தங்கள் சேமிப்பை தங்கமாக மாற்றும் பழக்கம், தொன்றுதொட்டு இருந்து வருகிறது. உலகின் வேறேந்த நாட்டை விடவும் அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது இந்தியா. அதனால் தான் இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,920 ஆக உள்ளது. ஆனாலும், நகைக்கடைகளில், காய்கறி சந்தையில் உள்ளது போலேவே கூட்டம் அலைமோதுகிறது. கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கு விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதன் விலையில் மாற்றம் ஏதுமில்லாமம் வியாபாரம் நடைபெற்று வந்தது. இன்று வாரத்தின் தொடக்க நாளிலேயே சவரனுக்கு ரூ.240 அதிகரித்தது. பின்னர் பங்குச்சந்தை வர்த்தகம் முடிவுற்ற தருணத்தில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்தது. இதன்படி சவரனுக்கு ரூ.880…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதை தமிழக வெற்றிக் கழகம் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு.. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 வருடங்களுக்குத் தண்டனைக் குறைப்போ மற்றும் வேறு எந்தச் சலுகையுமோ அற்ற ஆயுள் தண்டனையும் ரூ. 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. இந்த வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்து, அவரைக் காப்பாற்ற முயன்றனர். சட்டப் பேரவையிலேயே தமிழ்நாட்டின் முதலமைச்சரே குற்றவாளியின் பெயரைச் சொல்லி அவர் மீதான களங்கத்தைப் போக்க முயன்றார். எதிர்க் கட்சிகள் அதை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டி, நீதிக்கு வழிவகுத்தனர். தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் போராட்டங்களையும் மீறி, தமிழக மக்களைச் சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்கிற இவர்களின் எண்ணம்…