Author: Editor TN Talks
ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் ஒட்டப்பட்ட நோட்டீசை திரும்பப் பெறுவதாகவும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , வி.லட்சுமி நாராயணன் அமர்வு, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,…
சென்னை மாநகர் முழுவதும் மாணவர்கள் ரகளை மற்றும் மோதலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து மொத்தமாக 257 இடங்களில் போலீசார் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணாநகர் பகுதியில் மாணவர்கள் ஒன்று திரண்டு அங்கிருந்து தாங்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதையொட்டி அண்ணா நகர் பகுதி முழுவதும் அதிக அளவில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இதேபோன்று கீழ்ப்பாக்கம்,மெரினா கடற்கரை,நந்தனம் சைதாப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் உத்தரவின் பெயரில் காவலர் ஒருவர் பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் கையில் லத்தியுடன் கண்காணித்து வருகிறார். மாணவர்கள் ஒன்று கூடி மோதலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரெயில் நிலையங்கள் இதேபோன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்…
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வென்றாக வேண்டும் என்பதை இலக்காக வைத்து திமுக யுக்திகளை வகுத்து வருகிறது. அந்த வகையில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தொகுதி வாரியாக 234 தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். தொகுதிக்கு 7 நிர்வாகிகள் என அழைத்து அங்குள்ள கள நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார். தேர்தல் வெற்றிக்கு எத்தகைய வியூகங்களை வைத்துள்ளீர்கள், தொகுதி மக்களிடம் கட்சியை பற்றிய அபிப்ராயம் என்ன? எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு என்ன பதில்கள் என்றெல்லாம் நுணுக்கமாக ஆய்ந்து வருகிறார். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளை 4 நிறங்களாக பிரித்துள்ளாராம் மு.க.ஸ்டாலின். அதாவது சிவப்பு , ஆரஞ்சு , இளம் பச்சை , அடர்பச்சை என நான்கு நிறங்களில் சட்டமன்ற தொகுதிகளை பிரித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தை முன்னெடுக்கிறார். ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. அவை என்னவென்றால், சிவப்பு – கடந்த…
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் முக்கிய பங்காற்றியவர் ஜெயராமன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு பல சிகிச்சைகள் எடுத்தப் போதிலும், கடைசியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 12 ஆண்டுகளாக நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்ரக உற்பத்தியை பெருக்கி வந்தார் நெல் ஜெயராமன். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தப் போது, நடிகர் சிவகார்த்திகேயன், கார்த்தி, சத்யராஜ், சூரி உள்ளிட்ட பலர் அவரை நேரில் சந்தித்தனர். அரசு அவருக்கு என்னதான் உதவிகள் பல செய்தாலும், ஜெயராமன் இறந்தபோது அவரது உடலை ஊருக்கு எடுத்துச் செல்லும் செலவையும், அவரது மகனின் கல்வி செலவையும் சிவகார்த்திகேய ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் செயல் குறித்து ரா.சரவணன் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ”அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன்.…
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்த ‘பாஸ்டேக்’ முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.3000 கட்டணம் செலுத்தினால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் அல்லது 200 பயணங்கள் வரை இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த வருடாந்திர பாஸ் முறை ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் இந்த பாஸ் முறை கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக ரீதியான தனியார் வாகனங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்று மத்திய…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம், வெளியீட்டிற்கு முன்னரே புதிய சாதனை படைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை ரூ.81 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தமிழ் திரைப்படம் ஒன்று, இவ்வளவு பெரிய தொகைக்கு வெளிநாட்டு உரிமைக்கு விற்பனையானது இதுவே முதல்முறையாகும். அனிருத் இசையில், ஆகஸ்ட் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படம், ரசிகர்கள் மற்றும் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் மாஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் இயக்க பாணி ஒன்று சேர்ந்திருப்பதால், “கூலி” படம் சூப்பர் ஹிட் ஆகும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞராக தொழில் செய்து வருகின்றேன்.நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்காக வழக்கறிஞர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. உங்கள் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் தலைவர்கள் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களாக இருந்து வருகின்றனர் மேலும் சங்கம் சார்பாக மேற்கொள்ளப்படும் பெரும்பாலான நீதிமன்ற புறக்கணிப்புகள் சட்டத்திற்கு புறம்பானது. சிலர் நீதிமன்றத்தையும் காவல்துறையையும் மிரட்டும் நோக்கில் இதுபோன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர், வழக்கறிஞர் சிலர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகள் எடுபடும்போது நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு ஆதரவாக பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர் இது போன்று 90 சதவீத நீதிமன்ற புறக்கணிப்புகள் நியாயமற்றவையாகவே உள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் இதுபோன்று சட்டவிரோத பணி புறக்கணிப்புகளுக்கு கடும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது. எனவே இது போன்று நியாயமற்ற கோரிக்கைகளுக்காக சட்டவிரோதமாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடும் சங்க நிர்வாகிகள்…
பழனிசாமிதான் போலி விவசாயி என்றும் காவிரி உரிமையை நிலைநாட்டாதவர் பழனிசாமி என்றும் திமுகவின் நாளேடான முரசொலி விமர்சித்து இருந்தது. மூன்று வேளாண் துரோக சட்டங்களை ஆதரித்தவர் பழனிசாமி என்றும் விவசாயிகள் கடனை ரத்து செய்ய மாட்டேன்” என்று சொல்லி உச்சநீதி மன்றம் வரை போனவர் பழனிசாமி என்றும் கூறியிருந்தது. இத்தகைய அரசியல் ‘களை’ தான் பழனிசாமி. இக்‘களை’, வரும் தேர்தலில் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும் எழுதி இருந்தது. இதனை திமுகவின் ஐடி விங்-கும் தனது இணையதளத்தில் பகிர்ந்து இருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக இணைதளபிரிவின் ராஜ்சத்யன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு.. 2014-ல் 37 எம்.பி.க்களை அஇஅதிமுக-விற்கு அளித்தார்கள் தமிழ்நாட்டு மக்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே முடக்கி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைவதை சாத்தியப்படுத்திய இயக்கம் தான் அதிமுக. . உங்களுக்கும் 2019-ல்…
கோவை அருகே தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து வருபவர் 19 வயது மாணவி. இவர் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது அவரது பின்னால் இளைஞர் ஒருவர் தொடர்ந்து வந்தார். திடீரென அந்த கல்லூரி மாணவியை கட்டிப் பிடித்து அருகில் உள்ள தனிமையான பகுதிக்கு இழுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டதால், அருகில் இருந்த பொதுமக்கள் திரண்டு குற்றவாளியை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுகேந்திர் பாஷா என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பட்டப் பகலில் கல்லூரி மாணவியை கட்டிப்பிடித்து அத்துமீற முயன்ற வடமாநில வாலிபரால் அப்பகுதி மாணவிகள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்க கோரிய மனுவை 8 வாரங்கள் ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது.. மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது . இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் நடுவது மற்றும் நெடுஞ்சாலையின் center median-யில் செடிகள் நட்டு பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து பராமரிப்பு செய்ய வேண்டும், ஆனால் தனியார் நிறுவனம் அதற்கான வசதிகளை செய்யப்படவில்லை. முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தை சுட்டிக்காட்டி தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் கடந்த 2023 ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனம் மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலையை…