Author: Editor TN Talks

தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அரசின் திட்டப்பணிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், இன்று சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார். மாவட்ட கழக செயலாளர் மற்றும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இது குறித்து தெரிவிக்கையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று, மக்களின் குறைகளை கேட்டறிந்து ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் இன்று அவரது சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. மதுரையில் இருந்து கார் மூலம் சிவகங்கை வரும் துணை முதலமைச்சருக்கு, காலை 9:30 மணியளவில் திருப்புவனத்தில் மாவட்ட கழகம் சார்பில், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. தொடர்ந்து, காலை 10 மணியளவில் காணூரில் 40 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் தடுப்பணை திட்டப்பணியை பார்வையிடுகிறார். பின்னர், 10:30 மணியளவில்…

Read More

தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கள்ளிறக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார். இதுவே கள்ளின் நன்மை, தீமை, தேவை உள்ளிட்டவை பற்றிய கேள்விகளைச் சமூக ஊடகங்களில் எழுப்பியிருக்கிறது. கள் உண்மையிலேயே உடலுக்கு நல்லதா? அரசு ஏன் கள் விற்பனைக்கு அனுமதி தர மறுக்கிறது? விரிவாகப் பார்க்கலாம்.  தமிழ்நாடும் கள்ளும்  தமிழ்நாட்டின் வரலாற்றில் கள்ளுக்குத் தனியிடம் உண்டு. புளிப்பு என்ற பொருள் கொண்ட கடுத்தல் என்ற சொல்லிலிருந்துதான் கள் பிறந்தது என வேர்ச்சொல் ஆராய்ச்சி காட்டுகிறது. மன்னர்கள் முதல் மக்கள் வரை அந்நாட்களில் கள்ளுண்டு களித்த செய்திகளைச் சங்கத்தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. பரிசாகவும் படையலாகவும் கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதே வேளையில் கள் உண்பதைக் கொடுஞ்செயலாக அறம் போதிக்கும் நீதி நூல்கள் கூறுகின்றன. வள்ளுவர் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தையே வகுத்திருக்கிறார். பனைக்குத் தாளில் என்ற பெயரும் உண்டு. அதிலிருந்து கிடைக்கும் கள், தாளி என்று அழைக்கப்படுகிறது. அதுவே தாரி – தாடி எனத் திரிந்து…

Read More

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில், “இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழர் எனும் அடையாளம் கொண்டு மக்களை திமுக ஒன்றிணைத்ததா? இல்லையா?” என்ற ரீதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 தேர்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தாயுமானவர் என குறிப்பிட்டு கேள்வி வெளியிட்டு சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டுமொரு முறை ஆளுங்கட்சியான திமுக தொடர்பான கேள்வி கேட்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. தொல் பெருமைமிக்க தமிழக வரலாறும், பெருந்தலைவர் காமராசர் அவர்களைப் போன்ற பெரும் அரசியல் தலைவர்கள் முன்னெடுத்த நல்ல திட்டங்களும் பாடத்திட்டத்தில் இருக்கையில், தேர்வர்களின் அறிவை சோதிப்பதற்கு ஆளுங்கட்சியை போற்றும் விதமாக கேள்வியை வடிவமைப்பது தான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சிறப்பம்சமா?. தமிழக அரசின் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர் போன்ற…

Read More

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 27 பேரையும் ஜூன் 30 ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆண்டு ஜூலை 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு, உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் ஏற்கனவே வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது, நாகேந்திரன், அசுவத்தாமன் உள்ளிட்ட 27 பேர் சிறையில் இருந்தவாறு காணொலி மூலம் ஆஜராகி இருந்தனர். இதனிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர்…

Read More

அடுத்த மே தினத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை இழந்து நிற்பார்! என்று அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. உட்கட்சி பிரச்னை, கூட்டணிப் பூசல், கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்.ஜி.ஆர் மாளிகையிலும் கமலாலயத்திலும் தைலாபுரத்திலும் இருந்துதான் நாள் தவறாமல் வருகிறது. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத பொம்மைதான் பழனிசாமி.! ’’எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமியின் நினைப்பு பெட்டியில்தான் உள்ளது. செய்திகளைப் பார்க்காமல், படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமான அரசியலைச் செய்து வருகிறார் பழனிசாமி. உட்கட்சி பிரச்னை, கூட்டணி பிரச்னையை மறைக்க அறிக்கை அரசியல் செய்து வருகிறார்” என்று தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த பதிலடி பழனிசாமியின் நெஞ்சாங் கூட்டை கிழித்துவிட்டது போல! ‘நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்’ என எக்ஸ் பக்கத்தில் வந்து ஒப்பாரி வைத்திருக்கிறார். எங்கள் முதலமைச்சர் சுட்டிக் காட்டியது…

Read More

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர். இந்த நிலையில், தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என கூறி, முன் ஜாமீன் கோரி, ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன்…

Read More

திருச்செந்தூ ரை சேர்ந்த ஆர்.சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் என்பவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 7-7-2025 அன்று காலை 06.15 மணி முதல் காலை 06.50 மணி வரை என நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை விட நல்ல முகூர்த்த நேரம் உள்ளது. இதற்கு பதிலாக, 7-7-2025 மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தோஷங்கள் இல்லாத கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். அதுவரை கும்பாபிஷேக அழைப்பிதழ்களை வழங்குவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு வழங்க வேண்டும் என என சீராய்வு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு மற்றும் கோவில் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், இதே போன்று கோரிக்கையுடன் உச்சநீமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது இந்த மனு ஆடம்பரமான மனு என நீதிபதி கருத்து…

Read More

தஞ்சையைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கொரோனா நோய் தொற்று காலத்தில் கோவிட் பெட்டகம் அரசு பள்ளிகளுக்கு என கொள்முதல் செய்யப்பட்டது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடமிருந்து மட்டுமே கோவிட் பெட்டகத்தை வாங்க வேண்டும் போன்ற ஏராளமான விதிகள் வகுக்கப்பட்டன. இந்நிலையில் தஞ்சையில் உள்ள பள்ளிகளுக்காக தஞ்சையின் முதன்மை கல்வி அலுவலர் மூலமாக தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. அதே அளவு பொருட்களை வேறு சந்தைகளில் குறைவான விலைக்கு வாங்கலாம். அவற்றை விட 75% அதிகமாக விலை கொடுத்து கோவிட் பெட்டகம் வாங்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு மிகப்பெரும் வருவாய் இழப்பு. கோவிட் பெட்டகம் கொள்முதல் செய்வதில் நடைபெற்ற மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்கக்கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கோவிட் பெட்டகம் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்றுள்ள மோசடி தொடர்பாக விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்பு துறையின்…

Read More

சென்னையில் காதல் விவகாரதிதில் இளைஞர் கடத்தல் வழக்கில், புரட்சி பாரதம் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் ஏடிஜிபி-யை கைது செய்ய நீதிபதி அதிரடி உத்தரவிட்டார். வழக்குப் பதிவு : திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் இன்ஸ்டாவில் பழக்கமான தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், கூலிப் படையை ஏவி, கடந்த 6-ம் தேதி தனுஷின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு, அங்கிருந்த தனுஷின் சகோதரனையும் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து இளைஞரை வீட்டில் விட்டுள்ளனர் கூலிப் படையினர். இது தொடர்பாக தனுஷின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக இருந்ததாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும்,…

Read More

இந்தியாவை இந்து தேசம் என அறிவிப்பதே அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு எனவும், 140 கோடி இந்திய மக்களின் உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்.கிருஷ்ணசாமி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய அரசியல் சாசனம் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய பொக்கிஷம். 200 ஆண்டுகால ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்வதே அன்று சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் பிரதான லட்சியமாக இருந்ததுள்ளது. அதனால் தான் “வெள்ளையனே வெளியேறு” என்பது அவர்களின் முக்கிய கோசமாக இருந்தது. சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு, இந்தியாவை எப்படிப்பட்ட சமூகமாக உருவாக்க வேண்டும் என்பதில் போராட்டத்தை  முன்னெடுத்தவர்களில் சுபாஷ் சந்திர போஸ் போன்ற ஒரு சிலரைத் தவிர, எவருக்கும் பரந்துபட்ட சிந்தனை இல்லை. அரசியல் சாசனத்தில் காஷ்மீரைத் தவிர, இந்தியாவில் எவரும் சொத்து வாங்கலாம் என்ற சரத்தும் இருந்ததுள்ளது; ஆனால் அனைவரும் சொத்து வாங்குவதற்கான…

Read More