Author: Editor TN Talks

நடிகர் விஜய்க்கு ரூ.500கோடி கொடுத்து திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதாக அதிமுக எம்.எல்.ஏ கருப்பணன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் அருகே செங்கப்பள்ளியில், ஊத்துக்குளி அதிமுக ஒன்றிய பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்களிடையே பேசிய பவானி அதிமுக எம்எல்ஏ கருப்பணன், ”எடப்பாடி பழனிசாமி தலைமையில் அருமையான கூட்டணி அமைந்துள்ளது எனவும், எனவே நாம்தான் 200 தொகுதிகளில் ஜெயிக்க போகிறோம். கடந்த தேர்தலில் இருகட்சியும் தனித்தனியே பிரிந்து நின்றதால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தது என்றார். மேலும் கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வரவுள்ளதாகவும், மேலும் இப்போது கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு ரூ.500 கோடி கொடுத்து திமுக கூட்டணிக்கு அழைக்கின்றனர். ஆனால் அவர் வாங்கமாட்டார். அப்படி வாங்கினால் அவர் அரசியல் அத்துடன் முடிந்துவிடும்” என்றார்.…

Read More

தமிழ் சினிமாவில் ஃபீல் குட் படமாக சமீபத்தில் வருவது என்பது மிகவும் அரிதாக உள்ளது. சிறிய பட்ஜெட்டில் அதிக லாபம் எடுத்த படங்கள் வரிசையில் இணைந்திருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. கடந்த மே 1-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். இலங்கையிலிருந்து கடல் மூலமாக தமிழ்நாடு வந்தவர்கள் எப்படி அவர்களை இங்கு தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. குடும்ப கதைக்களத்தில் வெளியான இப்படம் ரூ.75கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. இப்படத்தின் வெளியான சூர்யாவின் ரெட்ரோ படத்தையே பின் தள்ளியது டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜமௌலி, நானி, கிச்சா சுதீப் என பலரும் இப்படத்தை பாராட்டினர். அந்த வகையில் நடிகர்…

Read More

வீடுபுகுந்து இளைஞரை கடத்திய வழக்கில் தொடர்புடையதாக எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி மீது புகார் எழுந்த நிலையில், முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியை சேர்ந்த பெண்ணை சமூக வலைதளம் மூலம் பேசி பழகி, காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், கூலிப்படையை ஏவி இளைஞரின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். அத்தோடு வீட்டில் இருந்த இளைஞரின் சகோதரனையும் அந்த கும்பல் கடத்தி சென்று, சிறிது நேரம் கழித்து வீட்டிலேயே விட்டு சென்றுள்ளது. இந்த சம்பவத்தில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கும் தொடர்புடையதாக புகார் எழுந்தது. அவர் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்ணின் பெண்ணின் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பூந்தமல்லியில் உள்ள பூவை…

Read More

கடந்த 12-ம் தேதி நாட்டை மட்டுமில்லாது உலகையே உலுக்கியது ஒரு விமான விபத்து. ஆமதபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில் 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட போயிங் 787-8 டிரீம் லைனர் விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பிய சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது. மருத்துவக்கல்லூரி விடுதியில் விமானம் விழுந்து வெடித்ததில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் இருந்த 241 பேர், மருத்துவ மாணவர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ளவர்கள் என மொத்தம் 274 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த இந்திய நபர் ஒவர் உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1கோடி நிவாரணம் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. விமானம் வெடித்த விபத்தில் பலர் உடல் கருகி…

Read More

பாமகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தந்தை, மகனுக்கு இடையிலான கருத்து மோதலால், கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து வருகிறார். எனது உயிர்மூச்சு இருக்கும் வரை நான் தான் கட்சியின் தலைவர் என சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ் கூறியிருந்தார். புதிய நிர்வாகிகளுடன் தைலாபுரத்தில் ஆலோசனை மேற்கொண்ட ராமதாஸ், பாமகவின் பொதுச்செயலாளராக இருந்த வடிவேலு ராவணனை நீக்கி, புதிதாக முரளி சங்கர் என்பவரை நியமித்தார். இந்த நிலையில், திருவள்ளூர் மணவாள நகரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா, மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, திருவள்ளூரில் முப்போகம் விளையும் 1,200 ஏக்கர் நிலத்தை பறித்து அமெரிக்க நிறுவனத்திற்கு தாரைவார்க்க திமுக அரசு துடிக்கிறது. ஏன் அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு தரிசு நிலம்…

Read More

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடியும் முன்னரே மழை பெய்யத் தொடங்கியது. கேரளாவில் பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதால், தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று(25.06.2025) நீலகிரியில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேப் பொல கோவையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை(16.06.2025) தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 17 ஆம் தேதி நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More

தடையை மீறி தூத்துக்குடியில் பனைமரம் ஏறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள் விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார். விவசாயிகள் நலன் கருதியும், மரம் ஏறும் தொழிலாளர்கள் நலன் காக்கவும், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தற்கு தமிழ்நாடு மட்டுமின்றி மத்தியிலும் எந்தவொரு கட்சிகளும் ஆதரவு தரவில்லை. தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குரல் கொடுத்து வருகிறார். கள் இறக்க அனுமதி வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (15.06.2025) தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை அருகே போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து சீமான், பனைமரம் ஏறி கள் இறக்கினார். இந்த போராட்டத்தில்…

Read More

தமிழ் மட்டுமின்றி இந்திய திரையுலகில் பாலியல் ரீதியான பிரச்னைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனை வெளியில் சொல்பவர்கள் மிக மிக குறைவு. அவ்வாறு சொன்னால் அவர்களுகான வாய்ப்புகள் குறையும். அப்படி ஒதுக்கப்பட்டவர் தான் பாடகி சின்மயி. முறைப்படி கர்நாடக சங்கீதம் படித்தவர், சிறுவயது முதலே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடியுள்ளார். தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் சின்மயி. இந்தப் பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார். தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் பாடல்களை பாடியதோடு, பல ஹீரோயின்களுக்கு பின்னணி குரலும் கொடுத்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டு சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் புகாரை தொடர்ந்து வைரமுத்துவுக்கு வாய்ப்புகள் குறையத்தொடங்கியது. அதேப் போல சின்மயிகும் அடுத்தடுத்து…

Read More

பாமகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அன்புமணி கூற, முடியவே முடியாது என ராமதாஸ் கூற இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. இதற்கிடையே ராமதாஸ் மகன்வழி பேரனான முகுந்தனுக்கு பதவி கொடுப்பதில், அன்புமணிக்கு உடன்பாடு இல்லை. பாமகவின் பொதுக்குழுவின் போதே இருவரும் மேடையிலேயே ஒருவருக்கொருவர் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இது நான் ஆரம்பித்த கட்சி: நான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் : உடன்பாடு இல்லை என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளுங்கள் என பகிரங்கமாக அறிவித்தார். அதே மேடையில் பனையூரில் தனியாக அலுவலகம் திறந்திருப்பதாக அறிவித்தார் அன்புமணி. இந்த மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்க, அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கினார் ராமதாஸ். சட்டமன்ற தேர்தல் வரை நான் தலைவராக இருப்பேன்: அதன்பிறகு வேண்டுமானால் அன்புமணி தலைவராக இருக்கட்டும் எனக்…

Read More

பாமகவில் தந்தை, மகன் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே மாறுபட்ட கருத்து எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், ”கடைசி உயிர்மூச்சு இருக்கும் வரை நான் தான் கட்சியின் தலைவராக இருப்பேன்” என அதிரடியாக அறிவித்தார். அத்தோடு அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்தது மட்டுமின்றி நேற்று (14.06.2025) ரகசிய ஆலோசனையும் நடத்தினார். நேற்று முன்தினம் (13.06.2025) தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ”பெற்றொர் உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் அவர்களை கொண்டாட வேண்டும். தந்தை, தாயை மதிக்க வேண்டும் என சொன்னாலே அன்புமணிக்கு கோபம் வருகிறது, தந்தை, தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அன்புமணி மைக்கை தூக்கி அடிக்கிறார். பாட்டிலை எடுத்து தாயை அடிக்கிறார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனக் கூறினால் அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார்” என்று…

Read More