Author: Editor TN Talks

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ரவுடி ஒருவனால் பூட்டுப்போடப்பட்ட சத்திரப்பட்டி காவல் நிலையத்தை பார்வையிட சென்ற சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி உதயகுமார் உட்பட நூற்றுக்கணக்கான பேர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி, டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் சிலர் காவல்நிலையத்திற்குள் புகுந்து காவல்நிலையத்திலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி அங்கு இரவு பணியில் இருந்த தலைமைகாவலர் பால்பாண்டியை தாக்கிவிட்டு, பூட்டு போட்டு விட்டு தப்பியோடி விட்டனர். சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களையும், காவல் நிலையத்தையும் நேரில் சந்திக்க வந்தபோது கல்லுப்பட்டி அருகே உள்ள முத்துலிங்கபுரத்தில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சத்திரப்பட்டிக்கு செல்ல அனுமதி மறுத்தனர். Madurai தொகுதிக்குள் நுழைய அனுமதி கேட்கனுமா?என்னை தடுப்பீர்களா?… போலீசிடம் சீறிய…

Read More

பாமகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே கூட்டணி வைப்பதிலும், நிர்வாகிகளை நியமிப்பதிலும் ஏற்பட்ட மனக்கசப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இது நான் ஆரம்பித்த கட்சி நான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்றக் கொள்கையில் ராமதாஸ் இருந்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி மறுபுறம் பல முடிவுகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாகிகள் பலர் டாக்டர் ராமதாஸை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதேப் போல அன்புமணி புதிதாக பனையூரில் ஆரம்பித்துள்ள அலுவலகத்திலும் நாள்தோறும் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. அன்புமணிக்கு ஆதரவாக இருக்கும் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் பலரை நீக்கிவிட்டு டாக்டர் ராமதாஸ் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். பழையை நிர்வாகிகள் அவரவர் பதிவியிலேயே நீடிப்பார்கள் என அன்புமணி மறுபுறம் கூறி வருகிறார். இதற்கிடையில் நேற்று முன்தினம்(12.06.2025) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், 2026-ம் ஆண்டு…

Read More

நடிகர் சங்க உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே இனி சினிமாவில் நடிக்க முடியும் என நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் அறிவித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்குவது போல, நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே திரைப்படங்களில் நடிப்பதற்கான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் திரைப்படங்களில் கேமரா முன்நின்று நடிக்கும் நடிகர்-நடிகைகள், துணை நடிகர்-நடிகைகள் அனைவருமே நடிகர் சங்க உறுப்பினர் அட்டை பெற்றவராகத்தான் இருக்கவேண்டும். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொழில்முறை ஆயுள் உறுப்பினராக சேருவதற்கு சேர்க்கை கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள உறுப்பினர்களின் மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவிகளுக்கும், ஈமச்சடங்குக்கும் செலவிடப்பட்டு வருகிறது. இதுவரை சங்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் நடித்து கொண்டிருப்பவர்களிடம் அதன் பயனை எடுத்துரைத்து, வருகிற 20-ந் தேதிக்குள் உறுப்பினர்…

Read More

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிவாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை நேரில் அழைத்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் பரிசு வழங்கி பாராட்டி வருகிறார். முதல்கட்டமாக கடந்த 30-ந் தேதியும், கடந்த 4-ந் தேதி இரண்டாம் கட்டமாகவும், மூன்றாவது கட்டமாக நேற்றும் இந்த விழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை அழைத்து பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டு மதிய உணவு விருந்தளித்து பாராட்டினார். இதன் நான்காம் கட்ட விருது விழா, நாளை (15/6/25) அன்று மாமல்லபுரத்தில் ஷெரட்டன் ஓட்டலில் நடைபெற உள்ளது. இதில் சேலம், திருவண்ணாமலை, சென்னை, மதுரை, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 39 சட்டமன்ற தொகுதிகளில் படித்து முதலிடம் பிடித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். இதுவே இந்த ஆண்டுக்கான நான்காவது மற்றும் கடைசி கட்ட விருது விழா…

Read More

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு ஆசிய நாடுகளான ஈரானும், இஸ்ரேலும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்த, பதிலுக்கு காசா மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதல், பிறகு போராக மாறி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லாக்கள் பெரும் சேதத்தை சந்தித்ததால், ஆத்திரமடைந்த ஈரான், ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இந்த இரு நாடுகளுக்கும் ஆதராவகவும், எதிராகவும் பல நாடுகள் தங்கள் முன்னெடுப்புகளை எடுக்க, அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தது. அத்தோடு அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், 6-வது சுற்று பேச்சுவார்த்தை நாளை (15.06.2025) ஓமனில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே அணுஆயுத பலம் பொருந்திய ஈரானின் அணு ஆயுதபடுகொலைக்கு ஒருபோதும் ஆளாகக் கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் முடிவெடுத்துள்ளார். மேலும்…

Read More

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம். கேரள மாநிலம் இடுக்கி வண்டிப் பெரியாறு அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலத்த காயமடைந்தார்.பனிமூட்டத்தால் யானை அருகில் இருந்து தெரியவில்லை என கூறப்படுகிறது. தமிழக -கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு அருகே மவுண்ட் எஸ்டேட்டை சேர்ந்தவர் 62 வயது நிரம்பிய அந்தோணி. கூலித் தொழிலாளியான அந்தோணி, காப்பி தோட்டத்தில் களை எடுத்துக் கொண்டிருந்த போது, புதருக்குள் இருந்த காட்டு யானை துதிக்கையால் தாக்கியது. இதில், தலை, மார்பு பகுதி, கால் ஆகியவற்றில் பலத்த காயமடைந்த அவர், வண்டிப்பெரியாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதும், அந்தோணி மேல் சிசிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பனி மூட்டத்தால் யானை புதருக்குள் இருந்தது தெரியவில்லை என கூறப்படுகிறது. குறித்து வண்டிப் பெரியாறு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Read More

மலையாளத்தின் “மிதுனம்” மாதம் மற்றும் தமிழின் “ஆனி” மாதங்களின் மாதாந்திர பூஜைக்காக இன்று (ஜூன் 14ம் தேதி) , பிரசித்தி பெற்ற சபரிமலை நடை திறக்கப்படுகிறது. ஜூன் 19ஆம் தேதி வரை மாதாந்திர பூஜைகள் நடக்கும். இன்று (14.06.25) மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு , கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து யோக நித்திரையில் இருக்கும் ஐயப்பனுக்கு தீபம் காட்டி கற்பூர ஆழியில் தீபம் ஏற்றுகிறார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். நாளை ஜூன் 15ம் தேதி முதல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10.30 மணி வரை, நிர்மால்ய பூஜை, கணபதி ஹோமம், களபாபிஷேகம், படி பூஜைகள் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கின்றன. மாதாந்திர பூஜைகளுக்குப் பின் ஜூன் 19ம் தேதி இரவு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். பக்தர்கள், தரிசனத்திற்கு sabarimalaonline.org.in முன்பதிவு செய்யலாம்…

Read More

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயை, ஜாக்டோ – ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினர். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயை, ஜாக்டோ – ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் (நிறுவனத் தலைவர், தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்க் கழகம்) தலைமையிலான நிர்வாகிகள் நேற்று(13.06.2025) மாலை சந்தித்துப் பேசினர். அந்தச் சந்திப்பில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைச் செயல்படுத்தாமல், கடந்த நான்காண்டுகளாகத் திமுக அரசு ஏமாற்றி வருவதைக் கண்டித்தும் அதை உடனடியாகச் செயல்படுத்தத் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வரும் ஜாக்டோ – ஜியோ அமைப்பினருக்குத் தமது முழு ஆதரவை அளிப்பதாக விஜய் தெரிவித்தார்.

Read More

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது. அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனின் காட்விக் நகரை நோக்கி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், மேகானி என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் உணவு விடுதியில் மோதி பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பிழம்புடன் பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2 விமானிகள், 10 பணியாளர்கள், 169 இந்தியர்கள் 52 இங்கிலாந்து நாட்டவர், 7 போர்ச்சுகல் நாட்டினர், கனடாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 241 பேர் விபத்தில் உடல்கருகி உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் மட்டும் உயிர்தப்பினார். இதேபோன்று உணவு விடுதி மற்றும் குடியிருப்புகளைச்…

Read More

தமிழ்நாட்டில் உள்ள 100 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 252 புதிய படிப்புகள் நடப்பாண்டில் தொடங்கப்படவுள்ள நிலையில், அந்தப் படிப்புகளை நடத்துவதற்காக 252 கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் நியமித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுவாக கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்படும் துறைகளில் முதல்கட்டமாக 3 ஆசிரியர்களாவது நியமிக்கப்பட வேண்டும் என்ற குறைந்தபட்சத் தேவையைக் கூட நிறைவேற்ற தமிழக அரசு மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 57 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 203 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு, அப்படிப்புகளில் 10,396 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 43 கல்லூரிகளில் 49 புதிய பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் 2,950 மாணவர் சேர்க்கை இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 100 கல்லூரிகளில் 252 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு, அவற்றில் 13,…

Read More